புதன், 31 ஜனவரி, 2018

இயேசுவைக் கொன்ற யூத தேசியம்



கிருத்துவ சமயத்தின்நம்பிக்கைகளைக் குறித்தேநாம் இங்கே ஒவ்வொன்றாய்கண்டு வந்துகொண்டிருக்கின்றோம்.அந்த வரிசையில் நாம்இப்பொழுது இயேசு கிருத்துபலியானதைப் பற்றியே வேண்டியிருக்கின்றது.

மக்களின் பாவத்திற்காகஇயேசு மனிதனாக வந்துபலியானார் என்பதேஇன்றைக்கு கிருத்துவசமயம் கொண்டிருக்கும்நம்பிக்கையாகும்மனிதர்களின் பாவத்திற்காக அவர் தனது இரத்தத்தைச் சிந்தினார்என்றே இன்று பெரிதும் போதிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றதுஅந்தநம்பிக்கையையும் போதனையையும் பற்றி நாம் பின்னர் மெதுவாய் காணலாம்,ஆனால் இப்போதைக்கு நாம் முக்கியமாக காண வேண்டிய விடயம் என்னவென்றால்'இயேசு தன்னைத்தானே பலியாகத் தருவதற்காகத் தான் மனிதனாக வந்தார் என்கின்றஅந்த விடயத்தைஇயேசு உயிரோடு வாழ்ந்த காலத்தில் யார் யார் அறிந்திருந்தார்கள்'என்பதே ஆகும்.

இயேசு பலியாவதற்காக வந்திருக்கின்றார் என்பதை இயேசுவின் சீடர்கள்அறிந்திருந்தார்களா?

இல்லைஇயேசு மரணிப்பார் என்பதை அவர்கள் சிறிதும் கூட எண்ணியிருக்கவில்லை. 'நான் எருசலேமில் சித்திரவதை செய்யப்பட்டு மரணிப்பேன்என்று இயேசு அவர்களிடம்முன்கூட்டியே கூறிய பொழுதுஅவரை தனியே அழைத்து 'அப்படி எல்லாம் நடக்காதுஆண்டவரே!' என்று பேதுரு கூறியது இதனை மெய்ப்பிக்கின்றதுஇயேசு தங்களுடையயூத இராஜ்யத்தை மீட்டுக் கொடுத்து அதற்கு அரசராவார் என்றும் தாங்கள் அவருடையமந்திரிகளாக இருப்போம் என்பதே அவர்களின் நம்பிக்கையாக இருந்ததுஎனவேஇயேசு பலியாவதற்காக வந்திருக்கின்றார் என்பது அவருடைய சீடர்களுக்குத்தெரியாது.

இயேசுவின் சீடர்களுக்கே தெரியாது என்ற பொழுது இயேசு பலியாவதற்காகத் தான்வந்திருக்கின்றார் என்பது வேறு யாருக்குத் தெரிந்திருக்க கூடும்எவருக்கும்தெரிந்திருக்காது.

இயேசு ஒருவருக்கு மட்டுமே தான் அவர் பலியாவதற்காக வந்திருக்கின்றார் என்பது,அதாவது தன்னை கொலை செய்வார்கள் என்பது தெரியும்இயேசுவின் மரணத்திற்குபின்னர்பவுல் அவர்கள் எழுதிய நடபடிகளில் தான் இயேசு பலியானார் என்ற விடயம்பொதுவாக வெளி வருகின்றதுஅதனைப் பற்றி நாம் விரிவாக வேறு பதிவுகளில்காணலாம்இப்பொழுது நாம் காண வேண்டியது இயேசு உயிருடன் இருந்தகாலகட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றி மட்டுமே தான்எனவேஇயேசு உயிருடன்இருந்த காலத்தில் அவர் பலியாவதற்காக வந்திருக்கின்றார் என்பதனை அவரைத் தவிரவேறு எவரும் அறிந்திராத காரணத்தினால், 'இயேசு பலியானார்என்று நாம் இன்றுஅறிந்திருக்கும் விடயத்தினை தூக்கி ஒரு ஓரமாக வைத்து விட்டுஅன்று மக்கள்அறிந்திருந்த விடயமான 'இயேசு கொலை செய்யப்பட்டார்என்பதனையே நாம்கருத்தில் இப்பொழுது எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றதுஅவ்வாறு நாம்பார்க்கும் பொழுது நம் முன்னே ஒரு கேள்வியானது புறந்தள்ள முடியாத வண்ணம்முக்கியமானதொன்றாக நின்று கொண்டிருக்கின்றது. 'இயேசு எதற்காக கொலைசெய்யப்பட்டார்?' என்ற கேள்விதான் அது.

'இயேசு எதற்காக கொலை செய்யப்பட்டார்?' என்கின்ற கேள்விக்கு வருகின்ற நேரடியானவிடை என்னவென்றால், 'இயேசு தன்னைதானே இறைவனின் மகன் என்று கூறிக்கொண்டமையினால் கோபப்பட்ட யூத சமய மதகுருக்கள்இயேசு இறைவனை நிந்தித்துவிட்டார் ஆகையால் தங்களுடைய சட்டத்தின்படி அவர் மரணமடைய வேண்டும் என்றுகூறி அவரை சிலுவையில் அறைந்து கொல்லுமாறு ரோமர்களை நிர்பந்தித்தனர்என்றேதான் வருகின்றது.  விடையினைத் தான் நாம் மேலும் கவனமாக காணவேண்டியிருக்கின்றது.

'இயேசு தன்னைத்தானே இறைவனின் மகன் என்று கூறியதாலா யூதர்கள் இயேசுவைகொல்ல எத்தனித்தனர்?' என்ற கேள்விக்கு இயேசுவின் வரலாற்றினை அறிந்த எவரும்கூறக்கூடிய பதில் 'இல்லைஎன்பதாகத் தான் இருக்கும்ஆம்!!! இயேசுவிற்கு மரணதண்டனை விதிப்பதற்கு அவர்கள் 'இயேசு தன்னைத்தானே இறைவனின் மகன் என்றுகூறி இறை நிந்தனை செய்து விட்டான்என்றே காரணம் கூறினாலும்உண்மை அதுகிடையாதுஅது வெறும் ஒரு சாக்குப்போக்குஅவ்வளவேஇதனை கிருத்துவர்கள்இயேசுவின் மீது நடந்த அந்த விசாரணையைப் பற்றிப் படித்தாலே அறிந்து கொள்வர்.

இயேசுவை கொலை செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இயேசுவை கைதுசெய்கின்றனர்ஆனால் தவறேதும் செய்யாத அவருக்கு சட்டப்படி மரண தண்டனைவழங்க முடியாமல் அவர்கள் தடுமாறுகின்றார்கள்அவருக்கு மரண தண்டனைவழங்கக்கூடிய வண்ணம் இருக்கின்ற சாட்சிகளை அவர்கள் தேடுகின்றனர்.அவ்வேளையில், 'தான் இறைவனின் மகன்என்று இயேசு என்றோ கூறியிருந்தது அங்கேநினைவில் வரஅதனை அடிப்படையாக வைத்தே அவர்கள் அவருக்கு மரண தண்டனைவழங்குகின்றனர்அதாவதுஇயேசு தன்னை இறைவனின் மகன் என்று கூறியதால்அவருக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை...மாறாகஅவருக்கு மரண தண்டனைவழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே தான் அந்த கூற்று பயன்படுத்தப்பட்டிருக்கின்றதுஅந்த முழு விசாரணையுமே 'இயேசுவை எப்படியாவது கொன்று விடவேண்டும்என்ற குறிக்கோளினை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கின்றது.இதனை அநேகமாக அனைத்து கிருத்துவர்களும் அறிவர்.

ஏன் 'இயேசுவை கொல்ல வேண்டும்என்று யூதர்கள் அவ்வளவு முயன்றார்கள்அதுவும்யூத இனத்தின் மீட்பராக மக்கள் பலரும் அவரை எண்ணிக் கொண்டிருந்த பொழுது(இன்றும் கூட பல கிருத்துவர்கள் அவரை அவ்வாறு தான் எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள்யூத மக்களே எதற்காக அவரைக் கொலை செய்ய முயற்சிக்கவேண்டும்?

இந்த கேள்விகளுக்கான விடையினை நாம் காண வேண்டும்

யூதர்கள் எதற்காக இயேசுவை கொலை செய்ய முயற்சிக்க வேண்டும் என்றே நாம் கண்டுவந்து கொண்டிருக்கின்றோம். இப்பொழுது நாம் ஒரு நிகழ்வினைக் காணவேண்டியிருக்கின்றது.

முதல் நிகழ்வுஇயேசுவைகொல்ல வேண்டும் என்றுதலைமை ஆசாரியன் காய்பாமுடிவெடுத்தல்.

'இயேசுவை கொலை செய்யவேண்டும்அது தான்யூதர்களின் தேசத்திற்கும் யூதர்களின் கோவிலுக்கும் நல்லதொன்றாக இருக்கும்மாறாக அவ்வாறுசெய்யாது போனால் யூதர்கள் சிதறுண்டு போய் விடுவார்கள்ரோமர்கள் அனைத்தையும்எடுத்துக் கொள்வார்கள்எனவே ஒரு தேசத்திற்காக ஒரு மனிதனை கொலை செய்வது என்பதுதவறில்லைஎன்று யூதர்களின் தலைமை ஆசாரியனாக இருந்த காய்பா என்பவன் கூறியகருத்தின் அடிப்படையிலேயே தான் இயேசுவை கொலை செய்ய வேண்டும் என்ற முடிவினை யூதமதகுருக்கள் அனைவரும் ஏற்கின்றனர்இதனை நாம் விவிலியத்தில் இருந்து (யோவான் 11) அறிந்து கொள்ள முடிகின்றது.

ஆனால் இந்த கூற்று சற்று விசித்திரமானதாக அல்லவா இருக்கின்றதுஏனென்றால்அடிமைத்தளையில் இருந்து தங்களை விடுவித்து தங்களது இசுரவேல் இராஜ்யத்தை மீட்டுத்தருவதற்காக ஒரு மீட்பர் வருவார் என்று யூதர்கள் நம்பிக் கொண்டிருந்த அந்த 'மீட்பராகவே தான்இயேசுவை இன்று கிருத்துவ சமயமானது சித்தரித்துக் கொண்டிருக்கின்றதுஅந்தகோட்பாட்டினை அடிப்படையாக வைத்தே தான் இன்றைக்கு ஒட்டுமொத்த கிருத்துவ சமயமேஇசுரவேல் நாட்டினை கண்மூடித்தனமாக ஆதரித்து கொண்டிருக்கின்றதுசரி இருக்கட்டும்அதுவேற கதை...அதனை பின்னர் காணலாம்இப்பொழுது நாம் காண வேண்டியது என்னவென்றால்'யூத தேசம் எதிர்பார்த்திருந்த மீட்பராக இன்றைக்கு கிருத்துவ சமயமானது இயேசுவைசித்தரித்துக் கொண்டிருக்கும் வேளையில்இயேசுவை உயிரோடு விட்டால் யூத தேசமே சிதைந்துவிடும் என்று கூறியே இயேசுவை கொலை செய்வதற்காக அன்றைக்கு யூதர்கள் திட்டமிட்டுஇருக்கின்றனர்' - இந்த முரண்பாட்டினையே தான் நாம் இப்பொழுது காண வேண்டும்.

இயேசுதான் யூதர்கள் எதிர்பார்த்திருந்த மீட்பர் என்றால்எதற்காக யூதர்களே அவரைக் கொல்லதிட்டமிட வேண்டும்?

இயேசு வாழ்ந்திருந்த அந்த காலக்கட்டத்தில் யூதர்கள் ரோமர்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வந்துகொண்டிருந்தனர்யூத தேசமானது ரோமப் பேரரசின் கீழ் இயங்கி வந்து கொண்டிருந்ததுஅந்நிலையில் யூதர்களின் நம்பிக்கை என்னவாக இருந்தது என்றால்இறைவன் அவர்களைஅடிமைத்தளையில் இருந்து மீட்டு அவர்களது அந்த இராஜ்யத்தை அவர்களுக்கே தருவார் - அதற்காக ஒரு மீட்பர் வருவார் என்பதாகவே இருந்து வந்ததுஒரு அரசியல் தலைவரைரோமர்களிடமிருந்து தங்களது தேசத்தை விடுவிக்கும் ஒரு அரசரை அவர்கள் எதிர்பார்த்துகொண்டிருந்தனர்தங்களது சமய நூல்களில் கூறப்பட்டிருக்கும் அனைத்து விடயங்களையும்பூர்த்தி செய்யுமாறும்தங்களது நம்பிக்கைகளை மெய்ப்பிக்குமாறும் ஒருவர் வருவார் என்றேஅவர்கள் காத்திருந்தனர்.

