திங்கள், 10 ஏப்ரல், 2017


உலக நாகரிகங்களில் தமிழனின் தடம்



வருடம் கி.மு. 3000 அதாவது இன்றிலிருந்து மிகச் சரியாக 5000 வருடங்களுக்கு முன்பு, அரேபிய (Arab) நாட்டை தெற்கு வடக்காக கடந்து Persian Gulf-யை அடைந்து பிறகு Euphrates நதிக்கரையில் அமைந்திருக்கும் அந்த புகழ்பெற்ற நகரத்தை நோக்கி ஒரு வணிக கூட்டம் போய்கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே போகிறார்கள். என்ன ஆச்சரியம் அவர்கள் பேசுவது தமிழ் மொழி, ஆம் அவர்கள் தமிழில
் தான் பேசிக்கொள்கிறார்கள். அவர்களை நாம் இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பார்க்கலாம் வாருங்கள். அடக் கடவுளே அவர்கள் தமிழ் வணிகர்கள். தமிழக வணிகர்களுக்கு இங்கு என்ன வேலை? இந்து மா கடலையும், அரேபியாவின் பாலைவனங்களையும் கடந்து இவர்கள் எங்கே போய்கொண்டிருக்கிறார்கள்?
ஊர் (Ur), அந்த தமிழ் வணிகர்கள் போய்கொண்டிருப்பது இந்த நகரத்தை நோக்கித்தான். அவர்களில் சிலர் ஊர்க் (Urk) என்கிற நகரத்தை நோக்கி பிறகு செல்வார்கள். இந்த ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் எங்கே இருக்கின்றன என்று நீங்கள் புருவம் உயர்த்தினால் இதை படியுங்கள். இந்த இரண்டு நகரங்களும் Mesopotamia நாகரீகம் செழித்து வளர்ந்த Sumeria-யாவில் இருக்கின்றன. Euphrates மற்றும் Tigris நதிகள் ஓடும் இன்றைய Iran, Iraq பகுதிகளைத்தான் 5000 வருடங்களுக்கு முன்பு சுமேரியா (Sumeria) என்று அழைத்தார்கள். மனித நாகரீகத்தின் தொட்டில் என்று சுமேரிய நாகரீகத்தை வரலாற்று அறிஞர்கள் அழைக்கிறார்கள்.
ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் இரண்டும் சுமேரிய நாகரீகத்தின் முதல் பெருநகரங்கள். இன்றைய Metropolitan City-களுக்கு ஒப்பானவை. அக்கேடிய அரசு, ஊர் நகரத்திலிருந்தே தொடங்கியது. இங்கிருந்து அரசாண்ட அனைத்து சுமேரிய அரசர்களும் தங்களின் பெயர்களுக்கு முன்னால் இந்த ஊர் என்கிற வார்த்தையை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். பிரமிடுகள் (Pyramid) போன்ற அமைப்புடைய மிக பிரம்மாண்டமான சிகுராத்கள் (Ziggurat) இந்த நகரங்களில் இருந்தது. சிகுராத் என்பது சுமேரியர்களின் வழிபடும் இடம். ‘ஊர்’ மற்றும் ‘ஊர்க்’ என்கிற இந்த வார்த்தைகள் தமிழ் மொழியில் இருந்து பெறப்பட்டதாக நடுநிலை வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.
இப்படி அறிஞர்கள் கருதுவதற்கு காரணம் இந்த இரண்டு நகரங்களிலும் இருந்த தமிழர்களின் செல்வாக்கு. இன்றையிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஊர்’ மற்றும் ‘ஊர்க்’ நகரங்கள் தமிழ் வணிகர்களின் குடியேற்ற நகரங்களாக இருந்திருக்கின்றன. பொதுவாக தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதியை ‘ஊர்’ என்று அழைப்பது வழக்கம். எந்தவித சிறப்பு பெயரும் இல்லாம் ‘ஊர்’ என்கிற ஒற்றை சொல்லே ஒரு நகர்புறத்தை குறிக்கும். ‘நான் ஊருக்கு போனேன்’, ‘அந்த ஊரு ரொம்ப தூரம்’ போன்ற சொல் வழக்குளில் ஒரு இடத்தின் பெயர் குறிக்கப்படவில்லை என்றாலும் ஊர் என்கிற ஒற்றை சொல்லே நாம் பேசும் நகரத்தை குறிப்பிட்டுவிடுகின்றது. தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த காரணத்தாலும் அவர்கள் வாழும் பகுதி ஊர் என்று அழைக்கப்படுகின்ற காரணத்தாலும் சுமேரியாவின் Euphrates நதிக்கரையிலிருந்த இந்த நகரங்கள் ‘ஊர்’ என்றும் ‘ஊர்க்’ என்றும் காரணப் பெயராக அழைக்கப்பட்டிருக்கிறது. ஊர்க் என்பது ஊர் என்ற சொல்லின் மருவிய வடிவம்.
தமிழர்களின் செல்வாக்கால் பெயர் பெற்ற ‘ஊர்’ நகரம் விவிலியத்திலும், மனித நாகரீகத்தின் முதல் நாவல் என்று அழைக்கப்படும் கில்காமேசிலும் (Gilgamesh) குறிக்கப்பட்டிருக்கிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு, சுமேரியாவின் எந்த பகுதிக்கு சென்றும் நான் தமிழன் என்று ஒருவர் சொன்னால் உடனே அடையாளம் கண்டுகொள்ளப்படுவார். அதாவது இன்று ஒரு அமெரிக்கர் உலகின் எந்த இடத்திலும் அடையாளம் கண்டுகொள்ளப்படுவதுபோல். இன்றைக்கு தமிழன் தமிழ்நாட்டிலேயே தன்னை தமிழன் என்று சொல்லிக்கொள்ள முடிவதில்லை. இனவெறியன், பிரிவினைவாதி என்று ஆபாசமாக முத்திரைக்குத்தப்படுகிறான். ஈழத்தில் தன் தாய் மண்ணில் இனப்படுகொலைக்கு ஆளாகிறான்.
தமிழகத்தில் கிடைத்த உபரி உற்பத்தியை தமிழர்கள் சுமேரிய நாகரீகத்துடன் வணிகம் செய்திருக்கிறார்கள். சுமேரிய உபரி உற்பத்தியை தமிழகம் கொண்டுவந்திருக்கிறார்கள். தமிழகத்தில் கிடைக்கும் ஆடம்பர பொருட்களை சுமேரிய அரசர்கள் தாங்கள் இறந்தும் தங்களுடைய கல்லறைகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். சுமேரியாவிற்கு வணிகத்திற்கு சென்ற தமிழன் சுமேரியாவின் நகர நாகரீக வளர்ச்சிக்கும் உதவி செய்திருக்கிறான். சுமேரியா மற்றும் எகிப்திற்கான கடல் வணிக பாதையை உருவாக்கியது தமிழன் என்றால் அது மிகையாகாது.
சுமேரியாவின் வரலாற்றை எழுதும் எவரும் தமிழர்களின் தொடர்புகளை புரக்கணித்துவிடமுடியாது. ஆனால் ஏனோ நம்முடைய வரலாற்று நூல்கள் தமிழர்களின் இத்தகைய சிறப்புகளை இருட்டடிப்பு செய்கின்றன. இந்திய வரலாற்று அறிஞர்களில் பலர் அகண்ட பாரதத்தை கட்டி எழுப்பும் வரலாற்று புணுகு மூட்டைகளையே ஓட்டுமொத்த இந்திய வரலாறாக அவிழ்த்துவிட துடிக்கிறார்கள். ஆரியவர்தமானமே இந்தியாவின் மானம் என்று கைகூசாமல் எழுதி குவிக்கிறார்கள். எகிப்து, சுமேரிய நாகரீகங்களுடனான தமிழர்களின் தொடர்புகளைப் பற்றியும், சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது என்பதைப் பற்றியும் எழுத துணிச்சல் அற்ற இந்திய பாட நூல் கழகம், தமிழர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது.
இன்றையிலிருந்து 6000 வருடங்களுக்கு முன்பு மூன்றே மூன்று நாகரீகங்கள்தான் நாகரீக கலாச்சாரத்தை முன்னெடுத்து இருக்கின்றன. ஒன்று எகிப்தியர்களுடையது, அடுத்தது சுமேரியர்களுடையது மற்றது தமிழர்களுடையது. சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது என்கிற காரணத்தால் அது தனியாக இங்கே குறிப்பிடபடவில்லை. உலக வரலாற்று அறிஞர்கள் தமிழர்களின் தொடர்புகளை வெளிகொண்டுவந்து புண்ணியம் தேடிக்கொள்கிறார்கள். இல்லையென்றால் தமிழன் வரும் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் தூங்கிக்கொண்டேதான் இருப்பான்.


தமிழர் நாகரீகமே : சுமேரிய நாகரீகம்



மேரு மலை

கடல், மலை, யானை, தொடர்வண்டி: எவரையும் சிறு பிள்ளைகளாக மாற்றச்செய்து விடும் விசயங்கள்.
அதிலும் இந்த மலை குறிப்பாக மேரு மலை, படிக்கப்படிக்க ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் தூண்டிய மலை. காண்பதற்கு மட்டுமல்ல கற்பதற்கும். இம்மலை பல வரலாறுகளை தன்னுள்ளே கொண்டிருக்கிறது.இந்த மேரு மலை என்பது நம்ம இமய மலைதான்.
உலக நாகரீகங்கள் பல இந்த மேரு மலையோடு தொடர்புடையதே.

சிந்து நாகரீகம், சுமேரிய நாகரீகம், சீன மஞ்சளாற்று நாகரீகம், தென்கிழக்காசிய அங்கோர்வாட் நாகரீகம், பாபிலோனிய, மெசோபேடாமியா நாகரீகம், ஏன் அமெரிக்க மாயன் நாகரீகம் என அனைத்திலும் தொடர்புடையது இந்த மலை. மேரு என்றால் மேடான பகுதி, மலை என்று பொருள். காண்க: வளவு 
இந்த மலையிலிருந்துதான் ஆசியக்கண்டத்தின் பெரும்பாலான ஆறுகள் உற்பத்தியாகின்றன. பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேசம், மியான்மர், தாய்லாந்து,  கம்போடியா, லாவோஸ், வியட்நாம், சீனா என எல்லா நாட்டுக்கும் சோறு போடுவது இந்த மலைதான்.
ஆதலால், உலகின் தொப்பூழ்க்கொடி என்று அழைக்கப்படும் இந்த மலை (Himalaya: Michael Palin),
தமிழர்களின் வாழ்க்கையோடும்  பின்னிப்பிணைந்தது. 

சிலப்பதிகாரப்பாடல் :
    
1) இடைநின் றோங்கிய நெடுநிலை பௌவமும் மேருவில்

2) பஃறுளி ஆற்றுடன் பன்மலையடுக்கத்து குமரிக்     கோடும் கொடுங்கடல் கொள்ள

மணிமேகலைப்பாடல் :  


1) சூழ்கடல் வளை இய வாழ்யங் குன்றத்து நடுவு நின்ற மேருக் குன்றமும்
 

2) மேருக் குன்றத்து தூரு நீர்ச் சரவண

போன்றப் பாடல்கள் மேரு என்பது உயரமான மலைகள் என்ற பொதுப்பெயராலாயே அழைக்கப்பட்டுள்ளன.


