வியாழன், 8 மே, 2025

 

ஒரு பக்கம் பாக்குறா


படம : மாட்டுக்காரவேலன்
இசை : K.v.மகாதேவன்
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : T.m.s

ஒரு பக்கம் பாக்குறா
ஒரு கண்ணை சாய்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா
சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா !!

ஆடையை திருத்துறா அள்ளி அள்ளி சொருகுறா
அரை கொரை வார்த்தை சொல்லி பாதியை முழுங்குறா
பின்னலை முன்னே விட்டு பின்னி பின்னி காட்டுறா
பின்னாலே தூக்கி விட்டு கையாலே இழுக்குறா
பூப் போல காலெடுத்து பூமிய அளக்குறா
பொட்டுணு துள்ளி துள்ளி சிட்டாக பறக்குறா
நெலையிலே கைய வெச்சு ,நிக்குறா நிமிருறா
நிறுத்தி மூச்சு விட்டு நெஞ்சை தாலட்டறா
((ஒரு பக்கம்))

காலாலே நிலத்துலே- கோலம் போட்டு காட்டுறா
கம்பி போட்டஜன்னலிலே கன்னத்தை தேய்க்கறா
கண்களை மூடி மூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா
கரந்த பாலை நான் கொடுத்தா கைய தொட்டு வாங்குறா -
என் கைய தொட்டு வாங்குறா
கை விரல் பட்டதிலே பால் சொம்பு குலுங்குது
கையை இழுத்து கிட்டு பாலோடு ஒதுங்குது
உன்னை போலே எண்ணி எண்ணி என்கிட்ட மயங்குது
உன் முகம் பார்த்தும் தான் உண்மை எல்லாம் விளங்குது
((ஒரு பக்கம்))
 

 பாடல் : நாளை இந்த வேளை......

படம் :உயர்ந்த மனிதன்
பாடல் வரிகள்: வாலி
பாடியவர் : P.சுஷீலா

பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய்

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று 
பொய் விடு ஆஆ
தென்றலே என் தனிமை கண்டு நின்று பொய் விடு

வண்ண விழியன் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
வண்ண விழியன் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
பெண்மையே உன் மேன்மை கண்டு கலைஞன் ஆகினான் கலைஞன் ஆகினான்

(நாளை...)

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணமென்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன் மயக்கம் கொண்டதேன்


(நாளை...)

 நினைவோ ஒரு பறவை...

படம்: சிகப்பு ரோஜாக்கள்.
உயிர்: இளையராஜா.
குரல்: கமல்ஹாசன், ஜானகி

நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

(நினைவோ ஒரு பறவை...)

ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன்
அதுவல்லவோ பருகாத தேன் அதி இன்னும் நீ பருகாததேன்
அதற்காகத்தான் அலைபாய்கிறேன்
தந்தேன் தரவந்தேன்

(நினைவோ ஒரு பறவை...)

பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ
அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடிசாய்கிறேன்
மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
நீ தான் இனி நான் தான்

(நினைவோ ஒரு பறவை...)

 படம் : இளமை ஊஞ்சலாடுது

பாடகர்கள் : எஸ்.பி .பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
பாடல் : ஒரே நாள்


________________________________


ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது


ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது


மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன


ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது


நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்


கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான் தயக்கமென்ன


ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது


ஆ ஆ ஆ ர ர ர ர ர ல ல ல ல ல ல ர ர ர ர
ர ர ர ர ர ல ல ல ல ல ர ர ர ர


பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
கண்ணிறேண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிறேண்டிலும் ஒரே லயம்
இரவும் பகலும் இசை முழங்க


ஒரே நாள் ……..
உன்னை நான் ……….
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
ஊஞ்சலாடுது …
அஹ அஹ அஹ ஆஹா

 செந்தமிழ் தேன் மொழியாள்

Movie : Maalai itta mangai

music : Viswanathan – ramamurthy
singer : T r magalingam


சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றாது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..

செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்

காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ

அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்

கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…

அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்

 திரைப்படம்: அபூர்வ ராகங்கள்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்,
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்


அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம்

வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்.... மோகம்.... மோ..கம்
வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திர லோகத்து சக்கரவாகம்

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் - அந்த
தேவதை கிடைத்தால் அது என் யோகம் - அது என் யோகம்

