செவ்வாய், 18 அக்டோபர், 2016



உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள் - தெரிந்துகொள்வோம்



உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருகிறேன்.
உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள் :-
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன.
10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin)
ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.
9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian)
இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.
8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian)
கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew)
இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.
6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic)
அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று
சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.
5 வது இடத்தில் சீன மொழி (Chinese)
சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.
4 வது இடத்தில் கிரீக் (Greek)

கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.
3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian)
ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit)
இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)

.5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமயான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.


கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அங்கு வாழ்ந்தனர். “Comparison of Badalian and primitive Indian Races” என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டியெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்று ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் உறுதி செய்கிறார். நைல் நதி என்பதும் ஒரு தமிழ் வார்த்தை தான். நீல நதி என்பது தான் நைல் நதியாக திரிந்துவிட்டது. தமிழர்கள் நீல நதி என்று சொன்னதைத்தான் அப்படியே Nilo (நீலோ) என இத்தாலியிலும், அதை Nile (நைல்) என்றுஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது.
இறந்தவர்களை புதைப்பது தமிழர் மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு.
எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர்.
அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = ”பெருமிடு” என்று அழைக்கப்பட்டது. அதுவே ‘பிரமிடு’ என்று ஆனது.
ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும் அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.
Edward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார். சிந்து சமவெளி பகுதியிலும் தமிழ் நாகரிகம் இருந்ததற்கான பல ஆதாரங்கள் உள்ளது….
Adolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.
siatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.
“Heinrich Kari Brugsh” – “History of Egypt” என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.
இதே கருத்தை Bengsch Bey என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்.

“எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது அய்யத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார். Louis Jacolliot (1837 – 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l”Inde)
LIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர் “எகிப்தின் முதல் வமிசத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர்” என்கிறார்.
ஆங்கிலம் தமிழிலிருந்து வந்தது !!!
ஆதாரம் இதோ...........
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்துவந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
==========================
தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !
The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button
உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .
லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் எழுதிய எழுத்து மொழி .
2015 ஆய்வுகளின் படி :
( Germany ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள் germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் ( europe ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் )
- சமஸ்கிரம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி . )
சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .
இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி
மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .
தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !
" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை !
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .
அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
இன்று யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் ( ஒன்று மட்டுமே உள்ளது ) கி. முன் 2000 .
தமிழ் இனத்தில் உள்ள தொன்மையான பல நூல்கள் : கி. முன் 3000 ; கி.முன் 5000 ;
கி. முன் 7000 நூலான தொல்காப்பியமும் உள்ளது .
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான் .

மரத்தை கட்டுவதால் கட்டு மரம்
இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் " கட்டு மரம் " தான் .
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்துவந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” -

 ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.


உலகத்திற்கான பொது நெறியை வழங்கிய ஒப்பற்ற ஆசான் வள்ளலார் பிறந்த நாள் அக்டோபர் 5, 1823.அடிகளாரின் வான்புகழை கொண்டாடுவோம்!