இதில் உள்ள எவரெஸ்ட் என்று அழைக்கப்படும் சிகரம் கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 9 கி.மீ (8848 மீட்டர்) உயரம் உள்ளது. இந்தப் பூவுலகின் உச்சபட்ச உயரமான இடம் இதுதான். 
  
எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான பெயர் சாகர்மாதா அ கடல்மாதாதான்.


 நேப்பாளியர்கள் இன்னமும் சாகர் மாதா என்று தான் அழைக்கின்றனர்.



காண்க: விக்கிப்பீடியா 


இராதானாத் சிக்தார் (1813-1870) என்னும் வங்காளத்து இந்தியரே முதன் முதலாக 1852 ஆம் ஆண்டில் இதன் உயரம் சுமார் 8,848 மீட்டர் என்று கண்டுபிடித்தார். அவர் சுமார் 240 கி.மீ. தொலைவில் இருந்து கொண்டேதியோடலைட்டு என்னும் கருவியினால் முக்கோண முறையின் அடிப்படையில் இதன் உயரத்தைக் கணித்தார். இச்சிகரத்தை முறைப்படி அளவிடும் முன் இதனை கொடுமுடி-15 என்றுமட்டும்தான் குறித்து வைத்திருந்தார்கள். பின்னர் நில அளவை அணியின் தலைவராக இருந்த சியார்ச் எவரெசுட்டு (George Everest) என்பாரின் பெயரை இக்கொடுமுடிக்கு ஆங்கிலேயர் ஆண்ட்ரூ வாகு (Andrew Waugh)என்பார் சூட்டினார். பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்த ஒரு தமிழ்ப்பெயர் வெறும் 150 ஆண்டுகளுக்குமுன் ஒரு ஆங்கிலேயனால் மாற்றப்பட்டிருக்கிறது. என்னவொரு கொடுமை. 
இதைப்போலவே  தஞ்சையில் கட்டப்பட்ட பெரியகோவில், உயரத்தின் காரணமாக தென்திசை மேரு, தக்ஷிண மேரு (தக்ஷிண, தெக்கண, தெற்கத்திய )என்று அழைக்கப்படுகிறது. கி.பி 1000 இல் இந்தக்கோவில் கட்டப்பட்டபோது உலகில் பிரமிடுக்கு அடுத்து மிக உயரமான கட்டடமாக இது இருந்தது.

இப்போது ஒரு முக்கியமான செய்திக்கு வருவோம். மேருவை ஒட்டியே தொல் நாகரீகங்கள் அமைந்ததால் இந்த மேரு மலையின் இருபக்க முனையில் அமைந்த நாகரீகங்களின் பெயர்கள் இந்த மலையின் பெயரைத் தாங்கியே வந்தது.
ஒன்று சுமேரிய (சு-மேரு) நாகரீகம் இன்னொன்று குமேரிய (கு-மேரு) நாகரீகம்.
காண்க: (The Su Meru and ku-Meru, are said to be the poles or the Zenith and Nadir of the residence of the gods.) தமிழ் அகராதியில் காணலாம்.

சுமேரு (Sumeria)

கசுமேருவிலிருந்து (kashmer-காஷ்மீர்) ஈராக் வரை உள்ள பகுதி அவ்வாறே அழைக்கப்பட்டது. காசுமீர், காசுமேரு, Kashmeru-kasumeru


ஆங்கிலேயர்களால் பல பெயர்கள் உருமாறியது. இன்னமும் தமிழ் நாட்டை கூட ஆங்கிலேயர்கள் போலத்தானே நாமும் எழுதுகிறோம் டமில் நடு (Tamilnadu) என்று.
சுமேரு என்பது மேரு மலையின் ஒரு முனை என்பது மட்டுமல்ல அது மேல் அ மேற்கு பகுதி என்பதையும் குறிக்கிறது.

சுமேரு பகுதியில் அமைந்துள்ள மற்றொரு  முக்கிய இடம், பாமீர் பீடபூமி அ பாமீர் முடிச்சு. (Pamir Plateau)

பாமீர் முடிச்சு அப்படின்னு வரலாறு, புவியியலில் படிச்சது நமக்கு ஞாபகத்தில் இருக்கும். இது பாமீர் அல்ல பாமேரு - அதாவது, பா-மேரு, பத்து மேரு, பத்து மலை. இதன் அருகில் தமிழர்களுக்கு முக்கியமான இடம் தட்சசீலம் (Taxila).
இந்த பாமேரு அ தட்சசீலம் என்பதன் அர்த்தம் ஒன்றே. பத்து மலைகள். உலகின் முதல் பல்கலைக்கழகம் இருந்த இடம். 



இதற்கு பிறகு வந்ததுதான் நாளந்தா, புத்த பல்கலைக்கழகம். தட்சசீலம் என்றால் தச சைலம். (தசம்-பத்து. சைலம் அல்லது சேலம்-மலை) பத்து மலைகள் சேரும் இடம், முடிச்சு. கீழே உள்ள நில படத்தைப்பார்த்தாலே பல மலைகள் வந்து சேருவது தெரிகிறது. தச சைலம்  தற்போது இருப்பது ஹரப்பா, மொஹஞ்சதாரோ இருக்கும் அதே பாகிஸ்தான் நாட்டிற்குள்.



அதே போல குமேரு என்பது மறுமுனை அ மலையின் முடிவில் கீழ்ப்பகுதி அ தாழ்வு பகுதி என்று அர்த்தம் பெறுகிறது.
கீழே உள்ள நிலப்படத்தில் மேரு மலை (இமய மலை) தற்போதைய ஈரானிலிருந்து தாய்லாந்து வரை பெருமலையாய் பரவி இருப்பதைக் காணலாம்.



மேருமலையின் தென் முனையில் இருக்கும் நாடு கம்போடியா. இங்கு நாட்டு மக்களே, குமர் என்றுதான்  அழைக்கப்படுகின்றனர்.
கம்போடியாவிலுள்ள இனத்தின் பெயர் குமர் (khmer). கம்பூச்சியா அ கம்புஜா என அழைக்கபடும் இன்றைய கம்போடியா ஒரு தென் கிழக்கு ஆசிய நாடாகும். இந்த மக்களை கம்போடியர் என்றும் குமர் என்றும் அழைக்கின்றனர். 


அன்றைய கம்போடியா குமர் நாடு என்றே அழைக்கப்பட்டது. அன்றைய குமர் மற்றும் இன்றைய கம்போடியா இணைந்த நில வரைபடம். (வெள்ளைக் கோடுகள் இன்றைய நாடுகளின் எல்லைகள்; வண்ணத்தில் உள்ளவை அன்றைய நாடுகள்)


கம்பு என்பவரின் பெயரில் கம்புஜா நாட்டின் பெயர் உருவாயிருக்கிறது. அவர் இந்தியாவில் இருந்து வந்தவர். சற்றே தேடிப்பார்த்ததில் அவருடைய உண்மையான பெயர் கவுந்தன்யா (கி.பி.68) என்றும் தெரிய வந்தது. அவரை Hun Thien என்று சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள்.
கம்போடியா நாட்டின் மிக முக்கிய நகரம் அங்கோர்வாட்.
 
அங்கோர் வாட் இரண்டாம் சூர்யவர்மனால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. காண்க: நமது சோழப்பேரரசு உச்சத்தில் இருந்த காலம் இது. முதல் இரு குலோத்துங்கர்கள் ஆண்ட காலங்களை ஒட்டியது சூரியவர்மன் காலம்.




அங்கோர் என்றால் நகரம் என்றும், வாட் என்றால் கோயில் என்றும் பொருள். வாட் என்றால் மேரு மலையின் குறியீடு என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். அங்கோர்வாட் கோயிலைச் சுற்றியுள்ள அகழி மேரு மலையை சுற்றியுள்ள  பெருங்கடலை குறிக்கும். (சாகர் (கடல்) மாதாவை நினைவில் கொள்வோம்)

கோவிலின் மூன்று அடுக்குகளும் மேருவை தாங்கும் நீர்,நிலம்,காற்று ஆகிய தளங்கள். இங்குள்ள 5 கோபுரங்கள் மேரு மலையின் உயர்ந்த 5 சிகரங்களைக் குறிக்கிறது. 



அங்கோர்வாட் கோயிலின் கிழக்கு சுற்றில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தையும் கவர்ந்த ஒரு புராண கதை செதுக்கப்பட்டிருக்கிறது. தேவர்களும், அசுரர்களும் சமுத்திரத்தை கடைந்து அமுதம் எடுத்ததை சொல்லும் அந்த பாகவதப் புராண கதை. இது கதையல்ல, தமிழர்களின் அறிவியல். வேறொரு தலைப்பில் இது பற்றி காணலாம். 


மத்திய கோபுரத்தை சுற்றி இருக்கும் எழுவளையங்கள், மேரு மலையை சுற்றி இருக்கும் எழு மலைத்தொடர்கள். கோயில் கட்டப்பட்ட போது விஷ்ணு கோயிலாக இருந்தது. 14 ஆம் நூற்றாண்டில் பௌத்த கோவிலாக(தேரவாதம்) இன்றளவும் பௌத்த கோயிலாகத் தான் இருக்கிறது. கம்போடியாவில் இன்று இந்துக்களே இல்லை. ஆனால் விஷ்ணுவுக்கு மாலையிட்டு வழிபடுகிறார்களாம்.
இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயல்பட்டது.  இந்த கோயில்தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது. " இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர். இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
காண்க: ஈகரை.

இந்தக்கோயில் எவ்வளவு பெரியது என்பதை கீழே அங்கோர்வாட்டின் முன்பாகக் காணப்படும் மக்களின் உயரத்தைக்கொண்டு கணக்கிட்டுக்கொள்ளலாம். 




கம்போடியா நாட்டுக்கொடியிலும் அங்கோர்வாட் கோயில்தான் உள்ளது.


அடுத்து

இந்தோனேசியாவிலுள்ள ஜாவா (சாவகம்) தீவிலுள்ள மிக உயர்ந்த மலையின் பெயர் செமேரு semeru.

மேலதிக தகவலுக்கு. காண்க:

இன்னொரு மிக முக்கிய தகவல் தமிழர்களின் தலைநகராக, கடல்கொண்ட தொல் தமிழகத்தின் எச்சமாக விளங்கும் ஒரு பகுதியின் பெயர் மதுரையே. 
நம்மூர்ல ஆங்கிலேயர்களால் மதுரையானது madura (மஜுரா) என்றே அழைக்கப்பட்டது. நம்பாதவர்களுக்கு இன்னும் கூட, மதுரையில் ஒரு கல்லூரியின் பெயர் Madura College தான். 


அந்த மதுரை தீவு மற்றும் நீரிணைப்பு இந்தோனேசியாவிலுள்ள யாவகத்தீவில் உள்ளது.



இந்த இந்தோனேசிய யாவகத்தீவில் உள்ள மதுரையில் மக்கள் இன்றும் பேசும் மொழி மதுரேசி என்றே அழைக்கப்படுகிறது.



காரணம் என்னவென்றால் துவக்க காலத்தில் அங்குதான் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதோடு கி.பி 10, 11 ம் நூற்றாண்டுகளில் சோழ மன்னர்களின் அரசு குறிப்பாக, உலகின் முதல் கடற்படையைக்கொண்டிருந்த ராஜேந்திர சோழனுடைய கடற்படையின் காரணமாக தமிழ் மிகப்பரவலாக அங்கு இருந்தது. அவரது அரசு எல்லைகளைக் குறிக்கும் வரைபடம்.
 