சிக்கல் அங்கு தான் இருந்ததுஇயேசு அவர்கள் எதிர்பார்த்தபடி இருந்திருக்கவில்லை.

  • யூதர்கள் ஓய்வு நாளான சபாத்தை அனுசரிக்க வேண்டும் என்றனர் - இயேசு ஓய்வு நாள்என்று எதுவும் இல்லை என்றார்.
  • யூதர்கள் விரதமிருப்பது முக்கியம் என்றனர் - இயேசு அதையும் முக்கியமில்லை என்றுகூறினார்.
  • இறைவன் தங்களுக்கு இட்ட கட்டளையின் படி விருத்தசேதனம் அவசியம் என்றே யூதர்கள்கூறினர் - இயேசு விருத்தசேதனத்தை தேவையற்றது என்றார் (இன்றைக்கு கிருத்துவர்கள்விருத்தசேதனம் செய்வது இல்லை)
  • யூதர்கள் சமாரியர்களை எதிரிகளாக கருதினர் - இயேசு சமாரியர்களுடன் சமமாகசகோதரராக பழகினார்அவ்வாறே அவர் மற்றவர்களையும் பழகச் சொன்னார்.
  • எருசலேமில் இருக்கின்ற கோவிலில் தான் இறைவன் வீற்று இருக்கின்றார் என்று யூதர்கள்கூறினர் - இயேசு அதனை மறுத்தார்இறைவன் மனிதர்களின் மனதில் இருக்கின்றார்என்றே அவர் கூறினார்.
  • மோசேவுக்கு கடவுள் தந்த கட்டளைகள் என்று யூதர்கள் பின்பற்றிக் கொண்டிருந்தகட்டளைகளையும் அவர் மறுத்தார்.
  • அனைத்திற்கும் மேலாகயூதர்கள் தாங்கள் மட்டுமே தான் இறைவனால்தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும் தங்களின் இனம் மட்டுமே தான் சிறந்த இனம் என்றும்கருதி வந்தனர் - இயேசு அதனை முற்றிலுமாக நிராகரித்தார்இறைவன் மக்கள்அனைவரையும் சமமாகக் காண்கின்றார் என்றும் இறைவனின் பார்வையில் பல்வேறுதேசங்களோ அல்லது பல்வேறு இனங்களோ கிடையாதுஅனைத்தும் ஒன்றே என்றே அவர்கூறினார்.

இவை தான் சிக்கலுக்கு வழிவகுத்தனதாங்கள் எதனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களோஇயேசு அவ்வாறு இருந்திருக்கவில்லைமுற்றிலும் மாறாக இருந்தார்ஆனாலும் யூத மக்களுள்சிலர் இயேசு செய்த அதிசயங்கள்/போதனைகளின் காரணமாக அவர்தான் தங்களின் மீட்பராகஇருக்க வேண்டும் என்று ஏற்றுக் கொண்டிருந்தனர்அது தான் யூத சமய மதகுருக்களுக்குசிக்கலாக இருந்தது.

அவர்களின் பார்வையின்படி இயேசு அவர்கள் எதிர்பார்த்திருந்த மீட்பர் அல்லஅவர் வேறு யாரோஒருவர்...ஏதோ சில நூல்களைப் படித்துவிட்டு ஏதேதோ சொல்லிக் கொண்டிருப்பவர்...அவர்அதிசயம் பண்ணுகின்றார் என்று மக்கள் பலர் கூறுகின்றனர் - ஏதோ வித்தைகளின் மூலமாகஅவர் அவ்வாறு செய்யக் கூடுமாயிருக்கும் அல்லது அவை தற்செயலான நிகழ்வுகளாக இருக்கும்மக்கள் அதனை அறியாமல் அவர் அதிசயங்கள் செய்கின்றார் என்று கூறக் கூடுமாயிருக்கும்ஆனால் நிச்சயமாக அவர் நாம் எதிர்பார்த்திருக்கும் மீட்பர் இல்லைநம்முடையநம்பிக்கைகளுக்கும் அவருடைய கூற்றுகளுக்கும் முரண்பாடுகள் அநேகம் இருக்கின்றனநிச்சயமாக அவர் நாம் எதிர்பார்க்கும் மீட்பர் அல்ல - இது தான் பெரும்பாலான யூத சமய மதகுருக்களின் நம்பிக்கையாக இருந்தது.

அதனால் தான் அவர்கள் மக்களை இயேசுவிடமிருந்து பிரிப்பதற்கும்இயேசுவின் கூற்றுகள்தவறானவை என்று நிரூபணம் செய்வதற்கும்இயேசுவை சிக்கலில் சிக்க வைப்பதற்கும் அநேகமுயற்சிகள் எடுக்கின்றனர்அந்த முயற்சிகளை நம்மால் விவிலியத்தில் இருந்தே அறிந்து கொள்ளமுடிகின்றதுஅவர்களின் நோக்கம் ஒன்று தான் - இயேசு யூதர்களின் மீட்பர் அல்ல...இது நிச்சயம்எனவே மக்கள் அவரைப் பின்பற்றிச் சென்று பிரிந்து விடாதவாறு நாம் பார்த்துக் கொள்ளவேண்டும்அவ்வளவு தான் அவர்களது குறிக்கோள்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இயேசுவை கொலை செய்ய வேண்டும் என்றுஅவர்கள் தொடக்கத்தில் எண்ணியிருக்கவில்லைஅவர் மீட்பர் அல்ல என்றும் அவருடையகூற்றுகள் தவறானவை என்றும் மக்களை நம்ப வைத்துமக்களை அவரிடமிருந்து விலக வைக்கவேண்டும் என்பதே அவர்களது குறிக்கோளாக இருந்ததுஅவர் செய்த அதிசயங்களைக் குறித்தசெய்திகளை எல்லாம் அவர்கள் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்கவில்லைஅவ்வாறுஇருக்கையில் திடீரென்று அவரைக் கொலை செய்வது தான் யூத இனத்தையும் யூத மக்களையும்காப்பாற்றக் கூடிய ஒரே வழி என்று அவர்கள் முடிவு செய்கின்றனர்அவர்களது இந்த திடீர்முடிவிற்கான காரணத்தை நாம் காண வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் அந்த முடிவினைஎடுத்த சுழலினை நாம் காண வேண்டியிருக்கின்றது.

இயேசு லாசருவை மரணத்தில் இருந்து உயிர்ப்பித்த நிகழ்விற்கு பின்னரே தான் யூத சமயமதகுருக்கள் அவசர கூட்டம் ஒன்றினைக் கூட்டி அதில் 'வேறு வழியில்லை...இயேசுவைகொன்றாகத் தான் வேண்டியிருக்கின்றதுஎன்று முடிவெடுக்கின்றார்கள்இங்கே ஒரு கேள்விகேள்வி எழுகின்றது...'எதற்காக இயேசு லாசருவை உயிர்ப்பித்த நிகழ்விற்கு பின்னர் அவர்கள்இம்முடிவினை எடுக்கின்றனர்இயேசு இதற்கு முன்பாக இறந்து போயிருந்த ஒரு சிறுமியைஉயிர்த்தெழ செய்தாரேஅப்பொழுது அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்யாமல்எதற்காக லாசருவை உயிர்த்தெழ செய்த பொழுது அம்முடிவினை எடுக்கின்றனர்?

இதற்கு விடையாய் நாம் கண்டோம் என்றால் 'இயேசு அந்த சிறுமியை உயிர்த்தெழ வைத்தார்என்பதை பெருவாரியான யூத மதகுருக்கள் நம்பியிருக்கவில்லைஎன்றே தான் வருகின்றது. 'நோய்வாய்ப்பட்டிருந்த சிறுமி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்திருக்கலாம் அல்லது மயங்கிஇருந்திருக்கலாம்அதனை அறியாத மக்கள் அவசரப்பட்டு அவள் இறந்து விட்டாள் என்று முடிவுசெய்திருக்கலாம்பின்னர் இயேசு அங்கே சென்றிருந்த பொழுது அவள் விழித்தெழுந்துஇருக்கலாம் - அதனை அறியாது அம்மக்கள் இயேசு சிறுமியை மரணத்திலிருந்து உயிர்த்தெழவைத்து விட்டார் என்று கூறி இருப்பர்என்பதே தான் அவர்களது எண்ணமாக இருந்ததுஆகையால் அதனை அவர்கள் ஒரு பெரிய நிகழ்வாக கருதியிருக்கவில்லை.

ஆனால் லாசருவின் கதையோ முற்றிலும் வேறானது. அவன் இறந்து நான்கு நாட்களானதற்குப் பின்னர் தான் அவனை அவனது கல்லறையிலிருந்து உயிருடன் இயேசு எழுப்புகின்றார். இறந்து போனவன் என்று ஊரால் அடக்கம் செய்யப்பட்டவன்நான்கு நாட்களுக்கு பின்னர் கல்லறையிலிருந்து உயிருடன் வருவதை தற்செயலான ஒரு செயல் என்று எவராலும் கூற முடியாது. அத்தகைய அதிசயங்கள் மக்களின் கவனத்தினை நிச்சயம் ஈர்க்கும் என்பதனை அந்த மதகுருக்கள்அறிந்திருந்தனர். எனவே தான் இயேசு எப்பொழுது லாசருவை உயிர்த்தெழ செய்தநிகழ்வு அவர்களது கவனத்திற்கு வந்ததோஅப்பொழுது அவர்கள் உடனடியாககூட்டத்தினைக் கூட்டி இயேசுவை கொலை செய்ய வேண்டுமென்று முடிவுசெய்கின்றார்கள்.

ஆனால் இங்கே முக்கியமான மற்றொரு விடயம் என்னவென்றால்இறந்து போன லாசருவை தான்உயிருடன் எழுப்பினால்நிச்சயமாக யூத மதகுருக்கள் தன்னை கொலை செய்வதற்கு வழி தேட ஆரம்பிப்பார்கள் என்று இயேசுவும் அறிந்துதான் இருந்தார். அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் அவர் நான்கு நாட்கள் கழித்து லாசருவை உயிருடன் எழுப்புகின்றார். லாசரு நோய்வாய்ப்பட்டு இருக்கின்றான் என்று முன்னமே அறிந்திருந்தும் உடனடியாக அவனைக் காண செல்லாமல்அவன் இறந்ததற்கு பின்னரே அவனைக் காண்பதற்காக அவர் புறப்படுகின்றார். மேலும் அவன் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றான் என்பதனை அறிந்த பொழுதே அவர் தன்னுடைய சீடர்களிடம் 'அவன் இந்த நோயினால் மரணம் அடைய மாட்டான். தேவனின் குமாரனை மகிமைப்படுவதற்கான இறைவனின் சித்தம் இதுஎன்றே அவர் கூறியும் இருக்கின்றார். மேலும் அவனை அவ்வாறு உயிர்த்தெழச் செய்தால் தான் அவரை மக்கள் நம்புவார்கள் என்றுமே அவர் கூறி இருக்கின்றார்.