இந்து மதமும் சைவ மதமும் தழைத்தோங்கி இருந்த காலக் கட்டத்தில்வள்ளலார் இந்த சமயங்களில்உள்ள புராணங்கள்கட்டுக் கதைகள் முதலானவற்றில் லட்சியம் வைக்க வேண்டாம் என்றுஅறிவுறுத்தினார்ஆரியப் புராணங்களான இராமாயணம் மகாபாரதம் போன்றவற்றில் நேரத்தைவீணாக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்கடவுள் என்பவர் ஒருவரேபலர் அல்லஅவர் ஒளியின்ஊடாக அண்ட சாரசரங்கள் அனைத்திலும் உள்ளார்ஒளியை கடவுளாக பாவித்துஉயிர் இரக்கமேகடவுள் வழிபாடாக கொண்டு , அன்பும்தயவு சார்ந்த வாழ்கையை வாழப் பழகுதலே உலகில் நிரந்தரஅமைதியை நிலை நாட்டும்அதுவே சமரச சன்மார்க்க உலகத்தை உருவாக்கும் என்று வள்ளலார்போதித்தார்.
சாதிகள்மதங்கள்சமயங்கள்அனைத்தும் பொய் பொய்யே என்று அறுதியிட்டு கூறினார்சிறுதெய்வவழிபாடுசிலைகள் வழிபாடு வேண்டாம் என்றும் கூறி உலக மக்களுக்கு புதிய மார்க்கத்தைஏற்படுத்திக் கொடுத்தார்ஆரிய இந்து மதம் மக்களிடம் புகுத்தி வந்த நடைமுறைகளை முற்றிலும்மறுக்கச் சொன்னார் வள்ளலார்இறந்தவர்களை எரிக்க வேண்டாம் என்றும்இறந்தவர்களுக்கு திதிதவசம் முதலிய ஈமக் கிரியையை செய்தல் வேண்டாம் என்று அறிவுறுத்தினார்சிறு தெய்வ வழிபாடுசெய்தல் வேண்டாம் என்று சொன்னதோடு அந்த தெய்வங்களின் பேரில் உயிர் பலியிட வேண்டாம்என்றும் கூறினார்கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஒரு பூசகர் தேவை இல்லை எனவும் ,கடவுளை உண்மை அன்பால் நேரடியாக வழிபாடு செய்தல் வேண்டும் என்றும் , இயற்கை ஒளிவழிபாடே உண்மை வழிபாடு என்றும் போதித்தார்இயற்கையின் சகல சக்திகளையும் நேரே வள்ளலார்உள்வாங்கியதால்நாத்திகம் பேசுபவர்களை கடுமையாக கண்டித்தார் வள்ளலார்உண்மைக் கடவுளை,உண்மை அன்பால் வழிபாடு செய்தால் அக்கடவுளின் பூரண அருளை மனிதர்கள் பெறலாம் என்றும் ,இயற்கை அருளின் துணைக் கொண்டு என்றும் அழியாத பேரின்ப வாழ்வில் மனிதர்கள் என்றும்வாழலாம் என்று உலகிற்கு வழிகாட்டினர் வள்ளலார்.
மதம் என்னும் பேய் பிடித்து மக்களிடம் பல்வேறு நம்பிக்கையைபண்பாட்டை , மொழியை திணிக்கமுயலும் மதவாதிகளை கடுமையாக சாடுகிறார் வள்ளலார்சாதியும் மதமும் சமயமும் மனிதற்குஉண்மையை உணர்த்தாது துன்பத்தையே தரும் என்பதை தெளிவாக உணர்த்துகிறார வள்ளலார்.இப்படி ஒரு தெளிவான அன்பும் அற நெறியும் இயற்கை சார்ந்த ஒரு மார்க்கத்தை வள்ளலார் தவிரஉலகில் வேறு யாருமே இது வரை வழங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கதுதமிழ்நாட்டையும்இந்திய நாட்டையும் ஒரு மதத்தின் கீழ் கொண்டு வந்து மதவாதத்தை மக்களிடம் கட்டவிழ்த்து நாட்டைகலவர பூமியாக்கத் துடிக்கும் அத்தனை சக்திகளுக்கும் வள்ளலாரின் அறிவுரை தற்போது மிகவும்அவசியமாகிறது.
இவ்வாறு அரும்பெரும் கருத்துக்களை உலகிற்குவழங்கிய வள்ளலாரை போற்றுவது ஒவ்வொருதமிழரின் கடமையாகும்போற்றுவது மட்டுமல்லாதுஅவர் கூறிய வழியில் நாம் அனைவரும் நடக்கமுயற்சிக்க வேண்டும்தமிழகத்திற்கு தமிழ்மொழியில் அவர் வழங்கிய அருட்பாக்களை நாம்உலகில் உள்ள எல்லா மொழிகளிலும்மொழிபெயர்த்து கொண்டு செல்லவேண்டும்.குறிப்பாக இன வெறியை உமிழ்ந்து இந்தி,சமஸ்கிருத மொழியை அனைவரின் மீதும்திணிக்கும் ஆதிக்க வட இந்திய மக்களுக்குவள்ளலார் காட்டிய நன்னெறியை நாம் கொண்டுசெல்வோம்இந்திய ஒன்றியத்தில் நல்லாட்சி மலரஇந்திய அரசு வள்ளலார் காட்டிய அன்பு வழியில் பயணிக்க வேண்டும்அப்போது தான்கருணையில்லா இந்த ஆட்சி முடிவுக்கு வரும்நல்லாட்சி மலரும்அனைத்து மாநில மக்களும்நிம்மதியாக வாழ்வாங்கு வாழ்வார்கள்பேதங்கள் நீங்கி மனிதம் தழைத்து ஓங்கட்டும் ! வாழ்கவள்ளலாரின் வான்புகழ் !

பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல் 
கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநல் நட்பே ! 
அருட்பெருஞ்சோதி அகவல்

பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர்.

தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90 க்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார். சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். 


2200 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவில் சிறந்து விளங்கிய தமிழர்கள். மீன் சின்னத்துடன் 'பெருவழுதி' என்று பெயர் பொறிக்கப்பட்ட சங்க கால மோதிரம் கண்டுபிடிப்பு ! தமிழர்களுக்கு அறிவு இல்லை, வரலாறு இல்லை, தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி என்று தமிழையும் தமிழர்களையும் இழிவு படுத்தும் ஆரிய திராவிடர்களே, இந்த செய்தியை பாருங்கள் !