இந்தோனேசியாவின் தென் கிழக்கு முனையில் இருந்து 21 ம் நூற்றாண்டின் முதல் புதிய நாடான கிழக்கு திமோர் (இந்தோனேசியாவில் மேற்கு திமோர்). இதில் திமோர் என்பதன் பொருளே தெ-மேரு, தெற்கு-மேரு என்பதே.



சீனர்கள் மேரு மலையை மையப்படுத்தி இருந்ததன் காரணமாக உருவாக்கியிருந்த ஒரு வரைபடம். காண்க:



கொரியர்கள் மேரு மலையை மையப்படுத்தி உருவாக்கின வரைபடம்.காண்க:



ஒரு துணைச்செய்தி. மலேசியாவில் மிகப்பெரிய முருகன் சிலை இருக்குமிடத்தின் பெயர் பத்து மலை.

  

இந்த மேரு மலை இந்தியா, தென்கிழக்காசியாவில் மட்டுமல்ல, ஆப்பிரிக்காவிலும் இருக்கிறது.
ஆப்பிரிக்காவிலுள்ள தன்சானியாவில் கிளிமாஞ்சாரோ மலைச்சிகரத்திற்கு அருகில் உள்ள ஒரு உயர்ந்த மலையின் பெயர் மேரு தான்.

இந்தியாவின் தென் முனை குமரி முனை என்று சொல்கிறோம். அது தவறு. அது குமரி முனை அல்ல, மாறாக குமேரு முனை. காரணம், மேற்கு தொடர்ச்சி மலை குறுகி கடலுள் மூழ்கும் இடம். கூகுள் வரைபடம் பார்த்தால் கன்னியாகுமரிக்கும் தெற்கே 300 கி.மீ தூரத்திற்கு தமிழ்நாடு நிலத்தை ஒட்டி மிகப்பெரும் பரப்பு கடலுக்குள்ளே இருப்பதைப்பார்க்கலாம்.


இதில் 100 மீட்டர் கடல் அளவு குறைந்தால் தமிழ்நாடும் ஈழமும் இணைந்துவிடும்.


அவ்வளவு ஏன் 18 மீட்டர் குறைந்தால் நகரப்பேருந்துலேயே போய்விடலாம். 20 கி.மீ. தான்.


இந்தியாவும் இலங்கையும் கடலால் பிரிக்கப்படாத காலத்தில், அதாவது மிகப்பெரிய பனி உருகிய காலத்திற்கு முன்பாக (கி.மு 10,000 என்று நில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்) தமிழ்நாட்டின் பரப்பு கன்னியாகுமரிக்கும் தெற்கே 300 கி.மீ தூரம் வரை இருந்தது. பல தமிழ்  நகரங்களின் கட்டடங்கள் தென்படுவதாக தூத்துக்குடிபகுதியில் கடல் அகழாய்வு செய்தவர்கள் கூறுகிறார்கள். இதை ஆய்வும் செய்திருக்கின்றார் திரு. பாலு என்பவர். தமிழருக்கான தமிழர்களால் உருவாகும் தமிழரசு வரும்போதுதான் இது மீண்டும் அகழ்வாய்வு செய்யப்படும்.

                                                         தொடர்ந்து தேடுவோம் ...

திங்கள், 13 பிப்ரவரி, 2017


செம்மொழியென்றால்

2012தமிழாண்டு2042-

செம்மொழியென்றால் முதலில் தெளிவாக சொல்வதானால் பிறமொழி எழுத்துக்கள் சொற்கள் இன்றி மொழிபெயர்புகளற்ற சுயஇலக்கண வருத்தி சுயமான இலக்கியங்கள் கொண்டு 1000 ஆண்டுகள் முதல் 2000ஆண்டுகளுக்கு முற்பட்டவையான செம்மையான  மொழியே செம்மொழி அவற்றில் தலைசிறந்து நிற்பதாக தமிழ் இருப்பது பெருமைக்குரியது. (சிவந்தமொழியல்ல) தமிழ்நாடெங்கும் கோலாகலம். படித்தவர்கள்,படிக்காதவர்கள், ஏழைகள், பணக்காரர்கள், ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது செம்மொழி மாநாடு நடப்பதுப் பற்றி.

அரைத்த மாவையே அரைக்கும் மசாலா சினிமாவுக்கு சென்றால் கூட படம் ஆரம்பிக்கும் முன்பு ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...’ என ஏ. ஆர். ரஹ்மான் பாடி செம்மொழி மாநாட்டைப் பற்றி தெரியப்படுத்தி விடுகிறார்.
ஆனால் மாநாடு பற்றித் தெரிந்திருந்தாலும் பெரும்பாலானோருக்கு செம்மொழி என்றால் என்ன என்று தெரியவில்லை. செம்மொழி என்பதற்கு பலரும் விளையாட்டாய் ஏதாவது விளக்கம் கொடுத்து பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மையில் இதன் பொருளுணர்ந்தவர்கள் நெஞ்சை நிமிர்த்தி தமிழனாய் பிறந்ததற்கு பெருமிதம் கொள்வார்கள்.
சரி. செம்மொழி என்றால் என்ன? ஆங்கிலத்தில் classical language என்பதை தான் தமிழில் செம்மொழி என்கிறோம். உலகில் தமிழையும் சேர்த்து 9 மொழிகள் செம்மொழியாக உள்ளன. கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம், பாரசீகம், சீனம், அரேபியம், எபிரேயம், தமிழ் ,கன்னடம் ஆகிய மொழிகள் செம்மொழி அந்தஸ்தை பெற்றுள்ளன. ஒரு மொழி செம்மொழி ஆக வேண்டும் என்றால் குறைந்தது 1000 ஆண்டுகளாவது பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும். அந்த பழமையைப் பறைச்சாற்ற இலக்கிய படைப்புகளும், கலைகளும் இருக்க வேண்டும். இவை இருந்தால் அம்மொழி செம்மொழி அந்தஸ்தைப் பெறும்.

நம் தமிழ் மொழியோ 4000 ஆண்டுகள் பழமையானது. அதற்கு திருக்குறள், சிலப்பதிகாரம் போல ஏராளமான இலக்கியச் சான்றுகளும் இருக்கின்றன. கலைகளிலும் நம் தமிழ் கலாச்சாரம் கோலோச்சுகிறது. கட்டடக் கலைக்கு ஸ்ரீவில்லிப்புதூர், தஞ்சாவூர் போன்ற பழமையான ஆலயங்களும், சிற்பக் கலைக்கு மாமல்லப்புரம் போன்ற அற்புதங்களும் நம் கண் முன்னே இருக்கிறது. எங்கிருந்தோ தேடிப் பிடித்து ஆராய்ச்சி செய்தெல்லாம் சொல்ல வேண்டியதில்லை. தமிழின் பெருமையை உணர்த்த ஏராளமான இலக்கிய, கலைச் சான்றுகள் இருக்கின்றன.
செம்மொழி என்றால் சிவந்த மொழி என்று பொருளல்ல. செம்மையான மொழி என்று அர்த்தம். அதாவது ஒரு மொழி போதிய அளவு வாழ்ந்திருந்தால்தான் அதில் ஒரு முதிர்ச்சியிருக்கும். அதாவது அதற்கு போதுமான இலக்கண விதிகள் இருக்கும். நேற்று புதிதாக ஒரு மொழி உருவாகியிருந்தால் அதில் ஒரு மொழிக்கு தேவையான அளவு இலக்கண இலக்கியங்கள் இருக்காது. அந்த மொழி பக்குவப்பட பல ஆண்டுகள் நிச்சயம் தேவை. அதனால்தான் குறைந்தது 1000 ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டுமென்பது விதி.
தமிழில் இலக்கணங்கள் தெளிவாக இருக்கிறது. உதாரணமாக ஆண்பால் எது? பெண்பால் எது? அஃறிணை எது? எது என பிரித்துக் கூறுவதில் குழப்பமேயில்லை. வண்டி (காடி) எனும் சொல் பெண்பால் என இந்தியில் இருப்பது போன்ற குழப்பங்கள் தமிழில் இல்லை.
செம்மொழிகளில் பல இன்று வழக்கொழிந்து விட்டன. அவற்றை இன்று பேசக் கூட ஆளில்லை. ஆனால் இன்றும் நம் தமிழ் பீடுநடைப் போட்டுக் கொண்டிருக்கிறது. அதை நாம் இன்றும் பேசவும் எழுதவும் செய்கிறோம். அது மட்டுமின்றி கணிணி பயன்பாட்டில் கூட தமிழ் மிக வேகமாக முன்னேறி வருகிறது. அதாவது தமிழ் தவிர வேறு மொழி எதுவுமேத் தெரியாதவர்கள் கூட முழுமையாக கணிணியை பயன்படுத்தும் அளவு பல மென்பொருள்கள் வந்த வண்ணம் இருக்கிறது.
நம் தமிழின் சிறப்புகள் இத்தோடு நின்று விடவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழ் இன்று முற்றிலுமாக மாறிவிடவில்லை. உதாரணமாக கிரேக்க காவியங்களை கிரேக்கர்கள் இன்று படித்தால் ஒரு வார்த்தை கூடப் புரியாது. ஆனால் தமிழில் சங்கப் பாடல்களை இன்று படித்தாலும் ஏதேனும் ஓரிரு வார்த்தைகள் தவிர மற்றவை நன்கு புரியும்.
செம்மொழியால் என்ன பயன்?
தமிழ் செம்மொழி அந்தஸ்துப் பெற்றதால் இந்தியப் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அதனை ஏற்கும். அதன்பின், அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்களிலும், தமிழ்த்துறை உருவாகும். தமிழ் மொழி, தமிழ்க்கலை, இலக்கிய ஆய்வுகள் முனைப்பாக நடைபெறும். இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு, தமிழைச் செம்மொழியாக ஏற்றால், உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அதை ஏற்கும். உலகப் பல்கலைக்கழகங்களில் இப்போது, கீழ்த்திசை மொழிகளில் ஒன்றாக தமிழ் இருந்துவரும் நிலைமை மாறி, தனியே தமிழ்த் துறைகள் உருவாக்கப்படும்.
மேலும் செம்மொழி இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள சில விஷயங்கள் இன்று நவீனத்துவம் அடைந்து அதை நாம் ஏதோ ஜப்பான்காரன் கண்டுப்பிடித்ததாக நினைத்துக் கொண்டு பயன்படுத்திக் கொண்டிருப்போம். இதுப் போன்ற சங்கதிகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு பல புதுப்புதுத் தகவல்கள் வெளிவரும். அதனால் இன்று நம்மிடையே இருக்கும் பல பழக்க வழக்கங்களுக்கு காரணக் காரியங்கள் புரியும். இதுப் போன்ற பல ஆராய்ச்சிகள் செய்வதால் தமிழறிஞர்களுக்கு உலகளவில் மவுசுக் கூடும்.
’செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுதுக் காதினிலே...’ என்பதற்கிணங்க நம் தமிழின் பெருமைகளைப் பற்றிப் பேசினால் நம் காதுகளுக்கு இனிமையாக தானிருக்கிறது. ஆனால் தமிழை வாழ வைக்க இத்தனை செலவு செய்து செம்மொழி மாநாடு நடத்தும் தமிழக அரசு ஒரு விஷயத்தில் இன்னும் கொஞ்சம் அக்கறைக் காட்ட வேண்டும். இன்றும் தமிழ்நாட்டிலேயே பிறந்து வளரும் பலர் தமிழில் எழுதப் படிக்கவேத் தெரியாது என்கின்றனர். அவர்கள் இனி வீட்டிலும் வெளியிலும் சமஸ்கிருதத்திலேயே பேசப் போவதுப் போல பள்ளியில் சமஸ்கிருதம் எடுத்துப் படிக்கின்றனர். அல்லது பிரெஞ்சு, இந்தி என தமிழ் தவிர மற்ற மொழிகளை எடுத்துப் படிக்கின்றனர். அவர்களால் பேருந்துகளில் எழுதியிருக்கும் ஊர் பெயரைக் கூடப் படிக்கத் தெரியாது என மிகப் பெருமையாகக் கூறிக் கொள்கின்றனர்.
உலக மொழிகள் அனைத்தும் வேண்டுமானாலும் படித்துக் கொள்ளட்டும். ஆனால் தமிழ்நாட்டிலேயே படித்துவிட்டு தமிழில் எழுதப் படிக்க தெரியாதவர்களை என்னவென்று சொல்வது. இதுப்போலக் கூறி தமிழைப் புறக்கணிக்கும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் சமுதாயமாவது நூறு சதவீதத்தினருக்கும் தமிழில் எழுதப் படிக்க தெரியும் என்ற நிலையை உருவாக்குவோம்.
செம்மொழிகளில் வாழும் மொழியாக இருப்பது தமிழ் மட்டுமே: ஆய்வரங்கத்தில் தமிழுக்கு புகழாரம்.......................................................................................
 கோவை: ""கணினித் தமிழ் வளர்ச்சி நிதியாக, 70 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்,'' என்று, கான்பூர் ஐ.ஐ.டி., தலைவர் ஆனந்தகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க துவக்கவிழா, கொடிசியா வளாகத்திலுள்ள தொல்காப்பியர் அரங்கத்தில் நடந்தது.  இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் சிவத்தம்பி தலைமை வகித்தார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

