செவ்வாய், 30 ஏப்ரல், 2019


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, உரைபிரண்டை... சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை... என பல வகைப்படும். இதற்கு, `வஜ்ஜிரவல்லி’ என்ற பெயரும் உண்டு. `Cissus quadrangularis’ என்ற தாவரவியல் பெயர்கொண்ட இது, கொடி வகையைச் சேர்ந்தது.
பிரண்டை:
இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக் காணப்படுகிறது. மருத்துவக் குணமுடையது. பொதுவாக, மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது. இதன் சாறு உடலில்பட்டால், அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்தும். இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இதில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரணப் பிரண்டையே அதிகமாகக் கிடைக்கிறது.
அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.
எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும்.
பிரண்டை துவையல்:
மனஅழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டிவிடும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும். மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்தத் துவையலைச் சாப்பிடலாம். மேலும் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு, இதய வால்வுகள் பாதிப்படையும். இந்த பாதிப்புக்கு உள்ளானோர், அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும்; இதயம் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து.
எலும்பு முறிவு ஏற்பட்டால், இதன் துவையலைச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம். இளம் தண்டுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்து, நன்றாகக் காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப் போடுவதன் (பாதிக்கப்பட்ட இடத்தில் பூசுவது) மூலம் பலன் கிடைக்கும். எலும்பு முறிவு மட்டுமல்லாமல், அடிபட்ட வீக்கம், சுளுக்கு, வலி உள்ள இடங்களிலும் இதைப் பூசிவர நிவாரணம் கிடைக்கும்.
பிரண்டைத் தண்டு துவையல்:
பிரண்டைத் தண்டுகளின் மேல் தோலை அகற்ற்றி, அதில் உள்ள நாரையும் அகற்றிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்க வேண்டும். அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். சுவைக்காக தேங்காய், உளுந்து சேர்த்துக்கொள்ளலாம். பிறகு, கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்த துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
பிரண்டை இலை துவையல்:
பிரண்டையின் இலையிலும் துவையல் செய்யலாம். இதைச் சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூல நோய் போன்றவை குணமாகும்.
இலை 100 கிராம், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு - 3 பல், மிளகு - 5, காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் மஞ்சள், உப்பு ஆகியவை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும். முதலில் இஞ்சி, பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்றவற்றை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு பிரண்டை இலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டு வதக்கி, ஏற்கெனவே அரைத்து வைத்த கலவையுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்தால் துவையல் தயார்.
வற்றல்:
நன்கு முற்றிய இதன் தண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கி, மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊறவைத்து உலர்த்தி வற்றலாக்க வேண்டும். அந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் பசியின்மை, நாக்குச் சுவையின்மை போன்றவை குணமாகும்.
பிரண்டை உப்பு:
பிரண்டையை உலர்த்தி எடுத்து தீயில் எரித்துச் சாம்பலாக்க வேண்டும். அப்படிக் கிடைக்கும் ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து, வடிகட்டி, அரை நாள் தெளியவைக்க வேண்டும். அப்படி தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 முதல் 10 நாள்கள் வெயிலில் உலரவைக்க வேண்டும். நீர் முழுவதும் வற்றி உலர்ந்த பிறகு கீழே படிந்திருக்கும் உப்பைச் சேகரித்து வைக்கவும்.
பிரண்டை உப்பில் 2 முதல் 3 கிராம் எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்துச் சாப்பிட 2 மாதத்தில் உடல்பருமன் குறைந்து, ஊளைச் சதையும் குறையும்.
2 கிராம் பிரண்டை உப்புடன் ஜாதிக்காய்த்தூள் 5 கிராம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், ஆண்மைக்கோளாறு பிரச்னை தீரும். வீரியம் பெருகும்; உடல் வலிமை பெறும்.
வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு வெடிப்பு போன்ற பிரச்னைகளுக்கு 2 கிராம் வெண்ணெயுடன் இந்த உப்பைக் கலந்து இரண்டு தடவை கொடுத்தால், மூன்று நாளில் குணமாகும்

-1:58

வியாழன், 15 நவம்பர், 2018

எது கெடும் ?


01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும் கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.
41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.
கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு

செவ்வாய், 6 நவம்பர், 2018

அருந்தமிழ் மருத்துவம் 500



இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,
இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது
சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை
பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி
கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி
முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்
உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!
விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை
கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி
நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே
தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை
கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி
வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு
கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே
உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே
அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

கில்கமேக்ஷ் காவியம்

கில்கமேக்ஷ் காவியம் .... உலகின் முதல் இதிகாசம்...