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
அவளொரு பைரவி அவளொரு பைரவி

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

வெள்ளி, 28 மார்ச், 2025


தமிழ் ஈழம்

 முன்பொரு காலத்தில் ஈழம் உட்பட இந்திய பெருநிலப்பரப்பு முழுவதும் இருந்த ஒரே மொழி தமிழாகும். ஈழம் உட்பட இந்திய பெருநிலப்பரப்பு முழுவதும் இருந்த ஒரே எழுத்து வரிவடிவம் சிந்துவெளி எழுத்து வரிவடிவமாகும்.ஆனால் சீன எழுத்துகளும் யப்பானிய எழுத்துகளும் இன்றுவரை பட எழுத்து வடிவங்களாகவே விளங்குகின்றன.சீன மொழியில் மலையைச் சூரியன் தொடும் படம் மேற்கைக் குறிக்கும், மலையைச் சூரியன் தொடாத படம் கிழக்கைக் குறிக்கும்.ஆனால் தமிழில் இருப்பது வரிவடிவ எழுத்துகள். இது சிந்துவெளி காலத்திலேயே வரிவடிவ எழுத்துக்களாக உருவாகிவிட்டது.

எனவே உலகின் பண்டைய மொழிகளிலேயே தமிழ் மொழி ஒன்றுதான் காலத்தால் மிகத் தொன்மையான வரிவடிவ எழுத்துக்களை கொண்ட ஒரே மொழியாக காணப்படுகிறது. இச் சிந்துவெளி தமிழ் எழுத்தை உருவாக்கியவர் ஐந்திரனார்.அவ் வரிவடிவ எழுத்துக்களுக்கும் இலக்கணம் சொன்ன உலகின் ஒரே மொழி தமிழாகும். எனவேதான் உலகின் பல்வேறு இடங்களிலும் தமிழ் மொழி வழங்கியமைக்கான ஆதாரங்கள் அவர்களுடைய மொழிகளில் காணப்படுகின்றன. அத்தோடு அத்தமிழ் மொழிக்குரிய சிந்துவெளி எழுத்துக்களும் (குறியீடுகள் உட்பட ) வி(ப)ரவிக் காணப்படுகின்றன.
இந்த சிந்து வெளி எழுத்தில் ஆண் பால் விகுதியைப் பிரித்து எழுதியிருக்கிறார்கள். கந்தன் என்று இப்போது நாம் எழுதுவதை, கந்த அன் என்று அன் விகுதியைப் பிரித்து எழுதுவார்கள். எகிப்தில் உள்ள பிரமிட்டில் கந்த அன் என்று சிந்துவெளி எழுத்தில் எழுதியிருக்கிறார்கள்.ஈழத்தில் ஆனைக்கோட்டை கல்வெட்டில் மேலே சிந்துவெளி எழுத்தும் கீழே தமிழி எழுத்தும் இருக்கின்றன. இறையனார் களவியல் உரை மூன்று சங்கங்களைப் பற்றிப் பேசுகிறது. முதல் சங்கம் பட எழுத்துக்குரியது. இரண்டாவது சங்கம் சிந்து வெளி எழுத்துக்குரியது. மூன்றாம் சங்கம் தமிழி எழுத்துக்குரியது.சிந்துவெளிக் கட்டமைப்பை ஒட்டித் தான் தமிழி தோன்றியது. இந்த இறையனார் களவியல் உரை பண்டைய தமிழர்களான பாண்டியர்களுடைய கபாடபுரம் திகழ்ந்த குறித்தும் வெளிப்படுத்துகின்றது . அது பாண்டியர்களுடைய பழைய நிலப்பரப்பில் அதாவது ஈழத்தில் அமைந்திருந்தது .
மேலும் சிந்துவெளி நாகரிகமானது தெற்கில் இருந்து தான் வடக்குக்குப் போனது என்பதை எளிதாக நிறுவ முடியும்.அதனை ஆதிச்சநல்லூரில் கிடைத்த குடிநீர்க் குவளை விளிம்பு இல்லாதது; சிந்துவெளியில் கிடைத்த குடிநீர்க்குவளை விளிம்பு உடையது. விளிம்பு இல்லாத குவளையை அடுத்தே விளிம்பு உடைய குவளை உருவாக்கியிருப்பார்கள் எனவே சிந்துவெளி காலத்திற்கு முன்பே அதன் மூலம் தெற்கிலுள்ள நிலப்பரப்பில் நிலவியது இவை எடுத்துரைக்கின்றன. அத்தோடு சிந்துவெளி எழுத்துக்கள் ,தமிழி எழுத்துகள் அல்லாத வெற்று முதுமக்கள் தாழிகள் அவ்விடத்தே கிடைக்கப்பெற்றன. இவை போன்ற சம காலத்தை சேர்ந்த தாழிகள் ஈழத்தினுடைய மேற்கில் பொன்பரப்பியிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.எனவே
தொல் பழங்காலத்தின் மூன்று பிரிவுகளான
பழைய கற்காலம் (Palaeolithic Period)
முன் கற்காலம் (Lower Palaeolithic)
இடைக் கற்காலம் (Middle Paleolithic)
கடைக் கற்காலம் (Upper Paleolithic)