இந்திய கண்டத்திலேயே முதன் முதலில் எழுத்துக்களுடன் நாணயம் வெளியிட்டது தமிழர்கள் தான் என்று பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளது. இப்போது தமிழர்கள் வெளிநாட்டில் இருந்து வெள்ளியை இறக்குமதி செய்து அதில் மோதிரம் முதலான அணிகலன்களை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது . புறநானூற்றில் குறிப்பிடப்பட்ட பாண்டிய மன்னன் பெருவழுதியின் மீன் சின்னத்தையும் , பெயரையும் தமிழி எழுத்துருவில் பொறித்து கிமு இரண்டாம் நூற்றாண்டில் மோதிரம் உருவாகியுள்ளனர் தமிழர்கள்.

இந்த மோதிரத்தை தமிழ் வணிகர் ஒருவர் வைத்திருந்தார். இவரிடம் இருந்து மலையாள தொல் பொருள் ஆய்வாளர் பீனா என்பவர் வாங்கி இதில் உள்ள செய்தியை வெளிக்கொண்டு வந்துள்ளார். இவருக்கு நம் பாராட்டுகள். இந்திய தொல்லியல் துறையிடம் இருந்து தமிழக தொல்லியல் துறை இந்த அரிய கண்டுபிடிப்பை வாங்க வேண்டும். இப்படியான தமிழர் வரலாறு கூறும் தொல்லியல் பொருட்களை தமிழக அரசு அருங்காட்சியத்தில் வைத்து பாதுகாத்து வரும் தமிழ் தலைமுறைக்கு காட்ட வேண்டும். அப்போது தான் தமிழின் தொன்மையும், தமிழர்களின் அறிவாற்றல் பற்றியும் இப்போதுள்ள தலைமுறை அறிந்து கொள்வார்கள்.

உலகில் முதல் கப்பல் படை

உலகில் முதல் கப்பல் படையை நிறுவி,தெற்காசியா வரை சோழ கொடியை நாட்ட வழிவகுத்த தமிழ் மன்னன் இராஜஇராஜசோழனும் அவன் மகன் ராசேந்திர சோழனும் ஆவான்.

இவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய படகு பூம்புகார் கடற்கரையிலிருந்து 19 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்டு, சிதைந்த அக்கப்பலின் அடிப்படையில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம்உருவாக்கிய மாதிரிவடிவம் திருநெல்வேலி அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது
“தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்” என கடலோடி என்னும் நூலின் ஆசிரியர் நரசய்யா தெரிவிக்கிறார்.
உலகில் கப்பலை கண்டுபிடித்தவர்கள் மட்டுமன்றி கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கியவர்களும் தமிழர்களே என்று கூறப்படுகிறது. கப்பல் கட்டுமானத்தில் வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர். காற்றின் திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியுள்ளார்கள்
இதே போல் தென்பசிபிக்மா கடலில், ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் அது 2500 வருடங்களுக்கும் மேல் பழமையானது என்றும், இது தமிழருடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது “தமிழ் மணி” என்ற பெரிலேயே நியூஸிலாந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பல்லவர் காலத்து கப்பல் பொறித்த நாணயம் கண்டுபிடிக்கப்பட்டது
கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில், “கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காக வருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவுக்கு வரும்.
ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால் இவ்வளவு தூரத்தை குறுகிய காலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டத்தின் உதவியுடன் பல்லாயிரம் கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மை தெரிந்தது. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயற்கைக் கோள் உதவியுடன் பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன. ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும், மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருக்கிறது” என்று தெரிவித்தனர்.
உதாரணம்:
தமிழா————-மியான்மர்.
சபா சந்தகன்—–மலேசியா
ஊழன், சோழவன், வான்கரை, ஒட்டன்கரை,
ஊரு——–ஆஸ்திரேலியா
கடாலன்————ஸ்பெயின்
நான்மாடல் குமரி———-பசிபிக் கடல்
சோழா,தமிழி,பாஸ்——–மெக்ஸிகோ
திங்வெளிர்——————–ஐஸ்லாந்து
கோமுட்டி———————-ஆப்பிரிக்கா.
இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்து அதன் மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.
புழக்கத்தில் இருக்கும் “NAVY” என்ற ஆங்கில வார்த்தை “நாவாய்” என்ற நம் கப்பல் படையின் பெயரில் இருந்து வந்த வார்த்தையே ஆகும்!! இவ்வளவு பெருமைகளை கொண்ட நம் வரலாறு எத்தனை “தமிழர்களுக்கு” தெரிந்திருக்கும் ? நமக்கே இது தெரியாத போது உலகத்திற்கு எப்படி தெரியப்படுத்த முடியும்?
கப்பல், கடல் கலங்கள் வகைகள்
கட்டுமரம்
நாவாய்
தோணி
வத்தை
வள்ளம்
மிதவை
ஓடம்
தெப்பம்
டிங்கி
பட்டுவா
வங்கம்
அம்பி – பயணிகள் சென்றுவர பயன்படுத்தப் பட்ட நீருர்தி
திமில் – பெரும்பாலும் மீன்பிடிக்கப் பயன்பட்டது.
லெப்டினன்ட் வாக்கர் எனும் ஆங்கிலேயர் கி.பி.1811ல் நமது கப்பல்களைக் கண்டு பின்வருமாறு வியந்து கூறினார்…… பிரிடிஷ்காரர்கள் கட்டிய கப்பலை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மராமத்து செய்தே தீர வேண்டும்…… ஆனால் தமிழர்கள் கட்டிய கப்பலுக்கு 50 ஆண்டானாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை.
ஆங்கிலேயர் வருவதற்கு முன்பிருந்தே சிறிதுசிறிதாக ஒதுங்கிய நம் கப்பற்கலைஆங்கிலேயர் வந்தபின் அவர்களின் சுரண்டலில் இறுதியாகச் சமாதியில் இடப்பட்டுவிட்டது.
உலகின் சிறப்பு வாய்ந்த இந்த ஆயிரம் வருட அற்புதமான கப்பல் படையை பற்றிய சில அற்புதமான தகவல்கள்
இந்த கப்பல்களானது போர்க்கருவிகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது .இந்த கப்பல் படை நிறைய குழுக்களை கொண்டிருந்தது.
அனைத்து குழுவிற்கும் தலைவர் “அரசர்”.
* இதில் “கனம்” என்பது தான் தலைமைப் பிரிவாக செயல்பட்டது (நிறைய போர் வீரர்களை கொண்ட குழு)
இதை நிர்வகிப்பவர் “கனாதிபதி”.
* “கன்னி” (போர் நேர / சிறப்பு பணிக்கான குழுமுதல்), இதை நிர்வகிப்பவர் உயரிய “கலபதி”, (“கன்னி” என்பது தமிழில் “பொறி” என்று கூட பொருள் படும்)
இந்த குழுவின் செயலானது எதிரிகளை ஒரு இடத்தில லாவகமாக வரவழைத்து (எலி பொறியில் சிக்குவதைப் போல) பின்பு அங்கு கூடி இருக்கும் தங்கள் நாட்டு பெரும் படையிடம் சிக்கவைத்ததும் இவர்கள் பணி முடிந்து விடும், மிச்சத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!
* “ஜதளம்” சுருக்கமாக “தளம்” (நிரந்தரப்போர் பிரிவு)
இதை நிர்வகிப்பவர் “ஜலதலதிபதி”, இது ஒரு சிறிய மிக சக்திவாய்ந்த குழுவாக செயல்பட்டது.
* “மண்டலம்” (பாதி நிரந்தர போர்ப்பிரிவு)
இதை நிர்வகிப்பவர் “மண்டலாதிபதி” இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும், இவர்கள் தனித்தனியாக மற்றும் குழுவாக சென்று போர் புரிவதில் வல்லவர்கள்!
* “கனம்” (நிரந்தர பிரிவு ) 100 முதல் 150 கப்பல்கள் கொண்ட பிரிவு, மூன்று மண்டலங்களை உள்ளடக்கியது ஒரு கனம்! பெரும் பாலும் பெரிய போர்களுக்கு மட்டுமே இந்த குழு செயல்பட்டது!
* “அணி” இதை நிர்வகிப்பவர் “அணிபதி”
மூன்று கனங்களை கொண்ட பிரிவு, அதாவது இந்த பிரிவில் சுமார் 300 முதல் 500 கப்பல்களை வரை இருந்தது! மிக பெரிய பலமான ஒரு பிரிவாக இது செயல் பட்டது.
* “பிரிவு” மிக முக்கியமான பிரிவு இது,
இதை நிர்வகிப்பவர் இளவரசர் அல்லது மன்னருக்கு மிகவும் வேண்டப்பட்டவர், இவர்களை திசைக்கு ஏற்றவாறு அழைப்பர் உதாரணத்திற்கு கிழக்கு திசையில் போர் நடந்தால்
* “கீழ்பிரிவு-அதிபதி / தேவர்” என்று அழைத்தனர். இது தான் உச்சகட்ட அதிபயங்கர பிரிவாக செயப்பட்டது, உதாரணத்திற்கு இன்று நவீன ஆயுதங்களை வைத்து போர் புரிவது போன்றது.
இந்த கப்பல் படையை வைத்து தான் “இலங்கை”, “இந்தோனேசியா”, “ஜாவா”, “மாலைதீவு”, “மலேசியா”, “சிங்கப்பூர்” போன்ற அனைத்து நாடுகளையும் இம் மன்னன் கைப்பற்றினான்! இவை அனைத்துமே ஆயிரம் வருடங்களுக்கு முன்! இன்றைக்கு இருக்கும் கப்பல் படையில் கூட இவ்வளவு பிரிவுகள் உள்ளதா என்பது சந்தேகம்தான்