கில்கமேக்ஷ் காவியம்’ என்பது மெசப்பட்டோமியாவை ஆண்ட கில்கமேக்ஷ் என்ற 
மாமன்னைப் பற்றிய பெருங்கதை. 

பேரரசர் கில்கமேக்ஷ் வாழ்ந்த காலமாக கி.மு 4000 என்று சொல்கிறார்கள். 
அதாவது கிறிஸ்த்துவுக்கு முன் நாலாயிரம் வருடங்கள். 

உலகில் எந்த மதமும் தோண்றியிருக்காத காலம் என்று யூகிக்கிறார்கள். 

சுமேரியர்களிடமிருந்தே ஆசிய நாகரீகம் தோண்றியிருக்கும் என்று நம்புவதால் 
இந்த யூகம்.சரி கில்கமேக்ஷ் கதையைப் பார்ப்போம். 

(சுமேரிய மொழியில் இருந்தே திராவிட மொழிகள் உருவான என்றொரு கருதுகோள் 
இருப்பது தெரியுமா ) 

உருக் நகரை கில்கமேக்ஷ் ஆள்கிறான். 

இளம் பிராயத்தில் பெரிய வீரனாயிருக்கிறான்.காளையை போன்ற சக்தி வாய்ந்த 
உடலைக் கொண்டிருக்கிறான்.அவனை வெல்ல யாருமில்லை அந்த நாட்டில்.பார்க்கும் 
பெண்களையெல்லாம் அடைய ஆசைப்படுகிறான். 

அருரு என்னும் பெண் தெய்வம் கில்கமேக்ஷை எதிர்க்க அவனைப்போல பலம் வாய்ந்த 
ஒருவனை பூமிக்கு அனுப்பவேண்டும் என்று கொஞ்சம் களிமண்ணை எடுத்து பிசைந்து 
எறிகிறாள்.அது பூமியில் விழுந்து “என்கிடு” என்கிற மனிதனாக பிறக்கிறது. 

என்கிடு மிருங்களோடு மிருகமாக வளர்கிறான்.ஆனால் மிகபலசாலி. 

என்கிடுவை காட்டில் பார்த்த வேட்டைக்காரன் அரசன் கில்கமேக்ஷிடம் 
என்கிடுவின் வலிமையை பற்றிச் சொல்கிறான். கில்கமேக்ஷ் ஆச்சர்யபட்டு 
வேட்டைகாரனிடம், ஒரு தாதியை என்கிடு முன்னால் நிற்க செய்யவும் என்று 
உத்தவிடுகிறான். 

அதுபோலவே ஒரு அழகான பெண் ஆடையில்லாமல் என்கிடு முன் நிற்க, என்கிடுவின் 
ஆண்மை விழித்துக்கொள்கிறது. ஏழுநாள் ஏழுபகல் காமம் துய்கிறான். பின் 
மிருகங்களோடு செல்லும் போது ,மிருகங்கள் அவனை சேர்த்துகொள்ள மறுக்கின்றன( 
தாதியுடன் உள்ள உறவால் மிருகங்கள் அவன் மனிதனே என்று தெரிந்து 
கொள்வதால்).தாதி அவனை அன்போடு அழைத்துப்போகிறாள். போகும் வழியில் 
இடையர்கள் என்கிடுவை வரவேற்கிறார்கள். 

என்கிடுவுக்கு தாதிக்கும் ரொட்டியும் பாலும் 
கொடுக்கிறார்கள்.மிருகச்சூழ்நிலையில் வாழ்ந்த என்கிடுவுக்கு எப்படி 
ரொட்டியையும் பாலையும் சாப்பிட வேண்டும் என்று கூடத் தெரியாது. தாதிதான் 
சொல்லிக்கொடுக்கிறார். பதிலுக்கு அந்த கொடுங்காட்டில் உள்ள 
சிங்கங்களையும்,ஒநாயையும் கொன்று குவித்து இடையர்களுக்கு உதவி செய்கிறான் 
என்கிடு 

அப்போது இடையர்களிடம் வந்து சும்மா கதைப்போக்காக கில்கமேக்ஷின் பெண் 
வேட்டைகளைப்பற்றி சொல்ல என்கிடுவுக்கு கோபம் வருகிறது. “யார் அந்த 
கில்கமேக்ஷ்” என்று அவனுக்கு பாடம் கற்றுக்கொடுக்க போகிறான் என்கிடு. 
அங்கே கில்கமேக்ஷ் என்கிடுவுக்காக காத்திருக்கிறான். இருவருக்கும் கடும் 
சண்டை. 
சண்டையின் முடிவில் கில்கமேக்ஷ் ஜெயித்தாலும், என்கிடுவை அவனுக்கு 
பிடித்திருக்கிறது. என்கிடுவுடன் நண்பானாகிறான். இருவரும் நட்பை வளர்த்து 
கொள்கிறார்கள். 