அவர் எதிர்பார்த்தபடியேஅவர் லாசருவை உயிர்த்தெழச் செய்த நிகழ்வு யூத மதகுருக்களின் கவனத்திற்கு எப்பொழுது வந்ததோஅப்பொழுது அவர்கள் உடனடியாக கூட்டத்தினைக் கூட்டி இயேசுவை கொலை செய்ய வேண்டுமென்று முடிவு செய்கின்றார்கள்

'இயேசு அதிசயங்களை செய்கின்றார். அது உறுதி. எனவே மக்கள் அவரைப் பின்பற்றப் போவதும் உறுதி. ஆனால் மக்கள் அவரைப் பின்பற்றினார்கள் என்றால் நம்முடைய தேசம் சிதறுண்டு போகும்ஏனென்றால் அவர் நம்முடைய நம்பிக்கைகளுக்கு மாறானதாக இருக்கக்கூடிய விடயங்களையே போதிக்கின்றார். யூதர்களுக்கும் மற்ற மக்களுக்கும் வேறுபாடுகள் கிடையாது என்றே அவர் கூறுகின்றார். இது யூதர்கள் தனித்தன்மையானவர்கள் என்ற கூற்றினை உடைத்துவிடும். இறைவனின் பார்வைக்கு பல்வேறு தேசங்கள் என்பது கிடையாது என்றே அவர் கூறுவதை நம் மக்கள் நம்பினர் என்றால்யூத தேசம் கடவுளின் பிள்ளைகளின் தேசம் என்ற நம்முடைய கூற்றினை அவர்கள் மறுத்து விடுவர். நமக்குள்ளேயே இப்படி வேறுபாடுகள் தோன்றினால் எளிதாக ரோமர்கள் நம்மளை முற்றிலுமாக வீழ்த்தி விடுவர். எனவே நம்முடைய தேசத்தின் நலனுக்காக இயேசு கொலை செய்யப்பட வேண்டும்.என்று எண்ணியே இயேசுவை கொலை செய்வதற்கு அவர்கள் முடிவு செய்கின்றனர்.

அதாவதுதங்களது தேசம் நன்றாக இருக்க வேண்டும்தேச மக்கள் சிதறி விடக்கூடாதுயூதர்கள் மற்ற இனத்தவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் என்கின்ற நம்பிக்கை மறைந்து விடக்கூடாது என்கின்ற அந்த ஒரு காரணத்திற்காகவே தான் இயேசு கொலை செய்யப்படுகின்றார். மக்கள் அனைவரும் சமம்தேசங்கள் என்று மனிதர்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொண்ட பிரிவினைகளை இறைவன் மதிப்பதில்லை என்கின்ற இயேசுவின் அந்த கொள்கைகளுக்காகவே அவர் கொலை செய்யப்படுகின்றார்.

இதனையே தான் நாம் இந்த முதல் நிகழ்வின் மூலமாக அறிந்து கொள்கின்றோம். சரி இப்பொழுது நாம் இரண்டாவது நிகழ்வினைக் காணலாம்.


இயேசுவை யூதர்கள் கொன்றதற்கானகாரணம் யூத தேசியம் தான் என்றே நாம்  கொண்டிருக்கின்றோம்நாம் அவ்வாறுகூறுவதற்கு சான்றாகஇப்பொழுதுஇரண்டாவது நிகழ்வினை நாம் காணவேண்டியிருக்கின்றது.

இரண்டாவது நிகழ்வு : இயேசுவைகிரேக்கர்கள் சந்திக்க விரும்புதல்  

யூதர்களின் பஸ்கா பண்டிகையின்பொழுது இயேசு மீண்டும் எருசலேம்நகருக்குச் செல்லுகின்றார்அது பண்டிகைகாலம் என்பதினால் எருசலேம் நகரில் யூதமக்களுடன் பல்வேறு இன மக்களும்இருக்கின்றனர்அங்கே அவர் மக்களுக்குபோதனைகள் செய்ய ஆரம்பிக்கின்றார்அப்பொழுது அங்கிருந்த கிரேக்க மக்களுள்சிலர் இயேசுவைத் தாங்கள் சந்திக்கவிரும்புவதாக பிலிப்பிடம் கூறுகின்றனர்இங்கே தான் நாம் பிலிப்பின் செயலினைக்கவனிக்க வேண்டியிருக்கின்றது.

இயேசுவை தாங்கள் சந்திக்க வேண்டும்என்று கிரேக்கர்கள் தன்னிடம் கேட்டதற்குஒன்று 'சரிஎன்று சொல்லிவிட்டுஅவர்களை இயேசுவிடம் பிலிப்புஅழைத்துச் சென்றிருக்கலாம்அல்லது 'இல்லைஎன்று மறுத்திருக்கலாம்ஆனால் பிலிப்பின்செயலோ வேறாக இருக்கின்றதுபிலிப்பு முதலில் தயங்குகிறான் - பின்னர் கிரேக்கர்கள்இயேசுவை சந்திக்க விருப்பம் தெரிவிப்பதாக அந்திரேயுவிடம் அவன் கூறுகின்றான்பின்னர்அவர்கள் இருவருமாய் சென்று இயேசுவிடம் அந்த கிரேக்க மக்களைப் பற்றி கூறுகின்றனர்மேலும்கிரேக்கர்கள் தன்னைச் சந்திக்க விரும்புவதாக தன்னுடைய சீடர்களிடமிருந்துகேள்விப்பட்ட இயேசுவின் செயல்களும் வித்தியாசமாகத்தான் இருக்கின்றனஅவர்கலக்கமடைகின்றார்பின்பு தன்னுடைய மரணத்தைப் பற்றி அவர் பேச ஆரம்பிக்கின்றார்தான்மரணமடைவதற்கான தருணம் நெருங்குவதனை அறிந்தவராய்மனிதர்கள் தங்களது தனிப்பட்டவாழ்வினை பெரிதாக எண்ணக் கூடாது என்றும் அதனை இழப்பதற்கு அவர்கள் தயாராக இருக்கவேண்டும் என்றுமே அவர் கூறுகின்றார்அதாவது கிரேக்கர்கள் தன்னைச் சந்திப்பதற்குவிரும்புகின்றார்கள் என்பதனை அறிந்து கொள்வதற்கு முன்பு இயல்பாக இருக்கின்ற அவர்அந்தவிடயத்தினை அறிந்து கொண்டதற்குப் பின்னர் கலக்கமடைகின்றார்ஏன் அவர் அவ்வாறுகலக்கமடைய வேண்டும்ஏன் அவர் அவ்வாறு மாற வேண்டும்?

முதலில் சீடர்கள் தயங்குகின்றனர்கிரேக்கர்கள் இயேசுவை சந்திப்பதில் ஏன் அந்த சீடர்களுக்குஅவ்வளவு தயக்கம்பின்னர் இயேசுவே கலங்குகிறார்...ஏன் அவர் அவ்வாறு மாறுகின்றார்?

இந்த கேள்விகளுக்கு விடை எளிதானதொன்று தான்யூதர்களைப் பொறுத்தவரை அவர்கள்மட்டுமே தான் இறைவனுக்கு உரியவர்கள்மற்ற இனத்தவர்களை அவர்கள் புற ஜாதியினராக - தகுதி குறைந்தவர்களாக கருதி வந்தனர்அவர்களைப் பொறுத்தவரை இறைவனிடம் இருந்துவரும் தீர்க்கத்தரிசிகள் யாவரும் யூதர்களுக்காக மட்டுமே வருபவர்கள்மற்ற இன மக்கள்இறைவனை அறியாதவர்கள் எனவே அவர்களுக்கு இறைவன் உதவ மாட்டார் - இதுவே தான்யூதர்கள் கொண்டிருந்த நம்பிக்கை.

இந்நிலையில் தான் நாம் இயேசுவை சந்திக்க வேண்டும் என்று கிரேக்கர்கள் விரும்பிய அந்தசூழலினைக் காண வேண்டியிருக்கின்றதுலாசருவை உயிர்த்தெழ செய்ததால் இயேசுவின் புகழ்மக்களிடம் அதிகமாக பரவியிருக்கின்றதுதங்களை அடிமைத்தளையில் இருந்து மீட்டுதங்களுடைய இராஜ்யத்தை மீண்டும் வென்று தருவதற்கு வந்திருக்கும் மீட்பர் அவர் தான்என்கின்ற நம்பிக்கையும் யூத மக்களிடம் பரவலாக பரவியிருக்கின்றதுஎனவே ரோமர்களின்பிடியில் இருந்து அவர்களை மீட்டு அவர்களது இராஜ்யத்தை தரப்போகின்ற அந்த 'மீட்பரை'க்காணவும் அவர் கூறுவதைக் கேட்கவும் அவர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

ஆனால் இங்கே ஒரு சின்ன சிக்கல் இருக்கின்றதுயூத இன மீட்பர் யூத மக்களுக்கு மட்டுமேஉரியவர்யூதர்களின் நம்பிக்கை வரலாறுதோறும் அவ்வாறு தான் இருந்திருக்கின்றதுஏனென்றால் அவர்களது கூற்றின்படி அவர்கள் மட்டுமே தான் இறைவனை அறிந்திருக்கின்றார்கள்மற்ற இன மக்கள் எல்லாம் இறைவனை அறியாமல் சிலை வழிபாடு செய்துகொண்டிருக்கின்றார்கள்இந்நிலையில் இயேசு யூத மக்களால் புற ஜாதியினர் என்றுகருதப்படுகின்ற கிரேக்கர்களையும் யூதர்களுக்கு சமமாக மதித்து அவர்களுக்கும் போதித்தார்என்றால், 'என்ன இவர்...மற்ற இன மக்களுக்கும் போதனை செய்கின்றாரே...அவர்களையும்சமமாய் நடத்துகின்றாரே...இறைவனை அறியாத அவர்களுடன் இவர் தொடர்பு கொள்கின்றார்என்றால் இவர் உண்மையிலேயே நாம் எதிர்பார்த்திருக்கும் மீட்பர் தானாஇல்லையேல்நம்முடைய மதகுருக்கள் கூறுவது போல இவர் இறைவனுக்கும் யூதர்களுக்கும் விரோதமானவரா?' என்ற எண்ணம் நிச்சயமாய் அங்கிருந்த யூத மக்களுக்குள் எழத்தான் செய்யும்யூதர்களும் மற்றமக்களும் சமமே என்று கூறுகின்ற ஒரே காரணத்திற்காகவே இயேசுவை அந்த மக்கள்வெறுக்கவும் வாய்ப்பிருக்கத் தான் செய்கின்றது.

இயேசுவின் சீடர்கள் அதனை அறிந்து தான் இருந்தனர்அதனாலேயே தான் அவர்கள்இயேசுவிடம் கிரேக்க மக்களின் அந்த விருப்பத்தைக் கொண்டு செல்வதற்கு யோசிக்கின்றனர்இருந்தும்அவர்கள் முடிவில் இயேசுவிடம் கிரேக்கர்களின் அந்த விருப்பத்தைக் கூறத்தான்செய்கின்றனர்.

இயேசுவின் அதனை அறிந்தே தான் இருந்தார்கிரேக்கர்களுக்கும் போதித்தால் யூத மக்கள்தன்னை வெறுக்கக் கூடும் என்பதனை அவர் தெளிவாக அறிந்திருந்தார்மேலும் அதனைஅடிப்படையாக வைத்தே யூத மதகுருக்கள் மக்களை தண்னிடமிருந்து பிரிப்பர் என்பதனையும்அவர் அறிந்திருந்தார்ஏற்கனவே 'ரோமர்களிடம் பணிபுரிகின்ற வரி வசூலிக்கும் யூதர்களுடன்நெருங்கிப் பழகுகின்றார்என்று அவர் மீது யூத சமய மதகுருக்கள் குற்றம் சாட்டியிருந்தநிலையில்கிரேக்கர்களுக்கும் இயேசு முக்கியத்துவம் தந்து அவர்களுக்கும் போதனை செய்தார்என்றால் நிச்சயமாக அதனை வைத்தே 'இவன் நம்மை மீட்க வந்த மீட்பர் அல்லஇவன் யூத இனதுரோகிஏதோ தீய சக்தியின் ஆற்றலினால் இவன் அதிசயம் செய்கின்றான்இவன் யூதர்களைப்பிரிக்கின்றான்என்று கூறி மக்களை தனக்கு எதிராக அவர்கள் திருப்புவர் என்பதனை அவர்அறிந்திருந்தார்.