கிரிகோரி ஜேம்ஸ்: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்; தற்போது ஹாங்காங்கில் பணியாற்றி வருகிறார். அகராதி ஆய்வில் தலை சிறந்தவர். அவரது பேச்சு: மொழி என்பது ஆன்மா பயணத்தின் பாதை. தமிழைக் காக்கவும், தமிழை வளர்க்கவும் புதிய துணிச்சலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓராயிரம், ஈராயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட மொழியை, மேலும் பாதுகாக்க, இந்த ஆய்வரங்கத்தின் கருத்துக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

உல்ரிக் நிக்லாஸ்: (ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இவர், அங்குள்ள தமிழர் ஒருவரை மணந்து, தமிழை முறையாகப் பயின்று, அங்குள்ள கலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.) நீண்ட காலத்துக்குப் பின், தொன்மை வாய்ந்த தமிழ்மொழிக்கு கருணாநிதியின் முயற்சியால் செம்மொழித் தகுதி கிடைத்து இருக்கிறது. தமிழ்த்தாய்க்கு மேலும் ஒரு பெருமை கிடைத்துள்ளது. ஜெர்மனுக்கும், தமிழகத்துக்கும் நீண்ட நெடிய தொடர்பு உள்ளது. 17வது நூற்றாண்டிலேயே ஜெர்மனியைச் சேர்ந்த அறிஞர், தரங்கம்பாடிக்கு வந்து தமிழ் மொழி பயின்று, தமிழ் மொழியில் நூல்களை எழுதியுள்ளார். அதிலிருந்து, 300 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழி அங்கு மதிக்கப்பட்டு வருகிறது. கலோன் பல்கலைக்கழகத்தின் 1943லிருந்து தமிழ்த்துறை செம்மையாக செயல்படுகிறது. தமிழில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப்படிப்பு வரை அங்கே படிக்கும் வசதியுள்ளது. தமிழகத்துக்கு வெளியே உள்ள தமிழ் நூலகங்களில் பெரிய நூலகம் அங்குள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் அங்குள்ளன.

ஜெர்மனியில் தமிழ்த் தாய்க்கு கோவில் கட்ட முயற்சி எடுத்து வருகிறோம். எட்டாவது தமிழ் இணைய தள மாநாட்டை நாங்கள் நடத்தினோம். தற்போது செம்மொழி மாநாட்டுடன் இணைந்து 9வது இணைய தள மாநாடு நடத்துவது பெருமகிழ்ச்சி அளிப்பதாகவுள்ளது. தமிழ்மொழி, பழம் பெருமை வாய்ந்த மொழி என்பதோடு, நவீன கணினி யுகத்துக்கு ஏற்ற மொழியாகவும் உள்ளது.  எனது தாய் வீடு ஜெர்மனி என்றாலும், புகுந்த வீடு இந்த தமிழகம் தான். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் மருமகள் நான். தமிழ்த்தாயின் வளர்ப்பு மகளாகவே நான் வாழ்கிறேன்.

ஆனந்தகிருஷ்ணன், தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர்: தமிழ்மொழி வரலாற்றில் இலக்கியமும், இணையமும் சேரும் முதல் நிகழ்வு இங்கு நடக்கிறது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் தமிழின் பயன்பாட்டை அதிகப்படுத்த, சீரிய முயற்சியாக இந்த இணைய தள மாநாடு நடத்தப்படுகிறது. கடந்த 1997ல் கணினித் தமிழ் குறித்து பல்வேறு விவாதங்கள் கிளம்பியபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த கோவிந்தசாமி, முதன் முதலாக அங்கு இணையதள மாநாட்டை நிகழ்த்தினார். தமிழ் இணையதளம், பல மைல்களைத் தாண்டி, சில மைல்களை தவற விட்டுள்ளது. இதை உணர்ந்த இளைஞர்கள், புதிய முயற்சிகளை எடுத்துள்ளனர்.

தமிழ் இணைய மாநாட்டில் 15 தலைப்புகளில் கணினித் தமிழ் பற்றி ஆய்வு நடக்கிறது.  இதில் தரப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் மீது விவாதம் நடந்து, அவை செயல்பாடுகளாக மாற வேண்டும். மாநாட்டுக்குப்பின், இந்த தீவிரம் மங்கி விடக்கூடாது. கணினி மொழியியல் மையத்தை சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஏற்படுத்த வேண்டும், வடிவமைப்பு, எழுத்து வடிவங்கள் குறித்த ஆய்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொள்ள வேண்டும்.  ஏழு விதமான ஆராய்ச்சிகளுக்கு தலா 10 கோடி ரூபாய் வீதம் 70 கோடி ரூபாய் நிதியை கணினித் தமிழ் வளர்ச்சி நிதியாக, பல்கலைக்கழகங்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும்.

வா.செ.குழந்தைசாமி, துணைத்தலைவர், உலகத் தமிழாய்வு நிறுவனம்: சிந்து வெளி நாகரிகம், சீன நாகரிகம், மெசபடோமியா நாகரிகம் உள்ளிட்ட உலகின் பழமையான ஆறு நாகரிகங்களில், நான்கு நாகரிகங்கள் அடையாளம் தெரியாமல் மறைந்து விட்டன. சிந்துவெளி நாகரிகம், சீன நாகரிகம் மட்டுமே உயிர்ப்புடன் உள்ளன. இந்த நாகரிகத்தை அடித்தளமாகக்கொண்ட மொழிகளில், சீன மொழியும், இந்திய மொழிகளில் வடமொழியும், தமிழ் மொழியும் தான் அழியாமல் உள்ளன. அந்த மொழி, நம் தாய் மொழி என்பதால், நாம் ஓர் அங்குலம் உயர்ந்திருக்கிறோம். இந்த பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டியது முக்கியம். ஆரிய நாகரிகத்துக்கு அடிப்படை சமஸ்கிருதம்; திராவிட நாகரிகத்தின் அடையாளம் தமிழ் மொழி. ஆனால், இந்திய நாகரிகம், தத்துவத்துக்கு அடிப்படையாக தமிழ் மட்டுமே விளங்குகிறது என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவின் தொன்மை வாய்ந்த இரு மொழிகளுக்குள் 2000 ஆண்டுகளாக போட்டி இருந்து வருகிறது. அது இப்போது பகைமையாக மாறும் சூழல் உள்ளது.  உண்மையில், இந்த இரு மொழிகளும், இந்திய நாகரிகத்தின் தூண்கள். அதற்கு மாறாக, தமிழின் தொன்மை குறித்து, சில கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

தமிழ் இலக்கிய நூல்கள், பாண்டிய மன்னர்கள் காலத்தில், 9வது நூற்றாண்டில் கற்பனையாக எழுதியவை என்று ஹெர்மன் டிக்கன் எழுதியுள்ளார். ஷெரிலேக் என்ற அறிஞர், இந்திய மொழிகள் அனைத்தும் வட்டார மொழிகள் என்று கூறுகிறார். ஆனால், தமிழ் பற்றி தனியாக அவர் எதுவும் குறிப்பிடவில்லை. வடமொழி ஆதரவாளர்கள் இயக்கம், வெளிநாடுகளில் புதிய கருத்தைப் பரப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது கருத்தில் கொள்ளப்பட வேண்டியது என்று தமிழின் தொன்மைக்கு ஆதரவாக வாதிடும் மொழி வல்லுனர் ஜார்ஜ் ஹார்ட் கூறுகிறார். சங்க கால இலக்கியங்களின் தொன்மையை நிலை நாட்ட வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. இவ்வாறு தமிழறிஞர்கள் பேசினர். விழாவில் பங்கேற்ற தமிழறிஞர்களுக்கு ஆய்வரங்க அமைப்புக்குழு செயலர் கனிமொழி பொன்னாடை மற்றும் நூல்களை வழங்கினர். ஆய்வரங்க சிறப்பு மலரை நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட, முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொண்டார். ஆய்வரங்க பொருண்மைகளை முதல்வர் வெளியிட, சிவத்தம்பி பெற்றுக் கொண்டார்.  பொன் கோதண்டராமன் (பொற்கோ) வரவேற்றார்; அவ்வை நடராசன் நன்றி கூறினார். மொரீஷியஸ், மலேசியா வாழ் தமிழர்களின் சார்பில், முதல்வருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்? – விளக்கக் கட்டுரை!!
தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்?