திங்கள், 17 அக்டோபர், 2016

பேசப்பட்ட மொழி என்னவென்று இன்னும் அறியப்படாமல்/மறைக்கப்பட்டு வருகிறது.
உண்மையில் சிந்துவெளியில் நடப்பில் இருந்த மொழி ஆதி திராவிட மொழி என்று கூறுவதை விட பழந்தமிழ் மொழி என்று கூறுவதே மிகப் பொருந்தும்.
இதற்கான சான்றுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைத் தூக்கத் தொடங்கி விட்டன..
மயிலாடுதுறையில் சிந்துவெளி எழுத்துக்கள்
மயிலாடுதுறையில் கண்டறியப்பட்ட 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடாரி
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்�� �ு பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது என்பது ஐராவதம் மகாதேவன் கருத்து. இதன் காலம் கி.மு. 2000 - கி.மு. 1500 ஆகும். காவிரிக்கரையில் சிந்துசமவெளி சின்னங்கள்
தமிழ்நாட்டின் காவிரி கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட�� �டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக் கப்பட்ட சிந்து சமவெளி நாகரிக குறியீடுகளைப்போன�� �றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கி�� �ார்.




அனைவரும் அறிய வேண்டிய அரிய செய்தி!!!

அண்மையில் பாகிஸ்தானில் தனியார் தொகுப்பில் திரட்டி வைக்கப்பட்டிருந்த ஒன்பது செப்பேடுகள் வெளிவந்தன. சிந்துவெளி எழுத்தில் அமைந்த இந்த செப்பேடுகள் 2011 ஆம் ஆண்டில் ரிக்கு வில்லிசு என்பவரின் பார்வைக்கு வந்தன. XRF என்னும் அறிவியல் காலக்கணிப்பு முறையில் ஆராய்ந்து இதன் காலம் கி.மு 2600 – கி.மு 2000(4000 ஆண்டுகள் முந்தையது) என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த செப்பேடு தமிழில் 34 குறியீடுகளை கொண்டுள்ளது. வடிவத்திலும் மிக பெரியது. இதுவரை 5000 தமிழ் செப்பேடுகள் சிந்துவெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த செப்பேட்டில் கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து உயிர் பிழைத்து வந்த நக்கணியனைப்பற்றி குறிக்கப்பட்டுள்ளது. செப்பேட்டின் இடப்புறத்தில் குள்ளநரித் தலையோடு ஓக நிலையில் அமர்த்த சித்தரின் உருவம் நக்கநியனைக் குறிப்பதாக இருக்கலாம்.
செப்பட்டில் இருக்கும் சொற்றொடர் :-” கூனயத்தம் சாஞ்சகன் அப்புந்தி தங்கவிகைப் பண்ணன் புணையன் காளண்ணன் பண்ணிவச்ச கப்ப(ல்) அவில்ந்து (அமிழ்ந்து) வந்த நக்கனியன் ”
பொருள் :- கூனயத்தம் என்பது ஊர்ப்பெயர். அவ்வூரில் வாழ்ந்த ‘ ‘சாய்ந்தகண் அப்புந்தி தண்கவிகை பண்ணன் ‘ என்பவனுக்கு காளண்ணன் என்னும் கப்பல் கட்டுபவன் புணையாக அதாவது உற்ற தோழனாக இருந்தான். காளண்ணன் கட்டிய கப்பல் கடலில் கவிழ்ந்தது. அதிலிருந்து உயிர் பிழைத்து வந்த நக்கணியன் என்பதே இந்த செப்பேட்டில் கூறப்பட்டுள்ள செய்தியாகும்.
இது 14 தமிழ் சொற்களை கொண்ட நெடுந்தொடர். இதனை மிகப்பெரிய கண்டுபிடிப்பாக கருதலாம். இந்த செப்பேட்டின் இடது புறத்தில் குள்ளநரி முகம் கொண்ட ஓக நிலையில் அமர்ந்த சித்தரின் உருவம் உள்ளது.
இதிலிரு ந்து இரண்டு செய்திகள் கிடைக்கிறது. 4000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் கப்பல் கட்டி கடலை ஆட்சி செய்துள்ளனர் மற்றும் ஓக கலையில் அப்பொழுதே சிறந்து விளங்கியுள்ளனர்.
இத்தகவல் பேராசிரியர் இரா.மதிவாணன் எழுதிய “சிந்துவெளியில் கிடைத்த முந்துதமிழ்ச் செப்புப் பட்டயம் ” என்னும் கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது.






வெள்ளி, 10 ஜூன், 2016

முதல் மொழி, பாபேல் கோபுரம் குறித்த சுவாரசியங்கள்

இன்று உலகில் 6000த்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. சில எழுத்து வடிவம் பெற்றுள்ளன, சில எழுத்து வடிவம் பெறவில்லை. சில மிகவும் பழமையானவை, மற்றவை பிற்காலத்தில் தோன்றியவை. சில இன்றும் நிலைத்து நிற்கின்றன, சில காணாமல் போய்விட்டன. இந்த மொழிகள் எல்லாம் எப்படி தோன்றின? இத்தனை மொழிகள் தானாக தோன்றுவது என்பது சாத்தியமா? இதற்கு ஆய்வியல் கூறும் பதில் "இல்லை" என்பதே. அப்படி என்றால் இந்த மொழிகள் எப்படித்தான் தோன்றின?