எனவே தான் அந்த நேரத்தில் இயேசு கலக்கமடைந்தார்தன்னை கொலை செய்வதற்கு யூதமதகுருக்கள் ஆயுத்தமாகி விட்டனர் என்பதனை அவர் அறிந்திருந்தார்லாசருவைமரணத்திலிருந்து அவர் எழுப்பிய பொழுதே அவர் அதனை அறிந்திருந்தார்இப்பொழுதோகிரேக்கர்களுக்கும் சேர்த்து தான் போதனை செய்தால்அதனைக் காரணமாக வைத்தே மக்களையூத மதகுருக்கள் தம்மிடமிருந்து பிரித்து விடுவர் என்பதனையும் அவர்கள் அவ்வாறு பிரித்துமக்களை குழப்பி விட்டால் தன்னைக் கொல்வது அவர்களுக்கு மேலும் எளிதாகி விடும்என்பதனையும் அவர் அறிந்திருந்தார்தான் மரணமடைய வேண்டிய தருணம் அருகில் வந்துவிட்டதை அவர் உணர்ந்தார்ஏனென்றால் நிச்சயமாக கிரேக்கர்களை அவரால் புறக்கணிக்கமுடியாது - மக்கள் அனைவரும் சமமேஇறைவனின் முன்னே பல்வேறு தேசங்கள் என்றபிரிவினைகள் எதுவும் கிடையாது என்கின்ற அவரது போதனைகளுக்கு ஏற்ப அவரால் நிச்சயம்கிரேக்கர்களைப் புறக்கணிக்க முடியாதுயூதர்கள் நம்பியது போல அவர் யூதர்களின் மீட்பராகவரவில்லை மாறாக உலக மீட்பராகவே வந்திருந்தார்எனவே கிரேக்கர்களை அவரால்புறக்கணிக்க முடியாதுகிரேக்கர்களை அவர் புறக்கணிக்காவிட்டால் நிச்சயமாக மக்களைஅவருக்கு எதிராக யூத மதகுருக்கள் திருப்பி விடுவார்கள்அந்நிலையில் தான் மரணமடையவேண்டிய நேரம் நெருங்கி வந்துவிட்டதை அவர் தெளிவாக உணர்ந்து கொள்கின்றார்ஆகவேதான் ஒரு மனிதனாய் அவர் கலக்கமடைகின்றார்தன்னுடைய மரணத்தைப் பற்றியும்பேசுகின்றார்நிற்க.

இயேசுவை கொலை செய்தது யூத தேசியமே என்றே நாம் இந்த பதிவில் கண்டு வந்துகொண்டிருக்கின்றோம்அதற்கு சான்றாய் இரண்டு நிகழ்வுகளையும் கண்டு இருக்கின்றோம். 'தேச நலனுக்காகவும் தேச மக்களின் ஒற்றுமைக்காகவுமே தான் இயேசுவை கொலை செய்ய யூதசமய மதகுருக்கள் முடிவெடுக்கின்றனர் என்பதனை முதலாம் நிகழ்வில் கண்டோம்அவ்வாறேயூதர்களை மற்ற இனமக்களிடம் இருந்து வேறுபடுத்திப் பார்க்காததால் தான் மரணம் அடையநேரிடும் என்று இயேசு அறிந்து கொண்டதை இரண்டாவது நிகழ்வின் மூலமாக கண்டோம்.

இதன் மூலமாக 'எங்கள் தேசம் நன்றாக இருக்க வேண்டும்எங்கள் மக்கள் நன்றாக இருக்கவேண்டும்...மற்ற மக்களும் நாங்களும் ஒன்றல்லஎன்று இருக்கின்ற அந்த தேசியச் சிந்தனையேதான் இயேசுவைக் கொன்றது என்பதனை நாம் அறிந்து கொள்கின்றோம்ஆனால் வருத்தகரமாககிருத்துவ மக்கள் இதனை அறிந்து கொள்வதில்லைமக்களைப் பிரித்து வைக்கின்ற அந்ததேசியச் சிந்தனைகளையையே அவர்களும் போற்றிக் கொண்டிருக்கின்றனர்அந்தச்சிந்தனையே இயேசுவை கொலை செய்திருந்த போதிலும்அவர்கள் இன்றும் கூட இயேசுவைகொலை செய்த அந்த கொள்கையையே தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

தேசியம் என்ற கொள்கையினைஅதாவது ஒரு தேசத்தைச் சார்ந்தவர்கள் மற்ற தேசத்தைச்சார்ந்தவர்களை விட உயர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சமமானவர்கள் அல்ல என்றும் எண்ணிக்கொள்ளுகின்ற தேசியக் கொள்கையினை எந்த கிருத்துவன் ஏற்றுக் கொள்ளுகின்றானோஅதுஇஸ்ரேலை ஆதரிக்கும் தேசியமாக இருக்கட்டும்அமெரிக்க தேசியமாகட்டும்இந்தியதேசியமாகட்டும்தமிழ் தேசியமாகட்டும்அவன் "பரபாஸை விடுதலை செய்...இயேசுவைதூக்கில் போடுஎன்று கோஷமிட்ட யூதனாகவே இருக்கின்றானே ஒழிய இயேசு கூறியகிருத்துவனாக இருக்கவில்லைஇது நிச்சயம்இயேசு கூறிய வழிகளின்படி வாழுகின்றஒருவனால் நிச்சயமாக தேசங்களுக்கு இடையில் வேறுபாடுகள் ஒருபோதும் காண முடியாதுஅவ்வாறு வேறுபாடுகள் காண்பவர்களால் இயேசு கூறிய வழிகளின்படி வாழ முடியாது.

ஏனென்றால் தேசியம் மக்களைப் பிரிக்கின்றது...ஒருவரை உயர்த்தி மற்றவரைத் தாழ்த்துகிறது.



பயணம் தொடரும்!



"ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு" - தீத்து 3:2 (புனித 

பைபிள்)





இல்லுமினாட்டி 





சிறிது விசித்திரமானதொரு தலைப்புதான். வில்லங்கமானதாகவும் இருக்கலாம். ஆனால் வேறு வழியில்லை, இன்று இல்லுமினாட்டிகள் என்ற ஒரு சொல்லாடல் நம் மத்தியிலே பரவலாக பரவி வருகின்ற பொழுது, இராஜ இராஜ சோழனையும் நாம் இழுத்தாகத்தான் வேண்டியிருக்கின்றது. சரி இருக்கட்டும், முதலில் இல்லுமினாட்டி என்று இன்றைக்கு கூறப்படும் அந்த கூற்றினைப் பற்றி நாம் சிறிது கண்டு விடலாம்.

இல்லுமினாட்டி - இன்றைக்கு உலக முழுவதையும் தங்களின் கைகளுக்குள் வைத்திருக்கும் வண்ணம் அதிகாரம் படைத்த 13 குடும்பங்களைக் கொண்ட ஒரு குழு இது. மக்களை அறியாமையில் ஆழ்த்தி வைத்து அனைத்து வணிகங்களையும் சரி உலகில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளையும் சரி கட்டுப்படுத்துகின்ற ஒரு சக்தியாக இருக்கின்றது. பல்வேறு நாட்டின் தலைவர்களை கொலை செய்வது, வங்கிகளை வைத்துக் கொண்டு மக்களையும் நாடுகளையும் அடிமைகளாக ஆக்குவது என்று அதன் நடவடிக்கைகள் அநேகம். கிட்டத்தட்ட நமது நகரத்தின் உள்ளாட்சி செயலாளராக யார் வெற்றி பெற வேண்டும் என்பதை முதற்கொண்டு தீர்மானிக்கும் ஒரு மாபெரும் சக்தியாக அது இருக்கின்றது. சுதந்திரமாக இருப்பதாக மனிதர்கள் எண்ணினாலும், உண்மையில் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பெரிய குடும்பங்கள் தான் அவர்கள்.

இவ்வாறு தான் இன்றைக்கு இல்லுமினாட்டிகளைப் பற்றிய செய்திகள் நம்மிடையே பரவலாக பரவிக் கொண்டிருக்கின்றன. இவற்றை நாம் முற்றிலுமாக மறுக்கப் போவதில்லை. ஏனென்றால் அந்த கூற்றில் பெருமளவு உண்மையும் இருக்கத்தான் செய்கின்றது. ஒரு சில நபர்கள் இன்றைக்கு ஒட்டுமொத்த உலகையுமே கட்டுப்படுத்தும் ஆற்றலுடன் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். இதனை மறுப்பதற்கில்லை. ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால், இல்லுமினாட்டிகளைப் பற்றிக் கூறுவோர், அவர்களின் ஆற்றலைப் பற்றிக் கூறுகிறார்களேத் தவிர, அவர்கள் அந்த ஆற்றலை எப்படி அடைகின்றார்கள் என்பதனைப் பற்றி கூறுவதில்லை. இதனால், இல்லுமினாட்டிகளை வீழ்த்த முடியாது, ஒரு சாதாரண மனிதனால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது என்றொரு பிம்பமும், வரலாற்றில் அவர்களைப் போல் எவருமே இருந்ததில்லை, இது இதுவரை மனிதகுலம் சந்தித்திராத மாபெரும் தீயசக்தி என்பன போன்ற பிம்பமுமே தான் தோற்றுவிக்கப்படுகின்றது.

ஆனால் உண்மையோ முற்றிலும் வேறாக இருக்கின்றது. மனிதர்கள் இல்லுமினாட்டிகளை காலந்தோறும் சந்தித்து வந்து கொண்டுதான் இருக்கின்றனர். பல சமயங்களில் தோற்று இருக்கின்றனர், சில நேரங்களில் வென்றும் இருக்கின்றனர். இது நீண்டகாலமாக தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருக்கும் ஒரு யுத்தம். இது புதியதொரு பிரச்சனை அல்ல. இதை மக்களை உணரச் செய்வதற்கு இல்லுமினாட்டிகளைப் பற்றி பேசுவோர் தவறி விடுகின்றனர்.

பிரச்சனையில்லை...நாம் முயல்வோம்!!! முதலில் இல்லுமினாட்டிகளைப் பற்றிய முக்கிய விடயங்களாக கூறப்படுவதை நாம் காணலாம்.

  1. உலக முழுவதும் தாங்கள் ஆள வேண்டும் என்று அவர்கள் எண்ணுகின்றார்கள்.
  2. அவர்களுக்கு உடன்படும் மனிதர்களை பல்வேறு தேசங்களை ஆள செய்கின்றார்கள்.
  3. எதிர்க்கும் தலைவர்களை கொலை செய்கின்றார்கள்.
  4. மக்களை பொழுதுபோக்கு என்ற மாயையில் சிக்க வைத்து அவர்களை சிந்திக்க விடாமல் செய்கின்றார்கள்.
  5. எதற்கும் பயன்படாத கல்வியை பரப்பி மக்களை விலங்குகளைப் போல் மாற்றுகின்றார்கள்.
  6. வங்கிகளை கையில் வைத்து கொண்டு உலகின் நிதியினை கட்டுப்படுத்துகின்றார்கள்.
இவைதான் இல்லுமினாட்டிகளைப் பற்றி கூறப்படும் முக்கியமான விடயங்கள். இப்பொழுது இந்த விடயங்களை நாம் வரலாற்றின் அடிப்படையில் காண வேண்டியிருக்கின்றது. அப்படி கண்டோமே என்றால்,

தங்களது ஆளுமைக்குள் வராத மற்ற தேசங்களின் மீது போர் தொடுத்துச் சென்று அவற்றை வென்ற அரசர்கள் யாவரும் இல்லுமினாட்டிகள் தான். அது அசோகனாகட்டும், சீசராகட்டும், இராஜ இராஜ சோழனாகட்டும், பாபராகட்டும், ஆங்கிலேய பேரரசாகட்டும் - இவர்கள் அனைவரும் இல்லுமினாட்டிகள் தான். ஏன், வேறொரு மனிதனை அடிமைப்படுத்த வேண்டும் என்று எண்ணிய ஒவ்வொரு மனிதனுமே இல்லுமினாட்டி தான்.

அதிகாரம் என்பது அந்தளவு போதையூட்டக்கூட ஒன்றுதான். மனித வரலாறு முழுவதும் அதிகாரத்திற்கான மோதல்களைத்தான் நாம் கண்டு வந்திருக்கின்றோம்.

கிழக்கு கடல் முழுவதும் பயணம் செய்து போர் பல புரிந்து வெற்றி பெற்ற இராஜ இராஜ சோழன், தான் வெற்றி புரிந்த நாடுகளை ஆட்சிப் புரிய அந்த தேசத்து நபர்களைத் தேர்வு செய்தானா அல்லது அவனது நம்பிக்கைக்கு பாத்திரமான சோழ மனிதர்களை தேர்வு செய்தானா?

ஐரோப்பிய கண்டம் மற்றும் ஆப்பிரிக்க கண்டம் ஆகிய கண்டங்களில் பல இடங்களைப் போர் புரிந்து வெற்றி கண்ட சீசர், ரோம பேரரசினைச் சார்ந்தவர்களையோ அல்லது தனது நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கின்ற அந்தந்த தேசத்து மனிதர்களையோ தானே அந்த தேசங்களுக்கு பொறுப்பாளியாக நியமித்தான்.