இப்போது அவர்கள் நாட்டின் பக்கத்தில் உள்ள மிகப்பெரிய காட்டில் உள்ள 
“ஹம்பாபா” என்னும் அரக்கனை கொல்ல போகிர்றார்கள் கில்கமேக்ஷும் 
என்கிடுவும்.கொல்வதற்கு முன் சூரிய கடவுளிடம் வேண்டி பல வரங்களை பெற்றுக் 
கொள்கிறான் கில்கமேக்ஷ்.எட்டு வகையான காற்றும் அவனுக்கு துணையாக 
இருக்கும் என்று வரம் கொடுக்கிறார் சூரியக்கடவுள்.இந்த ‘ஹம்பாபா’ 
மிகப்பெரிய வீரன். அந்த காட்டில் அவன் அனுமதி இல்லாமல் யார் வந்தாலும் 
கொன்று விடுவான்.ஆனால் கில்கமேக்ஷும் என்கிடுவும் பயப்படாமல் 
சென்றார்கள். 

அவர்களைப் பார்த்ததும் ‘ஹம்பாபா’ தாக்க வருகிறான்.ஆனால் எட்டுவகையான 
காற்றும் ஹம்பாபாவை நோக்கி சுழன்று அடிக்கின்றன.ஹம்பாபா அது தாங்க 
முடியாமல் கில்கமேக்ஷிடம் மன்னிப்பு கேட்கிறான்.கில்கமேக்ஷ் இரக்கப்பட்டு 
மன்னிக்க தயாராகும் போது , என்கிடு தடுக்கிறான். ”கொடியவனுக்கு இரங்காதே! 
நீதியை விட்டுவிடுபவன் எல்லாம் விதிவசம் போய்விடுவான்” என்று சொல்லி 
கில்கமேக்ஷ் மற்றும் என்கிடு இருவரும் ஹம்பாபாவை கொன்று 
விடுகிறார்கள்.’என்கில்’ என்ற பூமிதேவதைக்கு மட்டும் இது பிடிக்கவில்லை. 

இப்படி ஹம்பாபாவை கொன்று கில்கமேக்ஷ் தன் நண்பனோடு நாடு திரும்பும் போது, 
கில்கமேக்ஷின் தேஜசையும் அழகையும் கண்டு வியந்து காதல் கடவுள் “இஸ்தார்” 
காதலிக்கிறாள். தன்னுடைய காதலை கில்கமேக்ஷிடம் சொல்ல, “முடியாது.நீ 
இதற்கு முன்னர் காதலித்தவர்கள் எல்லாம் அழிந்துதான் 
போயிருக்கிறார்கள்.என்னால் உன்னை திருமணம் செய்து விதைகளை கொடுக்க 
முடியாது என்கிறான். 

இதனால் இஸ்தார் கோபமடைந்து தன் தந்தைகடவுள் “அனு” விடம் சொல்லி தேவக்காளை 
ஒன்றை கில்கமேக்ஷ் மீது ஏவி விடுகிறாள். ஆனால் கில்கமேக்ஷ் என்கிடுவின் 
துணையோடு அந்த காளைமாட்டை கொன்று விடுகிறார். 

இப்போது என்கிலும், இஸ்தாருமாகிய இரண்டு தேவதைகளும் தெய்வ சபையை கூட்டி 
கில்கமேக்ஷ் மற்றும் என்கிடுவின் அட்டகாசம் கூடுகிறது. கடவுளின் ஆதரவு 
உடையவர்களையே கொன்று விடுகிறார்கள். ஆகையால் கில்கமேக்ஷ் என்கிடு 
இருவரில் யாராவது ஒருவர் சாக வேண்டுமென்று சொல்கிறார்கள். 

என்கிடு கடும் காய்ச்சல் வந்து பண்ணிரெண்டு நாட்கள் உடல்நலமில்லாமல் 
இறந்து விடுகிறான். தன் அருமை நண்பன் என்கிடுவின் இறப்பு கில்கமேக்ஷின் 
துக்கத்தை அதிகரிக்க செய்கிறது. என்கிடுவை வைத்து ஏழு பகல் ஏழு இரவு 
ஒவென்று அழுதான். பின் நிறைய தங்ககங்கள் வைரங்கள் வைத்து அடக்கம் 
செய்தான். 