ஏற்கனவே உள்ள ஒரு மொழியில் இருந்து பிரிந்து, காலப்போக்கில் வேறுபட்டு புதிய மொழிகள் உருவாகுகின்றன. உதாரணத்திற்கு மலையாளத்தை எடுத்து கொள்ளலாம். மலையாளம் தமிழில் இருந்து பிரிந்தது என்பது ஆய்வின் முடிவு. சேர நாட்டு மக்களின் தமிழ் காலபோக்கில் உச்சரிப்பில் வேறுபட்டு 'மலையாளம்' என்ற புது மொழியாகவே மாறிவிட்டது. மலையாளம் சிறிது காலங்கள் முன்பே எழுத்து வடிவம் பெற்றது. இது போலதான் உலகில் இருந்த மொழிகள் எல்லாம் வேறுபட்டு ஒவ்வொன்றாக தோன்றின. இப்படி ஒவ்வொரு மொழியின் தோன்றலையும் நோக்கி கொண்டே வந்தால் அவை ஒன்றன் கீழ் ஒன்றாக இடம்பெற்று குறைந்து கொண்டே வருகின்றன (உதாரணத்திற்கு: மலையாளம் தமிழின் கீழ் வருவது போல்); இன்று வரை 8 மொழிகளாக குறைக்கப்பட்டுள்ளன. இந்த மொழிகளில் இருந்ததே இன்றிருக்கும் அத்தனை மொழிகளும் காலப்போக்கில் வேறுப்பட்டு பிரிந்து தோன்றியிருக்கலாம். இந்த மொழிகளைத் தான் செம்மொழிகள் என்போம்.

"செம்மொழி என்பது ஒரு மொழியின் இலக்கியப் பழமை அடிப்படையிலும் பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத் தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்" - தமிழ் விக்கிபீடியா

இன்று உலகில் உள்ள 8 செம்மொழிகள் - கிரேக்கம், லத்தீன், தமிழ், ஹீப்ரு, அரபி, சீனம், சமஸ்கிருதம், பாரசீகம். இந்த எட்டு மொழிகளும் வேறெந்த மொழிகளையும் சார்ந்திருக்கவில்லை. ஆனால் உலகில் உள்ள மற்ற அத்தனை மொழிகளும் இந்த மொழிகளில் இருந்தே பிரிந்து வந்திருக்கின்றன என்பது ஆய்வு முடிவு. 6000த்திற்கும் மேற்பட்ட மொழிகள் சிறிது சிறிதாக வடிகட்டப்பட்டு இறுதியாக எட்டே மொழிகளாக குறைக்கப்பட்டுள்ளன. இந்த மொழிகளில் எது முதன்மையானது? அதனை கண்டுபிடித்துவிட்டால் முதல் மொழி எது என்பது தெரிந்துவிடும். ஆனால் ஒரு உண்மை, இந்த எட்டு மொழிகளும் தொடர்பற்று விளங்குகின்றன. இந்த எட்டு மொழிகளுக்கும் கீழ் குறைப்பது மிகவும் கடினம். இந்த மொழிகளின் எழுத்துக்கள் கொண்ட பழங்கால சுவடுகள், கல்வெட்டுகள், ஓலைசுவடிகள் சில கிடைத்துள்ளன. ஆனால் அவை 5000 வருடங்களுக்கு உட்பட்டவை (அதவாது கி.மு 3000). 5000 வருடங்களுக்கு முன்பு விளங்கிய ஏதாவது சுவடுகள் இந்த மொழிகளுக்கு உள்ளதா என்று பார்த்தால், "ஒன்று கூட இல்லை".

ஆனால் 5000 வருடங்களுக்கு முன்பு முற்றிலும் வேறுப்பட்ட மொழிகளுக்கான தடயங்கள் உள்ளன. ஆதாரங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. அந்த மொழிகள் இன்று உலகில் இல்லை. முற்றிலுமாக பழக்கத்தில் இருந்து அழிந்துவிட்டன. அவை தான் பண்டைய எகிப்து-சுமேரிய சமவெளி நாகரீக மொழிகள். இந்த மொழிகள் எல்லாம் முற்றிலும் வேறுபட்டவை அல்ல. தொடர்புடையதாக விளங்குகின்றன. 

முதல் மொழி
முதல் மொழி

எனவே இந்த மொழிகள் எல்லாம் ஒரே மொழியில் இருந்து பிரிந்து வந்திருக்கக்கூடும். மேலும் சுமேரிய சமவெளி பகுதி ஆசியா ஆப்ரிக்கா ஐரோப்பா ஆகிய 3 கண்டகளுக்கு நடுவில் சரியாக அமைந்துள்ளது. எனவே இங்கிருந்து மூன்று கண்டுகளுக்கும் மொழிகள் பரவியிருக்க வாய்ப்புகள் மிகுந்து காணப்படுகின்றன. 