மற்ற தேசத்து அரசர்களை போரில் வெற்றி கண்டு, அவர்களது குடும்பங்களை கொன்ற பின்பு, தனக்கு வேண்டியவர்களை அந்த பதவிகளில் வீற்றிருக்க செய்வது என்பது அன்றிலிருந்தே வழக்கத்தில் இருக்கிறதே.

மேலும், சூழ்ச்சியால் அதிகாரங்களை கைப்பற்றுவதும் வரலாறு முழுவதிலும் நிகழத்தானே செய்திருக்கிறது. அசோகனின் பேரனான பிரகரதத்தனை, பெர்சிய வம்சாவளியைச் சார்ந்த புஷ்யமித்தர சுங்கன் என்ற படைத்தளபதி சூழ்ச்சியால் கொன்று, அரசைப் பிடித்ததை வரலாறு நமக்கு கூறத் தானே செய்கின்றது. ராஜராஜ சோழனின் அண்ணன் ஆதித்த கரிகாலனின் மரணமும் சூழ்ச்சியினால் நிறைவேறியது என்ற கூற்றும் நிலவத்தானே செய்கின்றது. எனவே சூழ்ச்சியால் அதிகாரங்களைப் பிடிப்பது என்பதும் புதுமையானதொன்று அல்ல.

அவ்வாறு சூழ்ச்சியால் அதிகாரங்களைப் பிடித்தவர்கள் இல்லுமினாட்டிகள் என்றால், புஷ்யமித்திர சுங்கனும் அவனைப் போன்றவர்களும் இல்லுமினாட்டிகள் தான்.

மேலும், பொழுது போக்கினால் மக்களை அறியாமையில் வைத்திருப்பது என்பதும் புதுமையானதொன்று அல்லதான், ரோமர்கள் காலத்து அடிமை சண்டைகளும், குதிரைப் பந்தயங்களும், ரோமர்களின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கிருத்துமஸ் கொண்டாட்டங்களும், மன்னர் காலங்களில் போற்றி வளர்க்கப்பட்ட கோவில் திருவிழாக்களும் மக்களை மயக்குவதற்கான பொழுதுபோக்கு அம்சங்கள் தானே. மக்கள் சிந்திக்காமல் இருக்க வேண்டும் என்பதே அதிகாரத்தின் அடிப்படை குறிக்கோள் ஆகும். அறியாமையும் சிந்திக்காத தன்மையும் அதிகாரத்திற்கு அந்தளவு முக்கியமானவை. எனவே காலத்தில் நாம் எந்தளவு பின் நோக்கி சென்றாலும், அப்பொழுதெல்லாம் மக்களை பொழுது போக்கினால் அரசுகள் மயக்கி வைத்திருப்பதை நம்மால் காண முடியும். எனவே இதிலும் புதுமை இல்லை.

சிந்திக்க வைக்காத கல்வி முறையை இல்லுமினாட்டிகள் பரப்புகின்றார்கள் என்று கூறினால், சூத்திரன் எவனும் படிக்கவே கூடாது, கோவிலுக்குள் வேறு யாரும் நுழைய கூடாது என்று கூறி அதிகாரத்தினால் மக்களை அறியாமையில் கல்லாமல் இருக்க வைத்த பிராமணர்களும் அவர்களுக்குத் துணை போன அரசர்களும் இல்லுமினாட்டிகளின் முன்னோர்கள் ஆவார்கள். அவ்வாறே விவிலியத்தை வேறு எவரும் படிக்கக் கூடாது, இலத்தினைத் தவிர வேறு மொழியில் மொழிபெயர்க்க கூடாது என்று கூறி அவ்வாறு செய்தவர்களை தீயிட்டுக் கொளுத்திய ரோம கத்தோலிக்கத் திருச்சபையும் இல்லுமினாட்டியின் முன்னோர் தான்.

மேலும் வங்கிகளைக் கொண்டு இல்லுமினாட்டிகள் மக்களின் நிதி நிலைமைகளை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்ற கூற்றும் நிலவுகின்றது. இந்த கூற்று உண்மையானது தான்...ஆனால் புதிதானது அல்ல. ஏனென்றால் 'பணம்' அல்லது 'நாணயம்' என்ற ஒன்றினை இவர்கள் கூறுகின்ற இல்லுமினாட்டிகள் கண்டுபிடிக்கவில்லை. அவை என்றோ புழக்கத்தில் இருக்கின்றன. உதாரணமாக, ரோம பேரரசின் கீழ் இருந்த யூதர்கள், ரோம சாம்ராஜ்யத்திற்கு ரோம நாணயங்களின் மூலமாகவேதான் வரியினைக் கட்ட வேண்டியிருந்தது. ரோம நாணயங்களை அச்சிடும் உரிமை ரோம மன்னனுக்கே இருந்தது. எனவே அந்த நாணயத்தின் மூலமும் ரோமர்கள் மற்ற இனத்தவரை அடிமைப்படுத்தி இருந்தனர். சோழர்களும் தங்களுக்கென்று தனி நாணயங்களை வைத்துத் தான் இருந்தனர். ஒவ்வொரு பேரரசும் சிற்றரசை கப்பம் கட்ட சொல்லுவது என்பது இன்றிருக்கும் கடன்களுக்கு வட்டியினை கட்டுவது போன்றதொரு செயலாகத் தான் இருக்கின்றது. உண்மையைக் கூற வேண்டுமென்றால், எவனொருவன் நாணயத்தினைக் கண்டு பிடித்தானோ அவன் தான் வரலாற்றிலேயே மிகப் பெரிய இல்லுமினாட்டியாக இருந்திருப்பான்.

மேலும், இல்லுமினாட்டிகள் அனைத்து வணிகங்களையும் தங்களின் கட்டுக்குள் கொண்டு வர முயல்கின்றனர் என்ற ஒரு வாதமும் இங்கே இருக்கின்றது. அதனடிப்படையில் பார்த்தோமே என்றால், இங்கிருக்கும் சரவணா ஸ்டோர்ஸ், போத்திஸ், கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், கோவை பழமுதிர் நிலையம், ரிலையன்ஸ் என்பன போன்ற அனைத்து நிறுவனங்களையும் இல்லுமினாட்டிகளாக கருதலாம் தான்.

எனவே இல்லுமினாட்டிகள் என்பது, ஏதோ இதுவரை இருந்திராத புதியதொரு தீய இயக்கம் அல்ல. முற்காலங்களில் இருந்த அதே தீய வழிமுறைகள் தான் இன்றைய காலத்திற்கேற்ப புதிய வடிவங்களில் மாறி வந்திருக்கின்றன. அவ்வளவு தான். எவ்வாறு அழியவே அழியாது என்று கருதப்பட்ட ரோம பேரரசும், ஆங்கிலேய சாம்ராஜ்ஜியமும் வீழ்ந்தனவோ, அவ்வாறே ஒரு காலத்தில் இந்த இல்லுமினாட்டிகள் என்ற ஒன்றும் நிச்சயம் வீழ்ச்சி அடையும். ஆனால் அன்று, அவர்களுக்கு பதிலாக அந்த இடத்திற்கு வேறொருவர் வந்திருப்பார்.

ஏனென்றால் இல்லுமினாட்டிகள் போன்ற நபர்கள், அவர்களது பலத்தினால் அதிகாரங்களை பெற்று இருப்பதில்லை. மாறாக மக்களின் பலவீனங்களின் மூலமாகவே தான் அவர்கள் அவர்களது அதிகாரங்களை அடைந்து இருக்கின்றார்கள்.

டால்ஸ்டாய் அவர்கள் இந்தியாவின் விடுதலையைப் பற்றி கூறும் பொழுது ஒன்றைக் கூறுவார் :

ஆங்கிலேயர்கள் தங்களை அடிமைப்படுத்தி இருப்பதாக இந்தியர்கள் குறை கூறும் பொழுதுதங்களுக்கு மத்தியில் வந்து குடியேறிய மது வியாபாரிகள் தங்களை அடிமைப்படுத்தி விட்டதாக குடிகாரர்கள் குறைக் கூறுவதைப் போன்றே தான் இருக்கின்றது. அவர்களிடம் நீங்கள் குடிப்பதை நிறுத்துங்கள் என்றுக் கூறினால்,அந்தப் பழக்கத்திற்கு தாங்கள் மிகவும் பழகிவிட்டக் காரணத்தினால் அதில் இருந்து தாங்கள் விலக முடியாது என்றும் தங்களது பலத்தினை தாங்கள் தக்க வைத்துக் கொள்வதற்கு அந்த மதுவானது மிகவும் அவசியம் என்றுமே அவர்கள் கூறுவர்.'

அதே நிலை தானே இன்றும் தொடர்கின்றது. வெறும் 13 குடும்பங்கள் உலக மக்கள் அனைவரையும் ஆட்சி புரிகின்றனர் என்றால், தவறு யார் மீது இருக்கின்றது? அதுவும் மன்னராட்சி காலம் முடிந்து மக்களால் தேர்வு செய்யப்படும் மனிதர்கள் ஆட்சி புரியக்கூடிய மக்களாட்சிக் காலத்தில் இத்தகைய நிலை இருந்தால், மக்களைக் குறை கூறாமல் வேறு எவரையோ குறை கூறி என்ன பயன்?

மனிதர்கள் ஒற்றுமையாய் சகோதரத்துவத்துடன் அன்புடன் பொதுநலத்துடன் வாழ்ந்து வரக்கூடிய ஒரு தேசத்தில், அந்த மக்களை மீறி யாரால் என்ன செய்து விட முடியும்? அதே சமயம், சுய நலத்துடன் இருக்கின்ற இரு சகோதரர்களுக்குள் ஒரு சின்ன வதந்தி கூட பெரிய விரிசலை ஏற்படுத்தி மாபெரும் சேதத்தை அந்த வீட்டிற்கே உண்டாக்கி விட முடியும்.

இதில்தான் அனைத்தும் அடங்கியிருக்கின்றது. மக்களை ஏமாற்றுபவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றார்கள். மக்களோ பிரிந்து இருக்கின்றார்கள், அல்லது ஆசைகள், பயம், சுயநலம் போன்றவற்றின் காரணமாக பிரிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவ்வாறு அவர்கள் பிரிந்து இருப்பதினால், அவர்களை மற்றைய ஒரு சில நபர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப அடக்கி ஆண்டு கொள்கின்றனர். இதனை  வரலாறு நெடுகிலும் நம்மால் காண முடிகின்றது. இனிமேலும் காண முடியும்.

எனவே, நம்முடைய இன்றைய மோசமான சூழல்களுக்கு இல்லுமினாட்டிகள் தான் காரணம் என்று மூன்றாம் நபரை காரணம் காட்டுவதை விட, 'நாம் ஒழுக்கமானவர்களாக, சுயநலமற்றவர்களாக அன்புடையவர்களாக இல்லை...அதனால் தான் நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்...நம்முடைய சமூகமும் சீரழிந்துக் கொண்டிருக்கின்றது' என்று நம்மை நாமே திருத்திக் கொள்ள செய்வதே உண்மையான மாற்றத்திற்கு வழி வகுக்கும்.

எல்லோரும் சமமாக வாழ வேண்டும்...அதற்கான உரிமை எல்லாருக்கும் இருக்கின்றது. அவ்வாறு ஒற்றுமையுடன் வாழ்வதற்காகத் தான் நாம் இங்கே வந்திருக்கின்றோம் என்ற எண்ணம் பரவ வேண்டும். அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அதுவே தான் ஒரே வழி.

ஒற்றுமையே என்றும் பலமாம்...!!!