மொழி தான் ஒருவருடைய அடையாளமாகும். தத்தம் மொழியில் பெயரை வைத்துக்கொள்வது என்பது அடையாளப்படுத்துவதற்கு உதவும்.
இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன தவறு?
இன்னொரு மொழியில் பெயர் வைப்பது என்பது, ‘ஒருவர் தம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாகக் கருதும்போது’ மட்டுமே நிகழும்.
இன்னொரு மொழி நம்முடைய மொழியை விட உயர்வானது என்று கருதக் கூடாதா?
இன்னொரு மொழியைச் சிறப்பாகக் கருதலாமே தவிர நம்முடைய மொழியை விட உயர்வானது எனக் கருதுவது கூடாது. ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் சில தனிச் சிறப்புகள் உள்ளன. எ.கா. தமிழில் ல,ள,ழ, என்றும் ர,ற என்றும் ன,ண,ந என்றும் அமைந்திருப்பதை உலக மொழிகள் வேறு எவற்றிலும் காண முடியாது. அதே போலப் பிற்கால ஒலிகளாகிய ‘எப்’ (‘F’) போன்ற ஒலியைத் தமிழ் முதலிய செம்மொழிகளில் காண முடியாது. ஆகவே ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.
நம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாக எண்ணும் ஒருவர், இயல்பாகவே தம்முடைய மொழியையும் அதன் வழியே தம்முடைய இனத்தையும் தாழ்வாகக் கருதுபவராக அமைந்துவிடுவார். இப்படி உருவாகும் தாழ்வு மனப்பான்மை அவருடைய வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்துவிடும்.
அது சரி, அப்படியானால் உயர்வான மொழி என்று எதைக் கருதலாம்?
அவரவர்க்கு அவரவர் தாய்மொழியே உயர்வானது. நரிக்குறவர் இனத்திற்கு அவருடைய தாய்மொழியான வக்கிரபோலி உயர்வான மொழியே தவிர, தமிழோ ஆங்கிலமோ இல்லை. ஒவ்வொருவரும் தத்தம் தாய்மொழியின் வாயிலாகவே தங்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள்.
சான்று: நீங்கள் தமிழராகப் பிறந்து தமிழராக வாழ்வதால் தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாடு உங்களுடையது என்று உணர்கிறீர்கள் இல்லையா? தமிழ்நாட்டிலேயே பிறந்து வளரும் ஓர் ஆங்கிலேயரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாட்டை அறிந்திருப்பாரேயன்றி அது தம்முடையது என்று உணரவோ அதைப் பின்பற்றவோ மாட்டார். அதே நேரம் வெளிநாட்டிலேயே பிறந்து வளரும் ஒரு தமிழர் இப்பண்பாட்டைத் தம்முடையது என்றும் அதன் படி வாழ வேண்டும் என்றும் எண்ணுவார்.
இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன சிக்கல்?
இன்னொரு மொழியில் பெயர் வைக்கும் போது பல நேரங்களில் அப்பெயர்களின் பொருளே தெரியாமல் வைத்து விடுவோம்.
அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க. சியாமளா என்பதன் பொருள் கறுப்பாயி என்பதாகும். கறுப்பாயி எனத் தமிழில் பெயர் வைக்கத் தயங்கும் ஒருவர் இன்னொரு மொழியில் ‘சியாமளா’ என்று பெயர் வைப்பதை விரும்புவது நகைப்புக்குரியது அல்லவா? ‘கனவு’ எனப் பெயர் வைக்கத் தயங்கும் நாம் ‘சுவப்னா’ என்று அதே பொருள் தரும் பெயரை வேறு மொழியில் வைப்பது அடிமை மனப்பான்மையே அன்றி வேறென்ன?
சில நேரங்களில் நம்முடைய குடும்பப் பெரியவர்களே அப்பெயர்களைச் சொல்லத் தடுமாறுவார்கள். நம்முடைய குழந்தைகளின் பெயரை நம் இல்லப் பெரியவர்களே சொல்லத் தடுமாறுவது நன்றாக இருக்குமா?
அதற்காக, ‘ஞான பிரகாசு’ என்னும் பெயரைத் தமிழாக்கி ‘அறிவு வெளிச்சம்’ என்று வைக்கச்சொல்கிறீர்களா?
நீங்கள் ‘ஞான பிரகாசு’ என்று இன்னொரு மொழியில் பெயர் வைப்பதற்குக் காரணமே அப்பெயர் ஒயிலாக இருப்பதாக எண்ணும் சிந்தனைதான்! ‘ஞான பிரகாசு’ என்று உங்களுக்கு ஒயிலாகத் தெரியும் இந்தப் பெயரை ஓர் அமெரிக்கரிடமோ செருமானியரிடமோ சொல்லிப் பாருங்கள். அவர்களுக்கு இந்தப் பெயர் பெருமைப்படும் பெயராகவோ ஒயிலாகவோ தெரியாதது மட்டுமில்லை, வாயில் கூட நுழையாது. உங்களுடைய அதே சிந்தனை ஏன் ஓர் அமெரிக்கருக்கோ செருமானியருக்கோ வரவில்லை? ஏனென்றால் நீங்கள் உங்களுடைய மொழியை விட, ‘ஞானப் பிரகாசு’ என்னும் பெயரைக் கொண்டுள்ள மொழியை உயர்வாகக் கருதும் மனப்பான்மையில் இருக்கிறீர்கள். இது தாழ்வு மனப்பான்மை தானே!
‘ஞான பிரகாசு’ என்னும் பெயரை ‘அறிவொளி’ என்று அழகு தமிழில் வைக்கலாம் அல்லவா?
அதற்காகக் கோப்பெருந்தேவி, பிசிராந்தையார், ஒளவையார் எனப் பழைய பெயர்களையா வைக்கச் சொல்கிறீர்கள்?
உங்களைத் தமிழில் பெயர் வைக்கச் சொன்னோமேயன்றிப் பழந்தமிழ்ப் பெயர்களைத் தாம் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. பழந்தமிழ்ப் பெயர்களை வைப்பது, புத்தாக்கச் சொற்களை வைப்பது, பெரிய பெயரை வைப்பது, சிறிய பெயராக வைப்பது என்பதெல்லாம் உங்களுடைய விருப்பத்தைச் சேர்ந்ததாகும்.
பழந்தமிழ்ப்பெயர்களை விடுங்கள். ‘புலிக்கட்டை’ என்று பெயர் வைப்பீர்களா? சிரிப்பு வருகிறது அல்லவா? அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஒருவரின் பெயர் தான் அது! அவருடைய பெயர் ‘Tiger Woods’. அதைத் தமிழில் சொன்னால் ‘புலிக்கட்டை’ தானே! பெயர் பழையது, புதியது என்பதெல்லாம் நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான்! எப்படிச் சிந்தித்தாலும் தாய்மொழியில் இருப்பது தான் முறையாகும்.
‘மோகன்’ என்று பெயர் வைக்கிறோம். அப்பெயரைத் தமிழில் ‘கவின்’ என்றோ ‘எழில்’ என்றோ வைக்கலாம் அல்லவா? ‘கண்ணன்’ எனப் பொருள் தரும் ‘கிருட்டினன்’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கண்ணன்’ என்றே வைக்கலாம் அல்லவா? ‘விசய்’ என்று பெயர் வைப்பதற்கு ‘வெற்றி’ என்று பெயர் வைக்கலாம் அல்லவா? ‘குமார்’ என்பதற்குக் ‘குமரன்’ என்று வைக்கலாம் அல்லவா? ‘உசா’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கதிர்’ என்று கூப்பிடலாம் அல்லவா!
சரி! என்னுடைய குழந்தைக்குத் தமிழில் பெயர் வைக்க ஆசைதான்! ஆனால் எங்கு தேடுவது?
ஏன் கவலைப்படுகிறீர்கள்? முனைவர் பா. வளன் அரசு(நெல்லை), முனைவர் மு. தெய்வநாயகம்(சென்னை), புலவர் இரா. இளங்குமரன்(திருச்சிராப்பள்ளி), முனைவர் தமிழண்ணல்(மதுரை), முனைவர் ந. அரணமுறுவல்(சென்னை) எனத் தமிழறிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை அணுகலாம். இன்னும் பல இயக்கங்கள் இருக்கின்றன. பல இணையத் தளங்கள் இருக்கின்றன. http://www.tamilkalanjiyam.comhttp://www.peyar.inhttp://wapedia.mobi/tahttp://thamizppeyarkal.blogspot.comhttp://tamilsaral.com/news%3Fid%3D3857.dohttp://www.sillampum.com/http://pagalavan.in/archives/328 எனப் பல தமிழ்த்தளங்களில் நீங்கள் தமிழ்ப்பெயரைத் தேர்ந்துகொள்ளலாம்.
குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் மட்டும் தானே இதைச் சொல்கிறீர்கள்?
இல்லை. குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது, வணிக நிறுவனங்களுக்குப் பெயர் வைப்பது, திரைப்படங்களுக்குப் பெயர் வைப்பது என எல்லாவற்றிற்கும் சேர்த்துத் தான் சொல்கிறோம்.
வணிக நிறுவனங்களுக்குமா?
ஆம். வெளி மாநிலத்திற்கு வந்து பிழைக்கும் தெலுங்கரான ‘உம்மிடி பங்காரு’ம் கன்னடரான ‘உடுப்பி’ உணவகத்துக்காரரும் தத்தம் மொழியிலேயே பெயர் வைக்கும்போது நாம் நம்முடைய மாநிலத்தில் இருந்துகொண்டே வணிக நிறுவனங்களுக்கு வேற்று மொழியில் பெயர் வைப்பது சரியா?
வேற்று மாநிலத்திலோ நாட்டிலோ இருக்கும்போது வணிக நிறுவனங்களுக்கு எப்படித் தமிழில் பெயர் வைப்பது?
ஒன்றும் கவலையில்லை. தமிழ்நாட்டின் தலைநகரிலேயே ‘உம்மிடி பங்காரு’ என்று தெலுங்கில் பெயர் வைத்துக் கடை நடத்தவில்லையா? ‘உடுப்பி’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் உணவகங்கள் இல்லையா? ‘அகர்வால்’ இனிப்பகங்கள் இல்லையா? ‘நாயர்’ கடைகள் இல்லையா?
திரைப்படங்களுக்குமா சொல்கிறீர்கள்? இது கருத்துரிமையில் தலையிடுவது ஆகாதா?
தமிழில் படம் எடுக்கிறார்கள். கதை தமிழர்கள் பற்றிய கதையாக இருக்கிறது. படத்தைத் தமிழகத்தில் தமிழர்களுக்குத் தான் வெளியிடுகிறார்கள். ஆக, எம்மொழியில் படம் இருக்கிறதோ, யாருக்காக எடுக்கப்படுகிறதோ அம்மொழியில் பெயர் வைப்பது தானே பொருத்தமாக இருக்கும். நாம் ஒன்றும் சப்பான் நாட்டிற்குச் சென்று தமிழில் பெயர் வையுங்கள் என்று கேட்கவில்லை.
தமிழில் பெயரை வைப்பதால் நட்டம் ஏற்படும் சூழல் வரும்போது என்ன செய்வது?
அப்படிப்பட்ட சூழல் இதுவரை வந்ததேயில்லை. எத்தனையோ ஆங்கிலப் படங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். அப்படங்களுக்குத் தமிழில் தான் பெயர் வைக்கிறார்கள். ‘300’ என்று ஓர் ஆங்கிலப் படம் வந்தது. அப்படத்திற்கு ‘300 பருத்தி வீரர்கள்’ என்று பெயர் வைத்தார்கள். பெயர் தமிழில் இருந்ததால் அப்படம் ஓடவில்லையா என்ன?
அப்படியானால் தமிழில் பெயர் வைக்க வேண்டுமா? தாய்மொழியில் பெயர் வைக்க வேண்டுமா?
அவரவர் தத்தம் தாய்மொழியிலேயே பெயர் வைக்க வேண்டும். நாம் தமிழர் அல்லவா! எனவே தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும்

செவ்வாய், 27 டிசம்பர், 2016


எகிப்து தேசம் & யோசேப்பு - வரலாற்று தடயங்கள்






இஸ்ரவேலர்களின் அடிமைக் காலத் துயரங்களை யோசேப்பின் கதையிலிருந்து பைபிள் கூறத் தொடங்குகிறது. யோசேப்பு ஆபிரகாமின் விசுவாசமும், ஈசாக்கின் நற்பண்பும், யாக்கோபின் தன்னம்பிக்கையும் கொண்டவர். பைபிளில் காணப்படும் வியப்புக்குறிய மனிதர்களுள் இவரும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை.
    • பைபிளில் கணக்கிட, யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டு எகிப்திய அதிகாரியாக உயர்த்தப்பட்ட நாட்கள் கி.மு 1900-1850 என்ற கால அளவிற்குள் வருகின்றன.