நுண்கற்காலம் (Microlithic அல்லது Mesolithic period), என்பன தென்னிந்திய பெருநிலப்பரப்பில் இருக்கும் அளவுக்கு வேறிடங்களில் காணப்படவில்லை. அத்தகைய பதினேழு இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கோடாரி ஒன்று அத்திராம்பாக்கம் என்ற இடத்தில் கிடைத்துள்ளது. ஆகவே தமிழர்களுடைய தொன்மையான வரலாற்று தாயகமாக தென்னிந்திய, ஈழ பிராந்தியங்கள் திகழ்கின்றன என்பதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க போதுமானதாகும். எனவே சிந்துவெளி நாகரீகம் ஓர் நகர நாகரீகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பாக அம்மக்களின் தொன்மம் பண்டைய தமிழக, ஈழப்பகுதிகளாகவே விளங்கின என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியும்.
மேலும் இச்சிந்துவெளி நாகரீகம் அழிவடைந்த பின்பாக தோன்றிய தமிழின் இன்னொரு வரிவடிவமான தமிழி தோற்றம் பெற்றது.
இத் தமிழி எழுத்துகளுக்குத்தான் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்தார். இவரது காலத்தை கி.மு. 865 என்கிறார் பேராசிரியர் இரா.மதிவாணன் அவர்கள் .
இச்சிந்துவெளிக்கு பின்னான காலத்தில் தமிழி எழுத்துகளின் அடிப்படையில் தான் இந்தியாவில் இருக்கும் எல்லா மொழி எழுத்துகளும் தோற்றம் பெற்றன . அவற்றுள் ஆந்திர சாதவாகனர் தாய்மொழியாகக் கொண்ட பிராகிருதம் உட்பட எல்லா மொழிகளும் தமிழி எழுத்துருவில் எழுந்தவை. அக்காலத்தில் சமற்கிருதத்திற்குத் தனி எழுத்தே இல்லை. மக்களின் பேச்சு மொழியாக காணப்படாமையால் அதற்குரிய எழுத்து வடிவமில்லை. சமஸ்கிருதம் இருந்ததற்கான கல்வெட்டுச்சான்றுகள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்துதான் கிடைத்திருக்கின்றன. அதற்கு முன்பான சான்றுகள் எவையும் இதுவரை இல்லை
மேலும் சிந்து சமவெளி நாகரிகக் காலத்தில் பெண் தெய்வ வழிபாடு தமிழர்களுடையதாக இருந்திருக்கிறது. பசுபதி கூடப் பெண் உருவம் என்று அண்மைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அத்தகைய கொற்றவையுடன் கூடிய மான்கள்
பொறிப்பு தமிழக மூணாறு அருகில் மறையூரில் இருக்கின்றன. சிந்துவெளியில் கொற்றவையுடன் காணப்படும் மான்கள் தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படுபவை.வட இந்தியாவில் மான்கள் கிடையாது. அதனை போன்ற கொற்றவை வடிவம் ஆதித்தநல்லூரிலும் கிடைத்தது.
சிந்துவெளியிலும் புலியுடன் சண்டையிடும் பெண்ணுருவம் கிடைத்தது. இக் கொற்றவையைச் சமணர்கள் இயக்கி ஆக்கினார்கள். தமிழருடைய வழக்கின் வழியாக ஒரு பெண் தெய்வம் கன்னியாக இருக்க வேண்டும் என்பது நிலைப்பாடாகையால். அவளை செல்லி,சல்லி செல்வி என பல்வேறுபட்ட பெயர்களில் அழைத்தனர்.
பிற்காலத்தில் தெலுங்கு, கன்னட மொழி கல்வெட்டுகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தான் கிடைத்திருக்கின்றன. அதே போன்று ஆரம்பகால சிங்கள மொழி கல்வெட்டுக்களும் இதே காலப்பகுதியை சேர்ந்தவையாகும்.
கி.பிபதினைந்தாம் நூற்றாண்டில் தான் மலையாளம் என்ற மொழி தமிழில் ஏற்பட்ட சங்கத கலப்பு காரணமாக தமிழில் இருந்து பிரிந்தது. அதே போன்று கன்னட,தெலுங்கு மொழிகளும் சங்கத மொழி கலப்புற்று தோற்றியவை ஆகும். சிங்கள மொழி கூட பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பாடு சங்கத மொழி மணிப்பிரவாள நடையை கொண்ட வீரசோழியம் என்ற இலக்கண நூலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதாகும்.











  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...