புதன், 17 ஜனவரி, 2018


தமிழ் மொழி உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,




பதிவு T1 :: ஏன் தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி !!!
ஒரு மொழியில் இருந்து மற்றும் ஒர் மொழிக்கு எதேச்சையாக மூன்று சொற்களுக்கு மேல் ஒற்றுமை வரவே முடியாது .
தமிழ் மொழியில் இருந்து உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ஒரு ஒழுங்கு அமைப்புடன் கூடிய சொல் , தொனி தொடர்பு 20 % க்கு அதிகமாக உள்ளது .
படிப்படியான மொழி திரிபு வந்திராவிட்டால் இது நிகழமுடியாது .
ஆங்கிலம் தமிழில் இருந்து திரிந்து திரிந்து வந்த ஒரு மொழியே . பழைய ஆங்கிலத்திற்கும் ( Old ENGLISH ) தமிழுக்குமான தொடர்பை நிறுவுவது மிக இலகு .
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + குறிப்பு = script
S + வாள் = sword
S + இடம் = sஇட(ம்) = s + ite = site
S + தண்டு ( நிலைநிற்றல் ) = stand
S + கப்பல் = s+கப் = ship
S + கரை = shore
S + சமம் = same
S + சங்கு ( சங்கு கீதம் ) = song
S + அளதி ( உப்பு ) = salt
S + ஓது ( படி , கல் ) + 3து - ஸ்டது = study
S + உப்பர் ( உயரம் ,மேல்பக்கம் , சிறந்த ) = super
S+தார் = star ( தாரகை = தார் + கை = ஸ்+தார் = star )
S + ஏலம் = s + ஏல் = sale
S + ஆக = s+ஏக் = saku
S + தலம் = stall
வாய் + ஸ் = ( voi-ce ) voice
ஆங்கில எழுத்து A to Z தமிழ் எழுத்துக்களில் இருந்து வந்தவையே . வந்த முறையை தனி அட்டவணையில் பார்க்கவும் . ( பதிவு M :1 )

பிறப்பு - Birth.
பொறு - Bear.
பதின் - Ten.
உருண்டை - Round.
உருளை - Roll
அரிசி - Rice
தேங்குதல் - Tank
ஈனுதல் - Earn
களி (மண்) - Clay.
காசு = cash
பணம் = fund
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
M + ஆக்கு = m + ake = make
" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button
பொத்தகம் = புத்தகம் = புக் + அகம் = Book
தகதக -> தங்கம் ( அரி ) - > சொலித்தல் = சொலிக்கும் அரி = jewellary
தமிழில் நாவாய் என்ற சொல்லே ஆங்கிலத்தில் Navy என மாறியது.
நாடு , நாட்டியன் என்ற தமிழ் சொல் இல் இருந்து வந்த ஆங்கில சொல் தான் நாட் + டியன் = nat + ion = NATION .
English language இல் உள்ள 14,286 சொற்களில் 286 நவீன சொற்கள் தவிர்ந்து மீதி 14 000 சொற்களும் தமிழில் இருந்து வந்தவையே .
( பதிவு : M 4 பார்க்க )
உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஜரோப்பிய மொழிகளின் தாய் மொழியும் தமிழே .
-------------------------------
"" FRENCH மொழியில் :
சாயங் காலம் = = சாயல் = SOIR
நாக்கு ஒலியை = நாக்ஸ் பிரஞ்சு
நாய்ஸ் ஆங்கிலம்
பிரஞ்சு மொழி , சித்திர எழுத்தான சீன மொழி , சிங்கள மொழி , அரபு மொழி , யூதர்களின் எபிரேய மொழி ஆகியவை தமிழ் மொழியில் இருந்து வந்த முறை , இயங்கு முறையை தனி பதிவில் பார்க்கவும் . ( பதிவு M 100 ல் ) ""
தமிழ் மொழி தோன்றிய நாள் முதல் இன்று வரை ஏழு வேறு வேறு எழுத்து முறை இருந்தது . பேச்சுமொழி தமிழ் மொழியாகவே இருந்தது .
உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன்.
இதில் ப ழகர எழுத்து முறை இன்று யூதர்களின் Hebru எழுத்து முறையாக உள்ளது . , சித்திர எழுத்து சீனர்களின் எழுத்தாக உள்ளது .
தொன்மை மொழியான தமிழுக்கும் பழந்தமிழுக்கும் பெரிதும் வேறுபாடில்லை .
ஆங்கிலத்தில் 20 % நேரடி தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % நேரடி தமிழ் மொழி உள்ளது .
லத்தீன் , கிரேக்கம் தமிழ் மொழியில் இருந்து வந்து தமிழுடன் தொடர்பு உள்ள வரை வாழ்ந்தது , தமிழ் மொழி தொடர்பு அறுந்ததும் இறந்து விட்டது .
சமஸ்கிரதம் ஓரு தமிழர் எழுதிய எழுத்து மொழி . உலகில் ஒரு நாள் kyஒரு பொழுது கூட பேசப்படாத மொழி சமஸ்கிருதம் ஆகும் .
இரண்டு அல்லது மூன்று தமிழ் சொற்களினால் ஒட்டப்பட்ட சொற்கள்தான் சமஸ்கிரத சொற்கள் . உடைத்தால் தமிழ் சொற்கள் வரும் ( சிறிய எண்ணிக்கையில் கிரேக்க திரிந்த சொற்களும் உள்ளது )
- சமஸ்கிரம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி . )
கிரதம் = பாஷை = மொழி .
இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி
தமிழ் ஓர் இயங்கு மொழி , சமசுகிருதம் செத்தமொழி .
- திராவிடம் :
தமிழில் இருந்து உருவான ஒரு நாகரீகம் தான் திராவிட நாகரீகம் .
திராவிட மொழிகள் அனைத்துக்கும் தாய் தமிழே .
ஆபிரிக்க மொழிகள் அனைத்துக்கும் அடி ஆணிவேர் தாய்மொழி தமிழே .
மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % நேரடி தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % நேரடி தமிழ் மொழி உள்ளது .
ஆதி மொழிகளான தமிழ் , சமசுகிருதம் , சீனம் , ஹிப்ரூ , கிரேக்கம் , இலத்தீன் , ஆகியனவற்றை ஆராயும் போது காலக் கணக்கிலும் தமிழ் அறப்பழமை வாய்ந்ததாகத் தெரிகிறது .
தமிழின் பழமை- உலகின் எந்த மொழியும் எட்டிவிட இயலாத காலக்கட்டத்தில் உள்ளது .
தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !
" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை !
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .
அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
யூத இனம் தமிழ் இனத்தில் இருந்து பிரிந்த ஒரு கிளை இனம் .
இன்று யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் ( ஒன்று மட்டுமே உள்ளது ) கி. முன் 2000 .
தமிழ் இனத்தில் உள்ள தொன்மையான பல நூல்கள் : கி. முன் 3000 ; கி.முன் 5000 ;
கி. முன் 7000 நூலான தொல்காப்பியமும் உள்ளது .
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு அர்த்தம் ; கருத்து ; பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான் .
மரத்தை கட்டுவதால் கட்டு மரம்
இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் " கட்டு மரம் " தான்]
உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகள் யாவும் தமிழின் கிளைகள் என்பதற்கு நம்மிடம் கிடைத்துள்ள இரு மாபெரும் ஆயுதங்கள் : ஒப்பு , மறுப்புச் சொற்கள் .
உலக மொழிகளின் அனைத்துக்கும் ஒப்பு சொற்கள் , எதிர்மறைச் சொற்கள் தமிழே :
( பதிவு M : 2 பார்க்கவும் )
தமிழ் எதிர்மறை முன் ஒட்டுக்களுடன் புதிய சொற்கள்
இம் - Immoral. இல் - Illegal. நிர் - Nil. அன் - Unused. அவ/அப - Abuse.
தமிழின் ஆதிக்கம் இல்லாத மொழிகள் உலகத்தில் எதுவுமே இல்லை .
- தமிழின் பரப்பு உலகெங்கும் உள்ளது .
- தமிழ் சொற்கள் இல்லாத உலகமொழியில்லை .
-தமிழ் இலக்கணம் பயன்படுத்தாத உலகமொழியில்லை .
-----------------------------
சிலர் கேட்கலாம் அந்த மொழிகளிலிருந்து தமிழ் பிறந்திருக்காதா , தமிழ்ச் சொல் உருவாகி இருக்காதா என்று .
கி.பி ( பின் ) ஆறு அல்லது எட்டாம் நூற்றாண்டிற்கு முன் உலகில் ( 99% ) பல மொழிகள் தோன்றவே இல்லை !
கி.மு ( முன் ) ஐந்தாம் நூற்றாண்டின் முன் உலகில் இருந்த மொழிகள் : இலத்தீன் , சமஸ்கிருதம் ( ஒரு பேசப்படாத மொழி ) , சீனம் ,ஹிப்ரூ, கிரேக்கம் . இவை ஐந்தும் தமிழில் இருந்து திரிந்த மொழிகள் ஆகும் .
கி.மு 3000 க்கு முன் உலகில் இருந்த ஒரே மொழி தமிழ் மட்டுமே !
-----------------------------
"" - இருக்கு நூல் ( வேதங்கள் ) கூறுவதாவது: உலகில் ஒலி முதலில் எழுந்தது .
- பைபிள் கூறுவதாவது : உலகில் ஒரே மொழியும் ஒரே சப்தமாய் இருந்தது .
- குர் ஆன் கூறுவதாவது : உலகில் முதலில் ஒலி இருந்தது . ""
----------------------------------
தமிழ் நாடும் - இலங்கைத் தீவும் - கண்டத் திட்டுகளும் ஒன்றாய் இருந்த பெரு நிலப்பரப்பு தமிழ் தோன்றிய இடம் .
---------------------------------
 முதல் 1920 ல் ஈழம்-யாழ்பாணத்தில் ஈழத்து அறிஞர்களால் குமரிக்கண்டம் , லெமோரியா , தமிழர் நிலம் உலகின் முதல் நிலம் என்ற நூல் வெளியிடப்பட்டது .
#1963 ல் இயற்கை மொழிக்காவலர்,மொழிஞாயிறு " தேவநேயப் பாவாணர் " முதன் முதலில் தமிழ்தான் ஞாலமுதன்மொழி , உலக மொழிகளின் தாய் என கூறியவர் .
20 மொழிகளில் முழுமையாக ஆளுமை அவருக்கு இருந்தது . LATIN - GREC -HEBRU தமிழில் இருந்து வந்த முறையை அவர் எழுத்து மூலம் நிறுவினார் .
# 2006 ல் எம்மொழியும் எம் மொழி - பன்மொழி அறிஞர் ,அகில மொழி மேதை சாத்தூர் சேகரன் ஐயாவிற்கு 170 உலக மொழிகளில் முழுமையான ஆளுமை இருந்தமையால் தமிழில் இருந்து 170 உலக மொழிகள் பிறந்த முறையை தமது நூல்கள் ஊடாக வெளியிட்டு உலகின் மூத்த இனமும்,மொழியும் தமிழர்களுடையது என உலகிற்கு பறைசாற்றினார் .
---------------------------------

புதன், 12 ஜூலை, 2017

ஆங்கிலத்திலும் இரண்டறக் கலந்துள்ள தமிழ் ! தமிழ் சொற்கள் அறிவோம்!