    மூன்றாம் செனுசுரத்தின் சிலைகள்

    இக்காலங்களில் எகிப்தை 12ஆம் வம்சத்தை சேர்ந்த இரண்டாம் செனுசுரத் (கி.மு 1897-1878), மூன்றாம் செனுசுரத் (கி.மு 1878 - 1839) என்ற இரண்டு அரசர்கள் ஆண்டனர். எனவே, இரண்டாம் செனுசுரத்தின் நாட்களில் யோசேப்பு எகிப்தின் மேல் அதிகாரியாகி மூன்றாம் செனுசுரத்தின் ஆட்சியிலும் பதவி வகித்தார் என கணக்கிடலாம். இஸ்ரவேல் புத்திரர் எகிப்தை அடைந்து 71 ஆண்டுகளான பின் (கி.மு 1805) யோசேப்பு இறந்தார். கி.மு 1805-இல் அரசி சொபெக்நெப்ரூ (கி.மு 1806-1802) எகிப்து தேசத்தை ஆண்டு வந்தார். யோசேப்பு இறந்து மூன்று ஆண்டுகளுக்குள் 12ஆம் வம்சத்தின் ஆட்சி வீழ்ந்தது.

    யோசேப்பை உறுதிப்படுத்தும் தடயங்கள்:

    1) எகிப்திற்கு விற்கப்படும் யோசேப்பு:
    கி.மு 2000 -1800 காலங்களில் செமித்தியர்கள் எகிப்திற்கு அடிமைகளாக விற்கப்பட்டனர். அடிமைகளாக பெறப்பட்ட ஆசியர்களின் பெயர்களை 12ஆம் வம்சத்தை சேர்ந்த சில எகிப்திய ஹியராடிக் (சமயஞ்சார்ந்த) பாப்பிரஸ்கள் குறிப்பிடுகின்றன. பண்டைய எகிப்து தேசத்திற்கும், மெசப்பொத்தொமிய தேசங்களுக்கும் நிலவிய அடிமைவர்த்தகத்தை இதனால் அறியலாம்.

    12ஆம் வம்சத்தை சார்ந்த
    ஒரு ஹியராடிக் பாப்பிரஸ்
    Genesis 37:28 -So when the Midianite merchants came by, his brothers pulled Joseph up out of the cistern and sold him for twenty shekels of silver to the Ishmaelites, who took him to Egypt. (NIV)
    ஆதியாகமம் 37:28 - அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிற போது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக் காசுக்கு* விற்றுப் போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு போனார்கள்.
    * தமிழ் பைபிளில் இருபது வெள்ளிக் காசுகள் என மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 'இருபது சேக்கல்' அல்லது 'இருபது நிறைவெள்ளி' என்பதே பொருத்தமான தமிழ் சொற்கள். பண்டைய சுமேரியர்களும் எகிப்தியர்களும் வெள்ளியை இடைநிறுத்தி கொடுத்து பொருட்களை வாங்கி வந்தனர். 11.5 கிராம் இடை கொண்ட வெள்ளி ஒரு சேக்கல் எனப்பட்டது. அக்காலத்தில் காசுகள் (coins) வழக்கத்தில் இல்லை.
    • 1 சேக்கல் - 11.5 கிராம் வெள்ளி
    • 20 சேக்கல் - 230 கிராம் வெள்ளி
    • 1 திபன் (deben) - 90 கிராம் வெள்ளி
    • 1 கித் (kit) - 9 கிராம் வெள்ளி
    ஆதியாகமம் 37:28 யோசேப்பு 20 சேக்கல் வெள்ளிக்கு விற்கப்பட்டதாக கூறுகிறது. யோசேப்பு கி.மு19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அக்காலத்தில் ஒரு அடிமைக்கு 20 சேக்கல் (230 கிராம் வெள்ளி) என்பது மிக சரியான விலை. பண்டைய எகிப்து பதிவேடுகள் இதனை உறுதி செய்கின்றன. 
    Behold, I have sent you Hanya, the commissioner of the archers, with merchandise in order to have beautiful concubines, i.e. weavers; silver, gold, garments, turquoises, all sorts of precious stones, chairs of ebony, as well as all good things, worth 160 deben. In total: forty concubines - the price of every concubine is forty of silver. Therefore, send very beautiful concubines without blemish.
    - Letter from Amenhotep III to Milkilu

    தமிழாக்கம்: "அழகான அடிமைப் பெண்களை உன்னிடத்தில் பெற்று வர வில்லாளர்களின் அதிகாரியான அன்யாவிடம் 160 திபன் மதிப்புள்ள நெசவாளர்கள், பொன்வெள்ளிகள், பட்டாடைகள், ரத்தினங்கள், விலையுர்ந்த கற்கள், கருங்காலிமர நாற்காலிகள் என பலவித நற்பொருட்களை கொடுத்து  அனுப்பியுள்ளேன். ஒரு அடிமைப் பெண்ணின் விலை 40 வெள்ளி என்ற கணக்கில் 40 அடிமைப் பெண்களாகிறது. எனவே குறையில்லாத அழகான அடிமை பெண்களை அனுப்பி வை"

    160 திபன் / 40 = 4 திபன் = 40 கித் = 360 கிராம் வெள்ளி = 31 சேக்கல்
    மேற்கோளில் உள்ள குறிப்பு கி.மு 14ஆம் நூற்றாண்டைச் சார்ந்த எகிப்திய மன்னனின் தூதுச் செய்தி. கி.மு 14ஆம் நூற்றாண்டில் ஒரு அடிமைக்கு சுமார் 30 சேக்கல் விலையாக கருதப்பட்டது. இக்குறிப்புகளைக் கணக்கில் கொண்டால், கி.மு 19ஆம் நூற்றாண்டில் ஓர் அடிமைக்கான விலை 20 சேக்கலாகிறது.

    2) எகிப்தில் நிலவிய அநீதிகள்:
    இஸ்மவேலர்கள் யோசேப்பை பாரோவின் பிரதானியான போத்திபாரிடத்தில் விற்றனர். போத்திபார் அவரை தன் வீட்டு விசாரணைக்காரனாக்கினார். அந்நாட்களில் போத்திபாரின் மனைவி யோசேப்புடன் தகாத உறவு கொள்ள முயல்கிறாள். அவர் தனக்கு இணங்காததை அவள் கண்ட போது, தன் கணவனிடத்தில் அவரைக் குறித்து பொய் குற்றஞ்சாட்டி அவரை சிறைத் தண்டனைக்குள்ளாக்கினாள். (ஆதியாகமம் 39)
    பாப்பிரஸ் டி'ஆர்பினி

    இதே கதை 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த "பாப்பிரஸ் டி'ஆர்பினி" என்ற எகிப்திய ஓலையில் காணப்படுகிறது.

    இக்கதையில் இரு சகோதரர்கள் காணப்படுகின்றனர். அண்ணனின் மனைவி இளையவனுடன் தகாத உறவு கொள்ள விரும்புகிறாள். அதற்கு அவன் இணங்காததைக் கண்ட அப்பெண், கொளுந்தன் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாய் தன் கணவனிடம் பொய் கூறுகிறாள். இதனால் அண்ணன் தம்பியைக் கொலை செய்ய தேடுகிறான். ஆனால் உண்மை கண்டுபிடிக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்படுகிறாள்.இக்கதை போத்திப்பார் மனைவி குறித்து அக்காலங்களில் நிலவிய செய்தியைக் கருப்பொருளாக வைத்து எழுதப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.

    கோதுமை தானியங்களை பெற்றுகொண்டதாக
    எகிப்தின் தலைமை சுயம்பாகி ஒருவர் பானை
    ஓட்டில் ஒப்புதல் எழுதியுள்ளார்.

    சுயம்பாகிகளின் அப்பம் தயாரிப்பு பணியை
    சித்தரிக்கின்ற பண்டைய எகிப்தின் மாதிரி
    (கெய்ரோ அருங்காட்சியகம்)

    சிறையில் வாடிய நாட்களில், எகிப்து ராஜனின் பானப்பத்திரக்காரனும், சுயம்பாகியும் தங்கள் சொப்பனங்களுக்குரிய பொருளை யோசேப்பிடம் கேட்டறிந்தனர் (பைபிள்). "பானப்பத்திரக்காரன்", "சுயம்பாகி" என்ற பட்டப்பெயர்கள் எகிப்திய கையேடுகளில் காணப்படுகின்றன. இத்தகைய அரண்மனைப் பணியிடங்கள் அக்கால எகிப்து தேசத்தில் விளங்கி வந்தன என இதனால் அறியலாம்.

    ரொசெட்டாக் கல்வெட்டு

    பாரோ மன்னர்கள் தங்களது பிறந்தநாட்களில் சிறைகைதிகளை விடுவித்து வந்தனர் என ரொசெட்டாக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இச்செய்தியை ஆதியாகமம் 40:20,21 வசனங்களும் கூறுகின்றன.

    3) யோசேப்பு உயர் அதிகாரியாகிறார்:
    இறைவன் யோசேப்பை நினைத்தருள பாரோ சொப்பனங்கண்டு கலங்குகிறான். பாரோ கண்ட கனவிற்குரிய பொருளை யோசேப்பு எடுத்துக் கூறுகிறார். மகிழ்ந்த மன்னன் அரண்மனைப் பணியில் அமர்த்தி அவரை பெருமைப்படுத்துகிறான் (ஆதியாகமம் 41). அமர்னா களிமண் பலகைகளில் பாரோ மன்னர்கள் செமித்தியர்களை அரண்மனைப் பணிகளில் அமர்த்தியதாக செய்திகள் காணப்படுகின்றன.
    ஆதியாகமம் 41:14 - அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய்க் காவல் கிடங்கிலிருந்து கொண்டு வந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான்
    பாரோக்களும், எகிப்திய அரண்மனை பிரதானிகளும் மீசைத்தாடி மயிர்களை சவரஞ்செய்துகொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இவ்வழக்கம் எகிப்தின் பாரம்பரிய சடங்குகளில் மிகவும் தொன்மையானது. பாரோ மன்னர்கள் தங்களது முக்கிய பிரதானிகளுக்கு பொற்கச்சையை சூட்டி பெருமைப்படுத்தும் மரபையும் எகிப்திய பதிவேடுகள் கூறுகின்றன. பண்டைய ஓவியங்களிலும்  இந்த மரபைக் காணலாம்.
    ஆதியாகமம் 41:41-43,45: "பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து, தன்னுடைய இரண்டாம் இரதத்தின் மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்து தேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்.... பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன்பட்டணத்து ஆசாரியன் போத்திபிராவின் குமாரத்தி ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்"

    யோசேப்பு காலத்தைச் சேர்ந்த
    ரா கோவிலின் மீந்துள்ள பகுதி.
    (ஓன் பட்டணம்)

    ஓன் பட்டணத்தின் ரா கோவில்
    இவ்வாறு இருந்திருக்கலாம்.