சுமேரிய சமவெளி பகுதி

இன்னும் சிறிது காலம் பின்னோக்கி சென்றால் கிட்டத்தட்ட மொழிகளுக்கான தடயங்களையே காணவில்லை. ஆய்வியலில் கண்டுகொள்ளப்பட்ட கி.மு 3000 என்ற காலமும், சுமேரிய சமவெளி என்ற பகுதியும் இன்றுள்ள அத்தனை மொழிகளுக்கும் விடைகள் தருகின்றன. அது என்ன?

"பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது. ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம் பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக் கண்டு, அங்கே குடியிருந்தார்கள். அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது. பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப் போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார். அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத் தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள். நாம் இறங்கிப் போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப் பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப் போகப் பண்ணினார்" - பைபிள் (ஆதியாகமம் 11:1-10)

சிநெயார் சமபூமி - சுமேரிய சமவெளி பகுதிகளுக்குள் உட்பட்டது. பைபிளில் இந்த சம்பவம் நிகழ்ந்தது கி.மு 4000 - கி.மு 2000 என்ற கால அளவிற்குள் வருகிறது. 'பாபேல்' என்பது பாபிலோனை (இராக் நாட்டில் உள்ள பழமையான நகரம்) குறிக்கலாம். சுமேரிய சமவெளி பகுதிகளில் ஜிக்கருட் என்ற பழமையான கோபுரங்கள் காணப்படுகின்றன. சுமேரிய சமவெளியில் தான் பாபிலோனும் உள்ளது. பாபிலோனிலும் பழமையான ஜிக்கருட் கோபுரம் ஒன்று காணப்படுகின்றது. அதன் பெயர் எடேமேனாங்கி. இந்த கோபுரத்தை எழுப்பினவர் நேபுகாத்நேச்சார் என்ற மன்னர். பைபிளில் கூறப்பட்டுள்ள பாபேல் கோபுரம் நேபுகாத்நேச்சார் எழுப்பின ஜிக்கருட் கோபுரம் என்று கூறப்படுகிறது. இதற்கு பல தடயங்கள் ஒத்து வருகின்றன.

பாபிலோன் ஜிக்கருட் கட்டமைப்பு
பாபிலோன் ஜிக்கருட் கட்டமைப்பு


நேபுகாத்நேச்சார் மன்னன் வாழ்ந்த காலம் கி.மு 600. பாபேல் கோபுரம் கட்டப்பட்ட காலம் கி.மு 4000 - கி.மு 2000. நேபுகாத்நேச்சார் மன்னர் ஏற்கனவே இருந்த முழுவதாக கட்டி முடிக்கப்படாத ஒரு சிதைந்த பழமையான கோபுரத்தையே மீண்டும் சீர்படுத்தி எடேமேனாங்கி என்ற கோபுரமாக கட்டினதாக கல்வெட்டு ஒன்று அருகில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், 'எனுமா எலிஸ்' என்ற பாபிலோனிய பழங்கால சுவடு கி.மு 3000 காலத்திலேயே பாபிலோனில் சிதைந்த கட்டிமுடிக்கப்படாத கோபுரம் ஒன்று இருந்ததாக கூறுகிறது. எனவே முழுவதும் கட்டி முடிக்கப்படாமல் விடப்பட்டு, சிதைந்து இருந்த கோபுரம் பைபிள் கூறும் பாபேல் கோபுரமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். நேபுகாத்நேச்சார் அவரது ஆட்சி காலத்தில் இஸ்ரேல் யூதேயா பகுதிகளின் மீது போர் புரிந்து வெற்றி பெற்று அந்த பகுதிகளை தன் கட்டுப்பட்டிற்குள் கொண்டு வந்தவர். இஸ்ரேல் மக்கள் பலரை தன் நாட்டிற்கு அடிமைகளாக கொண்டு சென்றார். அங்கு சென்றாலும், இஸ்ரேல் நாட்டு மக்கள் தங்கள் தெய்வமான கர்த்தரை மட்டும் வழிபட்டு வந்தனர். நேபுகாத்நேச்சார் இஸ்ரேல் நாட்டு அடிமை கைதிகளை தங்கள் தெய்வங்களை வழிபடுமாறு நிர்பந்தித்தார். 