என்கிடுவின் மரணம் தன்னை செயல் படவிடாத துக்கத்தை கொடுக்க, அழியாத 
வாழ்வைத்தேடி கில்கமேக்ஷ் தன் பயணத்தை தொடங்குகிறார். 

தூரதேசத்தில் ’உத்தனபித்தம்’ என்ற மாமனிதர், பெருவெள்ளத்தில், உலகமே 
அழியும் போது பிழைத்தவர் என்பதால் அவரைப்பார்த்தால் விடைக்கிடைக்கும் 
என்று நினைத்து கில்கமேக்ஷ் அவரை நோக்கி தன் பயணத்தை தொடங்கினான். 

பல நாட்கள் நடந்த பிறகு அங்கிருந்த இருட்டான மாக்ஷு பாதையை இரண்டு தேள் 
மனிதர்கள் காவல்காப்பதைப் பார்க்கிறார். 

அவர்கள் இந்த மாக்ஷு பாதை இருட்டானதென்றும். அதில் போனால் எதுவும் 
தெரியாதென்றும் எச்சரித்தார்கள்.ஆனாலும் கில்கமேக்ஷ் தான் போக 
விரும்புவதாய் சொல்ல கில்கமேக்ஷை போக அனுமதிக்க, பல நாள் நடந்து முடிவில் 
சூரிய ஒளியை காண்கிறான். 

அங்கே திராட்சை ரசம் செய்யும் சிதூரி என்னும் 
பெண்ணைப்பார்க்கிறான்.சிதூரி இறப்பில்லாத வாழ்க்கை கிடைக்க சாத்தியமில்லை 
என்கிறாள்.ஆனால் கில்கமேக்ஷ் பிடிவாதமாய் இருக்க “இதோ இந்த கடற்கரையில் 
தான் ஊழிவெள்ளத்தில் தப்பித்த ’உத்தன்பித்தம்’ பெரியவரின் தோணிக்காரர் 
“ஊர்சனாபி’ இருக்கிறார்.அவரிடம் கேள் என்று சொல்ல, கில்கமேக்ஷ் 
ஊர்சனாபியிடம் சரணடைகிறான். 

ஊர்சனாபி அவனை பலகடல்கள் தாண்டி உத்தன்பித்தம் இருக்கும் ஊருக்கு 
கூட்டிச்செல்கிறார். 

அங்கே உத்தன்பித்தம் கில்கமேசை வரவேற்கிறார்.தன்னுடைய கதையை சொல்கிறார் 
உத்தன்பித்தம். 

யூப்பரிட்டிஸ் நதியோரம் உள்ள சுருப்பாக் என்னும் நகரத்தில் பல வருடம் 
முன் பிறந்து வளர்ந்தவர் உத்தன்பித்தன். அப்போதுதான் மனித நாகரீகம் 
தோண்றியமையால் மனிதர்கள் எப்போதும் கத்திக்கொண்டே 
இருந்தார்களாம்.அத்னைக்கண்டு வெறுப்புற்ற தெய்வங்கள் உலகை நீரால் அழிக்க 
திட்டமிட்டதாம். 

உத்தன்பித்தன் கனவில் “இயா” என்னும் தேவதை தோண்றி ‘நீ பெரிய கப்பல் 
கட்டு.அதனுள் எல்லா ஜீவராசிகளையும் ஜோடியாக சேகரித்து கொள்.உலகம் 
அழிந்ததும் வெளியே வா “என்றது. அதன் படியே ஒரு ஏக்கர் அளவுக்கு பெரியாதான 
கப்பலை செய்து அதனுள் ஜீவராசிகளை வைத்து வெள்ளம் வற்றியதும் வெளியே 
வருகிறார் உத்தன்பித்தம். பின் தெய்வங்களில் ஆசி வாங்கி இறப்பில்லாத 
வாழ்வை பெறுகிறார். 

கில்கமேக்ஷ் தனக்கு இறப்பில்லா வாழ்க்கை தத்துவத்தை சொல்லக் 
கேட்கிறார்.அதற்கு உத்தன்பித்தம் “நீ ஏழூநாட்கள் தூங்காமல் இருந்தால் அதை 
சொல்வேன் ” என்று சொல்வார்.ஆனால் கில்கமேக்ஷால் இருக்க முடியாது. நன்றாக 
தூங்கிவிடுவார். 

உத்தன்பித்தத்தின் மனைவி தினமும் ஒரு ரொட்டியை சுட்டு கில்கமேக்ஷ் முன்பு 
வைத்து விடுவார். கில்கமேக்ஷ் கண்முழித்ததும் தன் முன்னே ஏழு ரொட்டிகள் 
இருப்பது பார்த்து ‘இப்படி தூங்கிவிட்டேனே’ என்று வருந்துகிறான். 

