வெள்ளி, 1 ஜனவரி, 2016

சிவவாக்கியம்-091


 உடம்பு உயிர் எடுத்ததோ உயிர் உடம்பு எடுத்ததோ
உடம்பு உயிர் எடுத்தபோது உருவம் ஏது செப்புவீர் உடம்பு உயிர் எடுத்தபோது உயிர் இறப்பது இல்லையே
உடம்பு மெய் மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே!!!


உடம்பானது உயிர் எடுத்து வந்ததாஅல்லது உயிரானது உடம்பு எடுத்துக் கொண்டு வந்ததாஉடம்புதான் உயிர் எடுத்ததென்றால் உயிர் உயிர் வந்த பிறகுதானே உடம்பே தோன்றுகிறதுஉடம்பில் உள்ள உயிருக்கு உருவம் ஏது சொல்லுங்கள். உடம்பும் உயிரும் கூடிய மனிதன் இறந்த பின்னும் அவன் ஆன்மா அழிவது இல்லையே. ஆகவே இவ்வுடம்பு உண்மையல்லஎன்பதை உணர்ந்துஆன்மாவே மெய் என்பதை அறிந்து உடம்பில் மெய்ப் பொருளாக இறைவன் இருப்பதைக் கண்டு தன்னை மறந்த தியான நிலையிலோ இருந்து உணர்ந்து கொண்டு ஞானம் போதியுங்கள்.
 *******************************************
 சிவவாக்கியம்-092
அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவவும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!!!

"ஓம்" என்ற ஓங்காரத்தில்தான் அனைத்தும் தோன்றுகின்றது. "ஓம்" என்பதில் அகாரம்
உகாரம்மகாரம் என்ற மூன்று தத்துவங்கள் எழுத்துக்களாக அமைந்துள்ளது. அதில் "அ" என்னும் ஆகாயத் தத்துவத்தில் ஏழு உலகமும் ஆகி நிற்கின்றது. "உ" என்னும் விந்து தத்துவத்தில்தான் உருவம் தரித்து உருவாகின்றது. "ம" என்னும் த்த்துவத்தினால்தால் இவ்வுலகம் முழுவது மயங்குகின்றது. இதில் அவ்விலும்உவ்விலும் மவ்விலும் அமர்ந்திருப்பது "சி" என்னும் சிகாரமே.
 *******************************************
சிவவாக்கியம்-093 

மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடர்
 மந்திரங்கள் ஆவது மறத்தில் ஊறல் அன்றுகான்
மந்திரங்கள் ஆவது மதித்தெழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே!!!

மந்திரங்கள் யாவையும் படித்து ஓதி மயங்குகின்ற மனிதர்களேமந்திரம் என்பது மனதின் திறமேமந்திரங்கள் தர்ம வழியையே பின்பற்றும்மந்திரங்களை உணர்ந்து உச்சரிக்கும் பொது அதில் ஏழும் சப்தங்களின் அதிர்வலைகள் மூலாதாரத்தில் மோதி அங்கிருக்கும் கனலான வாயுவை எழுப்புதற்கே அன்றோ அமைக்கப்பட்டது. அதனால் வாசி மேலே ஏறி பிராணசக்தி கூடி மரணமில்லா பெருவாழ்வு அடைவார்கள். மந்திரங்களை முறையாக அறிந்து ஓதி ஆறு ஆதாரங்களிலும் நிறுத்தி தியாநிப்பவர்களுக்கு மரணம் ஏதும் இல்லையே!!!
 *******************************************
சிவவாக்கியம்-094
என்ன என்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை
பண்ணுகின்ற செந்தமிழ் பதம் கடந்த பண்பென 
மின்னக்த்தில் மின் ஒடுங்கி மின்னதான வாறு போல்
என்னகத்தில் ஈசனும் யானும் அல்லது இல்லையே.
இலக்கணம் இல்லாத தமிழைப் போல் இலட்சியம் ஏதுமில்லாத மனிதர்களை என்னவென்று சொல்லுவது. பண்ணிசைத்துப் படும் செந்தமிழ் பாடல்கள் யாவும்பரம்பொருளின் பாதம் பற்றி இறைவனை அடைவதே குறிக்கோள் என்பதே மனிதனின் பண்பு என்று கூறுகின்றது.  மின்னலாது தோன்றிமின்னளிலேயே ஒடுங்கிமின்னலாக மறந்ததுஅது எங்கிருந்தும் ஒளியைப் பெற்றுக் கொள்ளாமல்மேக மூட்டங்களின் மோதலால் தானே தோன்றி ஒடுங்குவதைப் போல் எனக்குள் மன ஓட்டத்தை நிறுத்தி வாசியால் கனலும் அனாலும் கலந்து என்னுள் சோதியான ஈசனைக் கண்டு தியானம் செய்தேன்.  அங்கு என்னையும் ஈசனையும் தவிர வேறு யாரும் இல்லையே
*******************************************
சிவவாக்கியம்-095
ஆலவித்தில் ஆல்ஒடுங்கி ஆழமான வாறு போல்
வேறு வித்தும் இன்றியே விளைந்து போகம் எய்திடீர்
ஆறு வித்தை ஒர்கிளீர் அறிவிலாத மாந்தரே
பாரும் இத்தை உம்முளே பரப்பிரமம் ஆவீரே!