மேற்கோள்:
"நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளாமலும் இருந்தது மெய்தானா? இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும் போது, தாழ விழுந்து, நான் பண்ணி வைத்த சிலையைப் பணிந்து கொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்து கொள்ளாதிருந்தால் அந்நேரமே எரிகிற அக்கினிச் சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப் போகிற தேவன் யார் என்றான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்; விடுவிக்காமற் போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்" - தானியேல் 3:14-18 (பைபிள்)
 

நேபுகாத்நேசர் படம் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு
நேபுகாத்நேசர் படம் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு

அவருக்கு இஸ்ரேல் மக்களின் கர்த்தர் மீது ஒரு வித வெறுப்பு இருந்தது. இதன் காரணமாக கர்த்தர் கட்டவிடாமல் தடுத்த பாபேல் கோபுரத்தை அவர் மீண்டும் எழுப்பி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அந்த கோபுரத்தை 'மர்துக்' என்ற தன் தெய்வத்திற்கு ஆலயமாக மாற்றியிருக்கிறார். "மர்துக் தான் தெய்வங்களில் பெரியவன் " என்று பொறித்து வைத்துள்ளார். இதனால் அவருக்கு கர்த்தர் மேல் இருந்த வெறுப்பு தெளிவாகிறது. அது மட்டும் இன்றி அவர் கற்களில் பொறித்து வைத்துள்ள சில செய்திகள் கீழே:

"நான் கட்டின இந்த கோபுரம் நிரந்தரமானது. நான் வெள்ளியாலும், தங்கத்தாலும், உலோகங்களாலும், கற்களாலும், செங்கற்களாலும், மரங்களாலும் கட்டி முடித்து பிரமிக்க வைத்து விட்டேன். இதுதான் பூமியின் முதல் கட்டிடம், பாபிலோனின் பழமையான கோபுரம். நான் கட்டி விட்டேன் கட்டி முடித்து விட்டேன். செங்கற்களால் மேல்பகுதியை கட்டி செப்பு தகடுகளால் மூடி அலங்கரித்து விட்டேன். அனைவரிடமும் சொல்லுங்கள் - இந்த கம்பீரமாக கட்டிடம் உலகத்திற்கு ஏழு வெளிச்சங்களை வீசும்; இதுதான் பொர்ஷிப்பாவின் பழமையான சிகரம். இதனை முன்னிருந்த ஒரு அரசன் கட்டினான் ஆனால் அவனால் மேல்பகுதி வரை கட்டி முடிக்கவில்லை. காலபோக்கில் மக்களும் மறந்து தள்ளிவிட்டனர். அதனை பற்றி பேசாமல் இருந்துவிட்டனர். அன்றிருந்து நிலநடுக்கங்களும், வானில் இருந்து விழுந்த இடிகளும் அந்த கட்டிடத்தை சிதைத்துவிட்டன. அந்த கட்டிடத்தின் செங்கற்கள் உடைந்து போயின அதன் அஸ்திவாரங்கள் பிளவுண்டு போயின. தெய்வங்களில் பெரியவனான மர்துக் அந்த கட்டிடத்தை சீர்படுத்த சொல்லி என் மனதை ஏவினான். நான் அந்த கட்டிடத்தை இடம் மாற்றவும் இல்லை, அதன் அஸ்திவாரங்களை அகற்றவும் இல்லை. ஒரு நல்ல மாதத்தில் நல்ல அதிர்ஷ்டமான நாளில் அதன் மேல் செங்கற்களை அடுக்கி கட்டி முடித்துவிட்டேன். இதில் என் பெயரையும் பொறித்துவிட்டேன்" - கல்வெட்டு

"நான் எடேமேனாங்கியை, பாபிலோனின் ஜிக்கருட்டை கட்டி முடித்து விட்டேன். உலக மக்களுக்கு ஒரு அதிசயமாக அதனை கட்டி விட்டேன். அதன் மேல்கூரையை வானளவு உயர்த்தி விட்டேன், சொர்கத்தின் கதவுகளை எட்டும் அளவிற்கு அமைத்து விட்டேன். நான் அதை செங்கற்களாலும் நீலக்கீலாலும் செய்து முடித்து விட்டேன்" - கல்வெட்டு

இந்த வாக்கியங்கள் பைபளில் உள்ள பாபேல் கோபுரத்தின் குறியீடுகளோடு பொருந்துகின்றன.

நேபுகாத்நேச்சார் காலப்போக்கில் இஸ்ரேலின் தெய்வமான கர்த்தரை ஏற்றுக் கொண்டதாக பைபிள் கூறுகிறது. தன் அகந்தையை கர்த்தர் அடக்கினதாக நேபுகாத்நேச்சார் பைபிளில் ஒரு பகுதியில் கூறுகிறார்.

"நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப் படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும்" - தானியேல் 4:31

நேபுகாத்நேச்சார் எழுப்பின எடேமேனாங்கி ஜிக்கருட்டை பண்டைய சரித்திர ஆசிரியர் ஹெரோடாடஸ் கண்டு பிரமித்து போனதாக எழுதிவைத்துள்ளார். பின்பு, மாவீரன் அலெக்ஸாண்டர் தன் காலத்தில் (கி.மு 300) இந்த கட்டிடத்தை படையெடுப்பின் காரணமாக அழித்துவிட்டார். இன்று நம் பார்வைக்காக சிதைந்த நிலையில் ஒரு சில பகுதிகளே உள்ளன.

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...