சுமார் 60% விழுக்காடு ஆங்கில வார்த்தைகளை நாம் சொல்லாய்வு கொண்டு ஆராய்ந்தால் தெரியவரும் . அத்தகைய சொல்லாய்வு ( Etymology ) செய்த சொற்களை சிலவற்றை காண்போம் . படத்தில் கொடுக்கபட்டிருக்கும் தமிழ் சொற்களோடு ஸ்(S) என்ற வார்த்தை பயன்டுத்தி மருவி வந்த ஆங்கில சொற்களை கவனிக்கவும் .
பெரும்பாலான ஆங்கில சொற்கள் தமிழுடன் நேர் தொடர்பு கொண்டவையாக இருக்கிறது , மீதம் உள்ள ஆங்கில சொற்கள் லட்டின் மொழியில் இருந்து மருவி இருக்கும் பட்சத்தில் , லட்டின் சொற்களை சொல்லாய்வு கொண்டால் ,அவை மருவி இருக்கும் இடமும் தமிழே .
குறிப்பாக மற்றொன்டையும் நாம் நினைவில் கொள்ளல் வேண்டும் அதாவது இன்று தமிழ்நாட்டில் தமிழர்கள் பேசும் இன்றைய தமிழில் 60% விழுக்காடு தமிழ் சொற்களை பயன்படுத்தாமல் அழித்து இருக்கிறோம் என்பதும் எவரும் மறுக்க முடியாத உண்மையாகும்.எத்தனை விவாத மேடைகளாக இருக்கட்டும் , எத்தனை பட்டிமன்றகளாக இருக்கட்டும் , பொது தளமாக இருக்கட்டும் , எப்படி கொண்டு ஆராய்ந்தாலும் சரி , தமிழ் வளர்ந்திருக்கிறதா ? ,அழிந்து இருக்கிறதா ? அல்லது அழிந்து விட்டதா ? என்ற கேள்வி எழும் நிலையில் மெய்யான முடிவுகள் அழிந்து கொண்டு இருக்கிறது என்பதை தாண்டி சென்று அழிந்து விட்டது என்ற பொருள் பெரும் பெறுவதற்கான முன் நிலையில் இருக்கிறது என்று சொல்லலாம் .
சிலர் ..இல்லை இல்லை அதெல்லாம் அழியாது என்று வாதாடுவார்கள் ..அது எப்படி ? என் மகன் , மகள் ,பேரன் ,பேத்தி டாடி மம்மி என்று பேசினால் தமிழ் அழியும், அவை அழியாது என்று கூச்சலிடுவார்கள்.சரி அப்படி இருக்கையில் இன்று மெரும்பாலான தமிழ் மக்களுக்கு கீழே கொடுக்கபட்டுள்ள வார்த்தைகள் அறிந்ததுண்டா என்று சோதித்தால் இன்று தமிழ் நாட்டில் வாழும் 8 கோடி தமிழர்களில் , இன்றைய நாள் {30-06-2013}கணக்கு கொண்டு பார்த்தால் குறைந்த பட்சம் 50 லட்சம் தமிழர்களுக்கு சொந்த தாய் மொழி தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்கள், அறிந்து இருகிறார்கள் என்று சொன்னால் அது மிகவும் மிகையே . முடிவுகள் 100% விழுக்காட்டில் 10% விழுக்காடு கூட தேராது ..சரி வாங்க அத்தகைய வார்த்தைகளை தெரிந்து கொள்வோம் , பயன் படுத்துவோம் , பலரை பயன்படுத்தவும் செய்வோம் .
பிற மொழிப்பெயர்கள் > தமிழ்ப் பெயர்கள்
1 டிரேடரஸ் : வணிக மையம்
2 கார்ப்பரேஷன் : நிறுவனம்
3 ஏஜென்சி : முகவாண்மை
4 சென்டர் : மையம், நிலையம்
5 எம்போரியம் : விற்பனையகம்
6 ஸ்டோரஸ் : பண்டகசாலை
7 ஷாப் : கடை, அங்காடி
8 அண்கோ : குழுமம்
9 ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ் : பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ் : போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ் : மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் : நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் : மரக்கடை
18 பிரிண்டரஸ் : அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் : மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் : மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் : வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம்
24 காபி பார் : குளம்பிக் கடை
25 ஹோட்டல் : உணவகம்
26 டெய்லரஸ் ; தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் : துணியகம்
28 ரெடிமேடஸ் : ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் : திரையகம்
30 வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் : நிதியகம்
33 பேங்க் : வைப்பகம்
34 லாண்டரி : வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ் : உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ் : கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் : கல்நார்
41 ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ : தானி
43 ஆட்டோமொபைலஸ் : தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம்
45 பேக்கரி : அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம்
47 பசார் : கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் : நலநிதி
51 போர்டிங் லாட்ஜத்ங் : உண்டுறை விடுதி
52 பாய்லர் : கொதிகலன்
53 பில்டரஸ் : கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள் : கம்பிவடம், வடம்
55 கேபஸ் : வாடகை வண்டி
56 கபே : அருந்தகம், உணவகம்
57 கேன் ஒர்கஸ் : பிரம்புப் பணியகம்
58 கேண்டீன் : சிற்றுண்டிச்சாலை
59 சிமெண்ட் : பைஞ்சுதை
60 கெமிக்கலஸ் : வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட் : சீட்டு நிதி
62 கிளப் : மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63 கிளினிக் : மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ் : குளம்பியகம்
65 கலர் லேப் : வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66 கம்பெனி : குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளகஸ் : வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர் : கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்கஸ் : திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன் : கூட்டு நிறுவனம்
71 கூரியர் : துதஞ்சல்
72 கட்பீஸ் சென்டர் ; வெட்டுத் துணியகம்
73 சைக்கிள் : மிதிவண்டி
74 டிப்போ : கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர் : ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனரஸ் : உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகலஸ் : மின்பொருளகம்
78 எலக்ட்ரானிகஸ் : மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம் : விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ் : முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோரஸ் : மிதிவண்டியகம்
82 பேக்டரி : தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர் : புதுமைப் பொருளகம்
84 பாஸ்ட் புட் : விரை உணா
85 பேகஸ் : தொலை எழுதி
86 பைனானஸ் : நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட் : அறைகலன் அங்காடி
88 கார்மென்டஸ் : உடைவகை
89 ஹேர் டிரஸ்ஸர் : முடி திருத்துபவர்
90 ஹார்டு வேரஸ் : வன்சரக்கு, இரும்புக்கடை
91 ஜூவல்லரி : நகை மாளிகை
92 லித்தோ பிரஸ் : வண்ண அச்சகம்
93 லாட்ஜ் : தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட் : சந்தை அங்காடி
95 நர்சிங் ஹோம் : நலம் பேணகம்
96 பேஜர் : விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ் : வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் : தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் : கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் : சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல் : கன்னெய், எரிநெய்
102 பார்மசி : மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ : ஒளிபட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி : நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் : குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ் : ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் : பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் : விசைத்தறி
109 பவர் பிரஸ் : மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் : அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட் : தாவளம், உணவகம்
112 ரப்பர் : தொய்வை
113 சேல்ஸ் சென்டர் : விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் : வணிக வளாகம்
115 ஷோரூம் : காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் : பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி : வளிரூர்த்தொழில், காலகம்
118 ஸ்டேஷனரி : மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் : வங்குநர்,
120 ஸ்டேஷனரி : தோல் பதனீட்டகம்
121 டிரேட் : வணிகம்
122 டிரேடரஸ் : வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் : வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ் : பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் : தேனீரகம்
126 வீடியோ : வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் : பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ் : படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே : ஊடுகதிர்...

செவ்வாய், 11 ஜூலை, 2017

களப்பிரர் - தமிழகத்தின் முதல் குடியாட்சி


களப்பிரர் காலம் தமிழ் வரலாறில் இருண்ட காலமாக கருதப்படுகிறது. அந்த காலம் சுமார் கி.பி 2 - 5ஆம் நூற்றாண்டு வரையிலான காலம்.
தொல்காபியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை உட்பட ஐம்பெரும் காப்பியங்கள், மற்றும் பல சிறப்பான ஈடு இணையற்ற இலக்கியங்கள் எல்லாம் தமிழில் உருவாக்கப் பட்ட காலம் கி.மு. 1 - முதல் கி.பி.5 - ஆம் நுற்றாண்டு வரையே.
ஆனால், நாம் படிக்கும் எல்லா வரலாற்று புத்தகங்களும், அந்த காலத்தை, மட்டும் தமிழரின் இருண்ட காலம், களப்பிரர் என்ற வேறு ஒரு இனம் தமிழரை அடிமை படுத்திய காலம் என்று ஏன் கூறுகிறது.
களப்பிரர் வேறு இனம் என்றால் அவர்கள் ஏன், தமிழில் இப்படி பட்ட இலக்கியங்களை படைக்க வேண்டும் அல்லது படைக்க உதவ வேண்டும்.
உண்மையில் நடந்தது என்ன வென்று பார்ப்போம். கி.பி.1ஆம் நூற்றாண்டு மூவேந்தர்களின் ஆட்சி கிட்டத்தட்ட முடிவை நெருங்கிய காலம். அந்த கால கட்டத்தில் பெரும் பான்மையான மக்கள் கொண்டிருந்த வழக்கம், முன்னோர் வழிபாட்டு முறையான நடுகல் வழிபாடு(போரில் இறந்த முன்னோருக்கு கல்நட்டு வழிபடுதல்) மற்றும் சாத்தன் வழிபாடு(போரில் இறந்த முன்னோரில் குதிரை ஏறி புரிந்தவர், குதிரை வைத்திருந்த வீரன் சிறு வசதியான குடும்பமாக இருப்பர், அவர்கள் சிறு கோயில் கட்டி வழிபட்டனர்), இன்றும் நெல்லை குமரி மாவட்டங்களில் பல சாதிகளை சேர்ந்தவர்கள் பங்குனி மாதம் உத்திரம் நாளில் தங்கள் குடும்ப சாத்தான் கோயிலுக்கு சென்று வழிபடுவர். அதாவது அவர்கள் பல சாதிகளை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் மூத்த முப்பாட்டன் ஒருவனே என்று பொருள்
இந்த காலங்களில் பாண்டியருக்கும், சோழர்களுக்கும் பார்ப்பன மோகம் பிடித்து ஆட்டிய காலம், எல்லா நேரமும் பார்ப்பனருடன் சேர்ந்து யாகம் வளர்ப்பதே வேலையாக இருந்தனர், தங்களை மற்றவரைவிட சிறப்பாக காட்டி கொள்ள முனைந்தனர்.
இதில் இருவர் சேர வில்லை, ஒருவர் சேரமன்னன் செல்வக்கடுங்கோ வாழியாதன், இவர் தான் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ அடிகளின் தந்தை, இவர் மகனே கண்ணகிக்கு சிலையை எடுக்க இமயமலை சென்ற இமயவரம்பன் சேரன் செங்குட்டுவன். மற்றொருவர் காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன், இவன் கரிகால் சோழனுக்கும், ஈழத்து இளவரசிக்கும் பிறந்தவன்.
அதே நேரத்தில் இந்த பார்ப்பன மோகத்தில் மூழ்கி திளைத்த பாண்டியன் பெயர், பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி, சோழனின் பெயர், ராஜசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி. இவர்களின் பெயரே இவர்களின் செயலை நமக்கு புரியவைக்கும். இவ்விருவரும் கணக்கில்லா விளைநிலங்களை பார்ப்பனருக்கு தானமாக கொடுக்க, வேளாண்குடிகளான பொதுமக்களின் மனக்கசப்பிற்கு ஆளானார்கள். ஏனெனில் நிலம் பார்ப்பனருக்கு மன்னன் கொடுத்தால், அங்கே விவசாயம் செய்து வந்த விவசாயி நிலத்தை காலி செய்துகொண்டு எங்காவது கூலி வேலைக்கு தான் போக வேண்டும், அல்லது அந்த நிலம் பெற்ற பார்ப்பனிடம் கூலி வேலை செய்ய வேண்டும்
முடிவு மக்கள் புரட்சி, தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும், மக்கள் தமக்குள்ள ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து, அவன் தலைமையில், அரசனையும் அவனது படைகளையும் எதிர்த்து போராட தொடங்கினர், போராட்டத்தின் இறுதியில், பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி அச்சுதன் என்ற வேளாண்குடி தலைவனால் கொல்லப்படுகிறான். ராஜசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளியும் கொல்லப்படுகிறான், அவனை வென்ற தலைவன் பேர் தெரியவில்லை. இதில் உற்று நோக்க வேண்டியது என்ன வென்றால், இந்த மக்கள் புரட்சி காஞ்சிலும், சேரநாட்டிலும் நடக்க வில்லை.
இதுவே அரசர்களை எதிர்த்து நடந்த உலகின் முதல் மக்கள் புரட்சி, அனால் நமக்கு இந்த காலம் இருண்ட காலம் என்று பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப் படுகிறது.
உண்மையில் அவர்கள் களப்பிரர் அல்ல, களப்பரர் - கள பறையர், அஃதாவது, வேளாண் களத்தில் பணிசெய்தவர். இந்த புரக்ட்சிக்கு பின் அவர்கள் பல ஊர்களை தலைமையாக கொண்டு அந்த பகுதிகளை ஆட்சி செய்தனர், உண்மையான மக்களாட்சி தான் அவர்கள் செய்தது, அவர்கள் பார்ப்பனருக்கு மக்கள் வரிப்பணத்தை செலவு செய்யாமல், புலவர்களுக்கு பொருள் உதவி செய்து, பல தமிழ் இலக்கியங்களை உருவாக்க உதவினார்.
முக்கியமான களப்பிர குடியரசு தலைவர்கள் - ஆதாரம் இலங்கை மகாவம்சம்
1. பாவுத்திரை - திரையன் - (Today's dharmapuri)
2. வேங்கடம் - புள்ளி - (Today's Tirupathi)
3. மிலாடு - காழிமலையன் - (Today's Thirukoilur)
4. தொத்தி மலை - வெல்கெழு நல்லிக்கோன் - (Today's Dottabeta - Ooty)
5. முதிரமலை - இளங்குமணன் - (Today's Palani)
6. நடுநாடு - இடக்காலி - (Today's center of Karnataka)
7. எருமையூர் - ஆய் வியங்கோவே -(Today's Mysore)
8. இடைகழினான் II
9. அச்சுதாவி கரந்தன்
10. சேடிவல்லவன்
பார்ப்பனர் வருகைக்கு பின் மக்களுக்கு அவர்களை போல மதம் சார்ந்த கொண்டாட்டங்கள் தேவைப்பட்டதால், அன்பு நெறி போதித்த சமண மற்றும் பவுத்த மதங்களை ஏற்று கொண்டு, பல கொண்டாட்டங்களையும் விழாக்களையும் ஏற்படுத்தினர்.
இவர்களின் ஆட்சி கி.பி 220 தொடங்கி கி.பி 550 வரை சுமார் 300 வருடங்கள் நடந்தது, பெரும்பாலும், தனி நகர்ப்புற ஆட்சியாகவே (Like City states of Greece) இருந்த்தது, பெரிதாக யாரும் அடுத்த நாட்டை பிடிக்க வேண்டும் என்று அலைய வில்லை. மக்கள் அமைதியாக வாழ வழி செய்தனர்.
கி.பி. 300-ல் பாரசீகத்திலிருந்து வந்து தொண்டைமண்டலத்தில் குடியேறிய பல்லவர்கள் சுமார் கி.பி 400-ல் சிம்ஹவிஷ்ணு பல்லவன் காலத்தில் காஞ்சியின் ஆட்சியை கைப்பற்றினர். மகேந்திர பல்லவன் (கி.பி600) எல்லா களப்பிர பகுதிகளையும் கைப்பற்றி ஒருங்கிணைந்த பல்லவ சாம்பிராச்சியத்தை உருவாக்கினான்.
இந்த பல்லவர்களும் முதலில் பவுத்தமத்தை பின்பற்றினாலும், பிற்காலத்தில் மகேந்திர பல்லவன் காலத்தில், சைவ சமயத்துக்கு மாறினார், ஞான சம்பந்தர் என்ற பார்ப்பனர் மூலம் மீண்டும் பார்ப்பனர் பலம் பெறலானார்கள்,
இம்முறை பார்ப்பனர் யாகத்துக்கு முதலிடம் கொடுப்பதை விட்டுவிட்டு களப்பிரர் இலக்கியம் மூலம் பவுத்தம், சமணம் வளர்த்த முறையை பின்பற்றி பக்தி இலக்கியம் என்று சிவனின் அற்புதங்கள் திருவிளையாடல்கள், என்று தங்கள் வழிமுறையை மாற்றிக்கொண்டனர்.
தமிழகத்தில் வருணாசிரம முறை வலுவாக காலூன்ற தொடங்கியது இந்த 7-8ஆம் நூற்றாண்டு கால கட்டமே
ஆக மொத்தத்தில்,
களப்பிரர் காலம்,
தமிழரின் இருண்ட காலம் அல்ல,
பார்ப்பனரின் இருண்ட காலம்.
உண்மையில்
தமிழரின் பொற்காலம்,
- கிருஷ்ணவேல் தி.எஸ்