    சாப்நாத்பன்னேயா என்பது பாரோ யோசேப்புக்கு இட்ட எகிப்திய பெயரின் எபிரேயச் சொல். மெய்யான எகிப்திய பெயரைக் குறித்து இன்றும் தெளிவான முடிவுகள் இல்லை. 'போத்திபேரா' என்பதற்கு 'ராவினால் கொடுக்கப்பட்டவர்' என்பது பொருள். பண்டைய எகிப்தியர்கள் 'ரா' என்ற சூரிய கடவுளை வழிபட்டு வந்தனர், இவ்வழிபாட்டிற்கு பெயர் பெற்ற ஓர் பண்டைய எகிப்து நகரமே ஹீலியொபோலிஸ் (ஓன்பட்டணம்). பாரோன் தன்னுடைய இரண்டாம் இரதத்தையும் யோசேப்புக்கு கொடுத்தான். 14ஆம் வம்சத்தில் இருந்தே எகிப்து தேசத்தில் இரதங்களைப் பயன்படுத்த தொடங்கினர் என்ற செய்தி நிலவி வருகிறது. இது தவறு. 14,15-ஆம் வம்சங்களில் பெருவாரியான தேர்களைக் கட்டி போர்களுக்கு பயன்படுத்த தொடங்கினர். எனினும் அதற்கு முந்திய காலங்களில் இருந்தே பாரோ மன்னர்களும் முக்கிய பிரதானிகளும் இரதங்களை சுயதேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனர்.

    நம்ஹோடப்
    (இடப்புற தெளிவான நபர்)

    பாரோ யோசேப்பை தனக்கடுத்த நிலையில் பணி அமர்த்தினான் என பைபிள் கூறுகிறது. எகிப்திய அரண்மனைகளில் மன்னனுக்கு அடுத்த அதிகாரங்கள் மதகுருகளுக்கும் அமைச்சர்களுக்கும் தரப்பட்டிருந்தன. எனினும் அமைச்சர்களைக் குறித்து அனைத்து ராஜவம்சங்களிலும் குறைந்த குறிப்புகளே உள்ளன. இரண்டாம் செனுசுரெத், மூன்றாம் செனுசுரத்  அரசாட்சிகளில் 'சொபெக்-எம்ஹத்', 'நம்ஹொடப்' என்ற இரு அமைச்சர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இருவரும் மூன்றாம் செனுசுரெத்தின் பிற்காலத்தை சார்ந்தவர்கள். நம்ஹொடப் அமைச்சர் பணியோடு மன்னனின் பிரதான உதவியாளராகவும் செயலாற்றிருக்கிறார். இதுவரை நம்மிடம் உள்ள எகிப்திய வரலாற்றில் அமைச்சராகவும், பிரதான உதவியாளராகவும் விளங்கிய ஒரே நபர் இவரே. நம்ஹொடப் யோசேப்பாக இருக்க வாய்ப்புகள் இல்லை. எனினும் 2ஆம், 3ஆம் செனுசுரத் மன்னர்களது காலங்களில் யோசேப்பு அமைச்சராகவும், பிரதான உதவியாளராகவும் பணியாற்றி ஓய்வுபெற்ற பின், நம்ஹொடப் அப்பணிக்கு உயர்த்தப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. 'பார்வோனுக்கு தகப்பன்' என்பது ஆன்மீக ஆலோசனைகளை எடுத்துக்கூறும் பணியைக் குறிக்கும்.
    ஆதியாகமம் 45:8 - "ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்து தேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார்"
    4) பஞ்சம் உண்டான காலம்:
    ஆதியாகமம் 41:48,49 - அவ்வேழு வருஷங்களில் எகிப்து தேசத்தில் விளைந்த தானியங்களை எல்லாம் அவன் சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டிவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்துத் தானியங்களைக் கட்டிவைத்தான். இப்படி யோசேப்பு அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப் போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது.
    எகிப்துஅரசி ஒருவரது கல்லறையில் தீட்டப்பட்டுள்ள
    சுவரோவியம் (கி.மு 13ஆம் நூற்றாண்டு)

    எகிப்தின் அறுவடை பணியை குறிக்கும் சுவரோவியம்.
    மெனா சமாதி, தெபெஸ் - கி.மு 1420

    தானியங்களை எடுத்துச்செல்லும் எகிப்தியர் - சுவரோவியம்
    மெனா சமாதி, தெபெஸ் - கி.மு 1420

    குறிப்பு: இம்மூன்று சுவர் ஓவியங்களும் பண்டைய எகிப்தின் வேளாண்மை பணிகளைக் குறிக்கவே இங்கு பதிக்கப்பட்டுள்ளன. யோசேப்பு காலத்தில் நிகழ்ந்த விளைச்சலை குறிப்பதாக எண்ணவேண்டாம்.

    யோசேப்பு காலத்தை ஒட்டி செய்யப்பட்ட
    ஒரு களஞ்சிய கட்டமைப்பு மாதிரி
    (கெய்ரோ அருங்காட்சியகம்)

    யோசேப்பு பணியிலிருந்த போது, செழிப்பான பருவங்களில் விளைந்த தானியங்களைத் திரட்டி கடற்கரை மணலைப் போல சேர்த்து வைத்தார். இதனால் பஞ்சம் உண்டான காலங்களில் எகிப்து தேசம் காப்பாற்றப்பட்டது என பைபிள் கூறுகிறது. எகிப்து தேசம் முழுவதும் அதிக கொள்ளளவு கொண்ட பண்டைய களஞ்சியங்கள் (குதிர்கள்) காணப்படுகின்றன. இக்களஞ்சியங்கள் பெருமளவான கோதுமை தானியங்களைக் கொள்ளும். கி.மு 2000-1800 காலக்கட்டங்களில் செய்யப்பட்ட களஞ்சிய கட்டமைப்பு மாதிரிகளும் எகிப்தில் பெரிதளவில் கண்டெக்கப்பட்டுள்ளன.
    7 வருட பஞ்ச காலத்தை
    கூறும் கல்வெட்டு

    ஆதியாகமம் 41: 53,54,56,57 - எகிப்து தேசத்தில் வந்த பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களும் முடிந்தபின், யோசேப்பு சொல்லியபடி ஏழு வருஷ பஞ்சம் தொடங்கினது.
    எகிப்து-மெசப்பொத்தோமிய தேசங்களில் ஏழு வருட பஞ்சம் நிகழ்ந்திருப்பதை பல தடயங்கள் உறுதி செய்கின்றன. நைல் டெல்டா பகுதியை ஒட்டி அமைந்துள்ள ஒரு கல்வெட்டு (Famine Stela) எகிப்தில் நிலவிய 7 வருட பஞ்சத்தைக் குறிப்பிடுகிறது. நைல் நதியில் நீர்வரத்து நின்று, எகிப்து தேசத்தில் பஞ்சம் கொடிதாகிறது. பஞ்சத்தின் கொடுமையை தாங்காத மன்னன் புரோகிதர்களை அழைத்து பரிகாரம் கேட்கிறான். மன்னனின் துயர்நீக்க புரோகிதர்கள் நைல்நதியை வணங்கி வந்தனர். அச்சமயம் நைல் நதிதேவன் தலைமை புரோகிதனின் கனவில் தோன்றி விரைவில் பஞ்சம் நீங்கும் என ஆறுதல் கூறுகிறான். விடியற்காலை எழுந்தவுடனே புரோகிதன் இச்செய்தியை அறிவிக்க, மன்னன் மகிழ்ந்து நைல் நதிதேவனுக்கு கோவில் கட்டினான். இவ்வாறு இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கதையில் காணப்படும் மன்னன் ஜோசர், தலைமை புரோகிதரின் பெயர் இம்ஹொடப். ஜோசர் மூன்றாம் வம்சத்தை சார்ந்த எகிப்திய பாரோ மன்னன் - கி.மு 2670 காலத்தை ஒட்டி வாழ்ந்துள்ளார். இவரது தலைமை மதகுருவாக இம்ஹோடப் விளங்கினார்). இது யோசேப்பின் கதையை ஒத்திருப்பதைக் காணலாம்.

    சில பைபிள் ஆய்வாளர்கள் யோசேப்பும் இம்ஹோடப்பும் ஒருவரே என கருத்து தெரிவிக்கின்றனர். இது தவறு. பைபிள் கூறுகின்ற காலக் குறிப்புகளைக் கணக்கில் கொண்டால் யோசேப்பு வாழ்ந்த காலம் கி.மு 19ஆம் நூற்றாண்டு என்று திட்டவட்டமாக தெளிவாகும். இம்ஹோடப் கி.மு 27ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் - யோசேப்பு பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் பணியாற்றியவர். யோசேப்பும், இம்ஹோடப்பும் ஒரே நபர் அல்ல. வேறுசிலர், பிற்கால இஸ்ரவேலர்கள் இக்கதையை திருத்தஞ்செய்து தங்களது இறைவனை போற்றிப் புகழ்ந்துள்ளதாக கருதுகின்றனர். இதுவும் தவறான கருத்து. இக்கதையில் கூறப்பட்டுள்ள ஜோசர், இம்ஹோடப் ஆகிய நபர்கள் யோசேப்பிற்கு முந்திய காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும், இக்கதை பைபிளிற்கு பின்பு எழுதப்பட்டது தான். இக்கல்வெட்டு கி.மு 332-இல் செதுக்கப்பட்டது. பைபிள் (ஆதியாகமம்) இக்கல்வெட்டிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது. ஜோசரும், இம்ஹோடப்பும் வாழ்ந்த காலத்தை (கி.மு-27ஆம் நூற்றாண்டு) ஒட்டி இக்கல்வெட்டு கூறுகின்ற கதைக்கு எவ்வித தடயங்களும் இதுவரை இல்லை. பிற்கால எகிப்தியர்கள் இக்கதையை ஜோசருக்கும், இம்ஹோடப்பிற்கும் இணைத்து எழுதிருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

    இக்கல்வெட்டைப் போலவே எகிப்திய பாப்பிரஸ் (pWien D6319) ஒன்று அத்தேசத்தில் நிலவிய 7 வருட பஞ்சத்தை கூறுகிறது. நெபர்காசேகர் என்ற பாரோவின் ஆட்சியில் கொடிய பஞ்சம் நிகழ்ந்ததாக இப்பாப்பிரஸ் கூறுகிறது. அச்சமயம் பாரோவின் சொப்பனத்தில் எகிப்தியரின் தேவன் தோன்றி தேசத்தின் கோவில்களைச் சீர்படுத்துமாறு கூறுகிறான். மன்னன் இணங்கி எகிப்தின் கோவில்களைச் சீர்படுத்த, நைல் நதியில் நீர்வரத்து உண்டாகி பஞ்சம் நீங்குகிறது. இக்கதையும் யோசேப்பு குறித்து பைபிள் கூறுகின்ற செய்திகளுக்கு ஒத்திருப்பதைக் காணலாம். நெபர்காசேகர் கி.மு2740-இல் வாழ்ந்தவர். யோசேப்பு பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன் இவர் எகிப்தை ஆண்டுள்ளார். ஆனால் நெபர்காசேகரைப் பற்றிய இக்கதை பைபிளிற்கு பின்பு எழுதப்பட்டது. நெபர்காசேகர் கனவு கண்டதையோ, அவரது அரசாட்சியில் பஞ்சம் உண்டானதையோ உறுதிபடுத்த கி.மு 28ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தடயங்கள் ஏதும் இல்லை. நெபர்காசேகர் மடிந்து 2000 ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய பிற்கால எகிப்தியர்களே (கி.மு 237) நெபர்காசேகர் காலத்தில் 7 வருட பஞ்சம் உண்டானதாக எழுதியுள்ளனர். ஆனால் இப்பாப்பிரஸ் ஒருவிதத்தில் மிக முக்கியமானது. இது ஒரு மொழிப்பெயர்ப்பு பிரதி. இச்செய்திகள் கி.மு 2055 -1650 காலங்களில் இருந்தே எகிப்தில் விளங்கியிருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். (இக்காலத்தில் தான் யோசேப்பு வாழ்ந்ததாக பைபிள் கூறுகிறது). எகிப்திய வட்டாரங்களில் இச்செய்திகள் காலப்போக்கில் மருவியிருக்கலாம்.