உத்தன்பித்தம் உடனே பரிதாபமாகி “கில்கமேக்ஷ் கொஞ்ச தூரம் கடலில் போனது. 
கடலுக்கு அடியில் இருக்கும் ரோஜா பூவின் செடியை சாப்பிட்டால் நீ இறப்பு 
இல்லாத வாழ்வை அடையலாம் “ என்பார். 

கில்கமேக்ஷ் அதை தின்பதற்கு பெரு முயற்சி செய்யும் போது அதை ஒரு 
நீர்பாம்பு தின்று கில்கமேக்ஷின் லட்சியத்தின் மேல் மண்ணைப் போட்டு 
விடுகிறது. 

இப்படியாக மனிதனாய் பிறந்தால் இறந்தே தீரவேண்டும் என்ற உண்மையை 
கில்கமேக்ஷ் கண்டு கொள்கிறான். 

மறுபடி தன்னுடைய நாடான உருக் திரும்பி, நாட்டை சீர்திருத்தி நன்றாக 
ஆண்டு, மிக நல்ல மன்னனாக உயிர் துறக்கிறான். 

இப்போது நான் கொடுத்தது மிகச் சின்ன கதை சுருக்கம் மட்டுமே... 

டாக்டர் எஸ்.தியாகராஜா எழுதிய ‘கில்கமேக்ஷ் காவியம்” என்ற புத்தகத்தில் 
படித்தை மிக மிக சுருக்கமாக எழுதியிருக்கிறேன்

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

உலகின் முதல் மொழி தமிழ்!

மொழி அறிவு இன சிறப்பு !!!
ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!!
ஆதாரம் இதோ...........
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
========================
தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !
The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button
உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .
2015 ஆய்வுகளின் படி :
( Germany-ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள். Germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் (Europe-ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் கூறுகிறார்கள்).
லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் கண்ட எழுத்து மொழி.
("நிறைமொழி" மாந்தர் ஆணையில் கிளர்ந்த "மறைமொழி" தானே மந்திரம் என்ப) என்கிறது தொல்காப்பியம்.
நிறைமொழி - தமிழ்
மறைமொழி - சமஸ்கிரதம்
- சமஸ்கிரதம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி)
சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .
இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி
மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .
தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !
" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
1500 வருடங்களுக்கு முன் தெளுகு என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய தெளுகு.
'தெள்ளு தமிழ் பாடி தெளிவோனே" என்று முருகனை புகழ்கிறது திருப்புகழ்.
1000 வருடங்களுக்கு முன் கன்னடம் என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய கன்னடம்.
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .
அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான். மரத்தை கட்டுவதால் கட்டு மரம். இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் "கட்டு மரம்" தான்.
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
இன்று இருக்கும் பழமையான நூல்களில், யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் "தோரா" (கி.முன் 2000 ஆண்டுகள்

ஞாயிறு, 13 மே, 2018


நுட்பவியல் கலைச் சொற்கள்



தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் .
 இச்சொற்களை அன்றாடம் பயன்படுத்துங்கள்.
தமிழை வாழவைப்போம்.
1. WhatsApp - புலனம்
2. youtube - வலையொளி
3. Instagram - படவரி
4. WeChat - அளாவி
5.Messanger - பற்றியம்
6.Twtter - கீச்சகம்
7.Telegram - தொலைவரி
8. skype - காயலை
9.Bluetooth - ஊடலை
10.WiFi - அருகலை
11.Hotspot - பகிரலை
12.Broadband - ஆலலை
13.Online - இயங்கலை
14.Offline - முடக்கலை
15.Thumbdrive - விரலி
16.Hard disk - வன்தட்டு
17.GPS - தடங்காட்டி
18.cctv - மறைகாணி
19.OCR - எழுத்துணரி
20 LED - ஒளிர்விமுனை
21.3D - முத்திரட்சி
22.2D - இருதிரட்சி
23.Projector - ஒளிவீச்சி
24.prinder - அச்சுப்பொறி
25.scanner - வருடி
26.smart phone - திறன்பேசி
27.Simcard - செறிவட்டை
28.Charger - மின்னூக்கி
29.Digital - எண்மின்
30.Cyber - மின்வெளி
31.Router - திசைவி
32.Selfie - தம் படம் - சுயஉரு
33 Thumbnail சிறுபடம்
34.Meme - போன்மி
35.Print Screen - திரைப் பிடிப்பு
36.Inket - மைவீச்சு
37.Laser - சீரொளி

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...