செவ்வாய், 9 மே, 2017

மனித இனத்தின் தோற்றம் பற்றி இன்று வரை ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே தான் வருகின்றது. இப்படித்தான் மனித இனம் வளர்ச்சியடைந்தது என்பதை எவரும் அடித்துக் கூறவில்லை.
அதனால் ஒரு வித சர்ச்சையான விடயமாகவே இந்த மனித இனத்தின் தோற்றம் காணப்படுகின்றது. அந்த வகையில் பூமியில் மனித இனத்தை தோற்றுவித்தவர்கள் வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்தவர்களே என ஆய்வாளர்கள் நிறுவுகின்றனர்.
இப்போதைய மனித சமூகம் இதனை ஏற்றுக் கொள்ளுமா? மதங்கள் கடவுள்கள் என்ற ஓர் கட்டுப்பாட்டில் வாழ்ந்து கொண்டு வரும் மனித இனம் இதனை ஏற்றுக் கொள்ளுமா? இவை மிகப்பெரிய கேள்விகளே.
பூமிக்கு வேற்றுக் கிரகவாசிகள் வருகை தந்தனர் எனவும், அவர்கள் பூமியில் தங்கம் என்ற கனிமத்தை எடுக்கவே வந்தார்கள் எனவும் கடந்த பதிவில் பார்த்திருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக உண்மைத் தன்மைப் பற்றியும், மனித இனத்தின் தோற்றம் பற்றியும் ஆய்வாளர்கள் கூறியுள்ள அதிர்ச்சிமிக்க தகவல்களை பார்க்கலாம். முதல் பதிவை பார்வையிட இங்கே அழுத்தவும்
பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் தங்கத்தை எடுக்கவே வந்தார்கள் என்பதனை நிரூபிக்கும் ஆதாரங்கள் பலவற்றை ஆய்வாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் கி.மு 3000 ஆண்டுகளில் வாழ்ந்து வந்த சுமேரிய நாகரீகம் ஓர், ஆதி நாகரீகம் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் நாகரீகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கண்டு பிடிக்கப்பட்ட எழுத்துப் படிவங்களில் ஓர் விடயம் கூறப்பட்டுள்ளது.
அதாவது விண்வெளியில் இருக்கும் ஓர் நட்சத்திரத்தில் இருந்து அநூனாக்கி (Anunnaki) எனப்படும் தமது கடவுள் பூமியில் தங்கத்தை எடுப்பதற்காக வந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்தக் கடவுள், அவர்களை (மனிதர்களை) தமது அடிமைகளாக இருக்க வேண்டும் என கட்டளையிட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்களை 1976ஆம் ஆண்டு Zecharia Sitchin ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்தன.
அதிலும் குறிப்பாக உலகில் முதல் மனிதன் ஆதாம் என பைபிள் கூறுகின்றதனை, அதற்கு முன்னராகவே சுமேரிய கல்வெட்டுப் படிமங்களில் உலகின் முதல் மனிதன் அடெமு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுமார் 5500 வருடங்களுக்கு முன்பே இந்த மனித தோற்றம் பற்றிய சுமேரியப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆச்சரியம் மிக்கதே.
மேலும் மனித தோற்றம் வளர்ச்சி போன்ற அனைத்தும் சுமேரிய குறிப்புகளில் கூறப்படுகின்றது.
வானத்தில் இருந்து வந்த கடவுள் தம்மை அவருக்கு கீழ் வேலை செய்ய வேண்டும் எனக் கட்டளையிட்டதாகவும் எழுதப்பட்டுள்ளதை Zecharia Sitchin எனப்படும் ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார்.
அதன் அடிப்படையிலும், பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள் ஊடாகவும் ஆய்வுகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து பூமிக்கு தங்கம் எடுக்க வந்த வேற்றுக்கிரகவாசிகளுக்கு.,
அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றவும், அவர்களுக்கு கீழ் வேலை செய்யவும் மனிதர்கள் தேவைப்பட்டிருக்கலாம்.
அதற்காக ஆரம்பகால பூமியில் புத்திசாலித்தனம் மிக்க உயிரினமான ஓர் குரங்கு வகையை தேர்ந்து எடுத்து அவற்றின் மரபணுக்களோடு, தமது மரபணுக்களையும் இணைத்து பூமியில் மனித இனம் தோற்று விக்கப்பட்டிருக்க வேண்டும் என Zecharia Sitchin அடித்துக் கூறுகின்றார்.
இதனை பல ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. உதாரணமாக இன்று வரை மனிதனின் பரிணாம வளர்ச்சி சர்ச்சைக்கு உரியதாகவே காணப்பட்டு வருகின்றமை சிறந்த எடுத்துக்காட்டு.
அதேபோன்று ஆதி மனிதர்கள், பண்டைய கால குகை ஓவியங்களில் தமது கடவுள்கள் அல்லது தலைவர்கள் வானத்தில் இருந்து வந்தவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஆதிகாலத்தில் அதாவது கப்பல் பயணமே சாத்தியமற்ற காலப்பகுதியில் விண்வெளிப்பயணம் மேற்கொள்ளப்பட்டமைக்கு ஆதாரங்களும் பூமியில் காணப்படுகின்றது.
இவ்வாறாக வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக மனித இனத்தை தோற்றுவித்ததாகவும், மனிதர்களை அவர்கள் பயன்படுத்திக் கொண்டதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதன்படி மனிதர், தமக்கு அறிவு கொடுத்து, பலத்தை அதிகரித்தவர்களை கடவுள்களாக ஏற்றுக் கொண்டு அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றி வைத்துள்ளனர்.
அவ்வாறு வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்தவர்கள் தங்கிய இடங்களே காலப்போக்கில் வழிபாட்டுத்தலங்களாக மாறிப் போனதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு உதாரணமாக பிரமிட் என்ற கட்டுமானத்தில் கற்களுக்கு இடையே பூசப்பட்டுள்ள ஒரு வித பசைத் தன்மை மிக்க கனிமம் பூமியில் எங்குமே இல்லாத கனிமத்தைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதை முன்வைக்கின்றனர் ஆய்வாளர்கள்.
அத்தோடு எத்தகைய தாக்கத்தாலும் அழிக்க முடியாத சக்தி மிக்கதோர் கனிமத்தைக் கொண்டு இந்த பிரமிட்டுகள் கட்டப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது போன்று இப்போதைய மனித தொழில் நுட்ப அறிவுக்கு எட்டாத பல அதிசயங்கள் ஆதிகாலத்தில் உருவாக்கப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
புராண குறிப்புகள், கதைகள் போன்ற அனைத்துமே கூறுவது தமது கடவுள்கள் வேறு உலகத்தில் இருந்து பறந்து வந்தவர்கள் என்பதனையே.
மேலும் மதங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் கூறினாலும் அடிப்படையில் இந்த ஓர் கருத்தையே அனைத்து மதங்களும் முன்வைக்கின்றன என்பது தெளிவு.
அதேபோல் இப்போது வாழும் எந்த மனிதனுக்கும் கடவுளாக கூறப்பட்டவர்கள் கண்ணுக்கு புலப்படுவதில்லை இது ஏன்? என்ற கேள்வி எவருக்கும் இலகுவில் வந்து விடாது.
அதற்கான பதில் ஆரம்ப காலத்தில் கடவுளாக பார்க்கப்பட்டவர்கள் மனிதர்களின் வாழ்கையோடு பயணித்துள்ளனர், அதனால் அவர்களின் கண்களுக்கு தெரிந்தனர்.
ஆனால் இப்போது அவ்வாறான கடவுள்கள் பூமியை விட்டு சென்று விட்டனர் அதனால் அவர்கள் (வேற்றுக்கிரக வாசிகள்) புலப்படுவதில்லை என்பதே ஆய்வாளர்களின் கருத்து.
ஆனாலும் இன்றும் அவர்கள் பூமிவாசிகளை கண்காணித்தவாறே இருக்கின்றார்கள் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்துகள் உண்மையாயின், ஏன் இப்போது பூமிவாசிகளுக்கு வேற்றுக்கிரகவாசிகள் தென்படுவதில்லை? என்ற கேள்வி எழக்கூடும்.

வேற்றுக்கிரகவாசிகளும் மனிதர்களும்! 



இதற்கான பதிலோடு, யார் அந்த Anunnaki எனப்பட்ட கடவுள்? இந்துக் கடவுள்களோடு இவருக்கு தொடர்பு உண்டா?
அவர் மூலம் மனித இனம் கற்றுக் கொண்டது எதனை? வேற்றுக்கிரகவாசிகளுக்கும் இருண்ட கிரகம் எனப்படும் Planet Nibiru எனப்படும் கிரகத்திற்கும் என்ன தொடர்பு?
பூமியின் அழிவு இந்த கிரகத்தாலேயே ஏற்படும் என புராணக்கதைகள் கூறுவதோடு ஆய்வாளர்களும் தெரிவித்து வருகின்றனர். அப்படியாயின் அவை ஏன் வெளி உலகிற்கு சொல்லப்படவில்லை இதற்கான பதில்கள் அடுத்த பதிவில்.,

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...