    எகிப்தில் எடுக்கப்பட்ட இவ்விரு தடயங்களும் 7 வருட பஞ்ச காலத்தையும், அதற்கு ஒரு சொப்பனத்தையும் தங்கள் கதைகளில் எடுத்துக்கூறுவதை தெளிவாக காணலாம். இவ்விரண்டு தடயங்களும் பைபிளிற்கு பின்பே எழுதப்பட்டுள்ளன. எனினும் பண்டைய எகிப்து மக்களிடையே 7 வருட பஞ்சத்தையும், அதோடு தொடர்புடைய ஒரு சொப்பனத்தையும் குறித்து நம்பிக்கைகள் விளங்கி வந்ததை இவை உறுதி செய்கின்றன. பஞ்சம் நிகழ்ந்த காலத்தைக் குறித்து அக்கால எகிப்தியர்களிடம் முரண்பாடு உள்ளதையும் இதனால் அறியலாம். எகிப்து மட்டுமின்றி, மெசப்பொத்திமிய கல்வெட்டுகள் சிலவற்றிலும், 7-வருட பஞ்சகாலம் குறித்து செய்திகள் காணப்படுகின்றன. கில்கமேஷ் காப்பியத்தில் 'அனு' என்ற தேவன் 7 வருட கொடிய பஞ்சத்தைக் குறித்து முன்னறிவிக்கிறான். பண்டைய மத்திய-கிழக்கு தேசங்களில் நிகழ்ந்த ஒரு கொடிய பஞ்சம் அக்கால மக்களிடையே அழியாத நினைவை ஏற்படுத்தியுள்ளது. இதனை இத்தடயங்கள் உறுதி செய்கின்றன.
    ஆதியாகமம் 41:57 - சகல தேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று; ஆனாலும் எகிப்துதேசம் எங்கும் ஆகாரம் இருந்தது. தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்து தேசத்தில் வரவரக் கொடிதாயிற்று. சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாய் இருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.
    5) யோசேப்பின் மரணம்:
    ஆதியாகமம் இறுதியாக யாக்கோபு, யோசேப்பின் மரணங்களை கூறுகிறது. இருவரது சரீரங்களும் சுகந்தவர்க்கமிட்டு பதனிடப்பட்டன. யாக்கோபின் பிரேதம் மக்பேலாவில் அடக்கஞ்செய்யப்பட்டது. யோசேப்பின் பிரேதத்தை சவப்பெட்டியில் கிடத்தி எகிப்திலேயே வைத்தனர். எனினும் மோசே எகிப்தை விட்டு செல்லும் போது யோசேப்பின் எழும்புகளை எடுத்துச் சென்றார்.
    ஆதியாகமம் 50: 1-3: அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தஞ்செய்தான். பின்பு, தன் தகப்பனுக்குச் சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர் இஸ்ரவேலுக்குச் சுகந்தவர்க்கமிட்டார்கள். சுகந்தவர்க்கமிட நாற்பது நாள் செல்லும்; அப்படியே அந்நாட்கள் நிறைவேறின. எகிப்தியர் அவனுக்காக எழுபதுநாள் துக்கம் கொண்டாடினர்.

    பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள சில மம்மிகள்
    பிரிட்டிஷ் அருங்காட்சியம், லண்டன்

    உள்ளுறுப்புகள் வைக்கப்பட்ட
    கற்ஜாடிகள் - லண்டன்
    எகிப்தின் ஈமச்சடங்குகளை (மம்மி) பைபிள் துல்லியமாக எடுத்துக்கூறுகிறது. பண்டைய எகிப்தில் உடலை பதப்படுத்தியே அடக்கஞ்செய்தனர். முதலில் இதயத்தை தவிர பிரேதத்தின் உள்ளுறுப்புகளை அகற்றி, அவைகளை தனி கற்ஜாடிகளில் வைத்தனர். பின் உறுப்புகள் நீக்கப்பட்ட பிரேதத்தை நன்கு வற்றச்செய்வர். நீர்வற்றிய பிற்கு, சோடியம் கார்பனேட்-பைகார்பனேட் கலவையை பிரேதத்தில் சேர்த்துக்கட்டி, வாசனைத் திரவியங்களைப் பூசி, சவப்பெட்டியில் கிடத்துவர். இப்பணிகளுக்கு நாற்பதுநாட்கள் தேவைப்படும். இறுதியாக கற்ஜாடிகளையும், சவப்பெட்டியையும் ஒரே பிரமிட் (அ) கல்லறையில் பாதுகாப்பாக வைத்தனர். இறந்தவருக்கு பிடித்த ஆடைகள், பொன்வெள்ளி ஆபரணங்கள், சிலைகள், சித்திரங்கள் என பலவிதமான பொருட்களையும் கல்லறையில் வைத்துவிடுவார்கள். இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவெனில், எகிப்தியர்கள் நூற்றுப்பத்து வயதை எட்டிய மூத்தமக்களை தீர்க்காயிசுள்ளவர்களாக கருதினர் (Aling 1981:51, note 25). யோசேப்பு 110 வருஷங்கள் வாழ்ந்தார் என பைபிள் கூறுகிறது.
    ஆதியாகமம் 50:23, 26 -  யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் அவன் மடியில் வளர்க்கப்பட்டார்கள்... யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்து வைத்தார்கள்.
    டெல்-எல்தாபா அகழ்வாராய்ச்சி பணிகள்
    எகிப்தின் 'டெல்-எல்தாபா' மாநிலப்பகுதிகளே பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள 'ராமசேஸ்' பட்டணம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இப்பகுதியில் 12ஆம் வம்சத்தைச் சார்ந்த அரண்மனை ஒன்று சிதைந்த நிலையில் உள்ளது. பன்னாட்டு வர்த்தகங்களை கண்காணித்த அரச அதிகாரி ஒருவர் இதில் வாழ்ந்துள்ளார். அரண்மனைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ள நிலத்தில் 12 கல்லறைகள் உள்ளன. இவைகளில் ஒரு கல்லறை உயர்ந்த அளவிலும், முற்பகுதியில் சிறிய கோவிலோடும், கொள்ளை அடிக்கப்பட்ட நிலையிலும் காணப்படுகிறது. எனினும் ஒரு சிலையின் உடைந்த தலைப்பகுதிகள் மட்டும் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.

    கல்லறையின் கட்டமைப்பு

    உடைந்த சிலைப்பகுதிகள்

    ராஜவம்சத்திற்கு உரிய எந்த சிற்பவேலைகளும் இச்சிலையில் இல்லை. உடலிற்கு மஞ்சள் நிறச்சாயம் பூசப்பட்டு காளான் வடிவ தலைமயிரோடு இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை ஆசிய ஆண்மக்களைக் குறிக்கும் எகிப்திய சிற்ப வேலைகள். இம்மனிதர் ஆசியாவை சேர்ந்தவர், எகிப்திய அரசுப்பணி வகித்தவர் என்பதை இத்தடயங்கள் விளக்குகின்றன. இவர் யோசேப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    குறிப்பு:


    காசுகள்?

    யோசேப்பு காலத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான எகிப்திய பொன், வெள்ளி நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக 'அல்-அஹ்ரம்' என்ற எகிப்தின் பிரபல தினசரி பத்திரிக்கை செய்திகள் வெளியிட்டுள்ளது. எகிப்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அடையாளம் காணப்படாத சிறுதொல்பொருட்களை இடமாற்றம் செய்யும்போது, யோசேப்பின் சித்திரமும் பெயரும் பொறிக்கப்பட்ட வட்டநாணயங்களைத் தற்செயலாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர் என இப்பத்திரிக்கை கூறுகிறது. இவைகளை ஆராய்ந்த டாக்டர் சையத் முஹமது என்ற தொல்பொருளாய்வாளர் ஒரு நாணயத்தில் பாரோவின் கனவை சித்திரிக்கின்ற வகையில் ஒரு பசுமாடு பொறிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். யோசேப்பின் மெய்யான பெயரும், சாப்நாத்பன்னேயா என்ற எகிப்திய பெயரும், உருவப்படமும் பொறிக்கப்பட்ட சில நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சையத் கூறுகிறார். சிலவற்றில் காலமும், எழுத்துக்களும் கூட பொறிக்கப்பட்டுள்ளதாக அல்அஹ்ரம் கூறுகிறது. அக்காலங்களில் எழுத்துமுறை வளர்ந்து வந்ததால் தற்போது அறியப்பட்டுள்ள பழமையான சித்திர எழுத்துக்களைக் கொண்டு நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள செய்திகளை ஆராய்ந்து வருவதாக சையத் கூறுகிறார். நாணயங்கள் கி.மு 8,7ஆம் நூற்றாண்டுகளில் தான் வழக்கத்திற்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதி வருகின்றனர். இச்செய்தி மெய்யென கண்டுபிடிக்கப்பட்டால், நாணயங்களின் காலம் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி போகும்! குர்-ஆனில் யோசேப்பின் காலத்தில் நாணயங்கள் இருந்ததாக செய்திகள் உள்ளன. 'அல்-அஹ்ரம்' குர்ஆனை ஒப்பிட்டு இச்செய்தியை வெளியிட்டுள்ளதால் இது சர்ச்சைக்குரியதாக உள்ளது.
    குர்ஆன் 12:20 - இதற்குள் அவருடைய சகோதரர்கள் ஓடிவந்து அவரை அவர்கள் எண்ணக்கூடிய சில வெள்ளிக் காசுகளுக்கு அற்பமான கிரயத்திற்கு விற்றுவிட்டார்கள். அவர் விஷயத்தில் அவர்கள் பற்றற்றவர்களாக இருந்தார்கள்.
    சில ஆய்வாளர்கள் குர்-ஆனை மெய்ப்படுத்த சையத் தவறான செய்திகளை முன்வைப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர். சிலர், அவை நாணயங்கள் அல்ல, நாணய வடிவில் செய்யப்பட்ட சேக்கல்கள், நினைவுபொருட்கள் எனக் கருதுகின்றனர். எனினும் இவை இன்றும் ஆய்விற்கு உட்பட்ட நிலையிலேயே உள்ளன. சையது முஹமது அவர்களின் செய்திகள் உறுதியாகும் வரை இவைகளை யோசேப்பிற்கு சான்றாக கருதவேண்டாம் என மேற்கத்திய திருச்சபைகள் தெரிவிக்கின்றன. இந்த நாணயங்கள் மெய்யானாலும், பொய்யானாலும் யோசேப்பு வாழ்ந்தார் என்பதில் எங்களுக்கு சந்தேகமில்லை.
    சங்கீதம் 19:7 - கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.

      உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...