மிகச்சிறிய ஆலவிதைக்குள் பெரிய ஆலமரம் ஒடுங்கியிருந்து வளர்ந்து மிகப் பெரிய ஆலமரமாக ஆகின்றது. அதுபோல பரம் பொருளே ஓரெழுத்து வித்தாக இருந்துவிளைந்து இன்ப துன்பமுறும் உடலாக உலாவுகின்றது.  ஒரேழுத்தே பிரமமாகிநமக்குள் இருப்பதை அறிந்து அதனை நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களிலும் வாசியை ஏற்றி இறக்கி யோகவித்தை செய்வதை அறியாமல் இருக்கும் அறிவிலாத மனிதர்களே!!  உமக்குள்ளேயே இந்த வாசி யோகத்தைச்செய்து பாருங்கள். மெய்ப்பொருளை அறிந்துப் பார்ப்பானைப் பார்த்து, வித்தாக உள்ள ஈசனை தியானம் செய்யுங்கள். நீங்களே அந்த பரப்பிரம்ம்மம் ஆவீர்கள். 
*******************************************
சிவவாக்கியம்-096
அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய் 
எவ்வெழுத்து அறிந்தவர்க்கு ஏழுபிறப்பு அது இங்கிலை
 சவ்வுதித்த மந்திரத்தை தற்பரத்து இருத்தினால்
அவவும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே

ஒரேழுத்து மந்திரமே முதல் எழுத்தாகிய அகாரம் தோன்றுவதற்கும் உயிர் எழுத்தாகி உகாரம் தோன்றுவதற்கும் காரணமாய் உள்ளது.  அது எவ்வாறு என்பதை அறிந்து தியாநிப்பவர்களுக்கு இங்கு ஏழு பிறப்பு என்பது இல்லைஎன்றாகிவிடும்.  தொண்டைச் சவ்வில் உதிக்கும் அந்த மந்திரத்தை 'ம்என்று ஓதி தன்னிடமே  உள்ள பரம்பொருளில் இருத்தி தியானியுங்கள்அகாரத்திலும்உகாரத்திலும்மகாரத்திலும் சிகாரமாய் அமர்ந்திருப்பது ஊமைஎழுத்தே  என்பதை உணருங்கள். 
 *******************************************
சிவவாக்கியம்-097
நவ்விரண்டு காலத்தை நவின்ற மவ் வயிறதாய் 
சிவ்வேரண்டு தோளதாய் சிறந்த வவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வாய் ஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துமே!

பஞ்சாட்சரம் நமது உடம்பில் நகாரம் இடுப்பிலிருந்து கால்கள் வரையிலும்மகாரம் வயிறாகவும்சிகாரம் நெஞ்சிலிருந்து இரண்டு தோள்கள் ஆகவும்வகாரம் தொண்டையாவும்யகாரம் இரண்டு கண்களாகவும் அனைவருக்கும் நேர்மையாக அமைந்துள்ளது. தூலத்தில் இவ்வாறு அமைந்துள்ள அஞ்செழுத்து சூட்சமத்தில் செம்மையான மெய்ப்பொருளாக அதே பஞ்சாட்சரமாக ஒத்து இருப்பதை அறிந்து தியானித்து சிவமே அஞ்செழுத்தாக  இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 
 *******************************************
சிவவாக்கியம்-098 
இரண்டுமொன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே
சுருண்டு மூன்று வளையமாய் சுணங்கு போல் கிடந்ததீ
முரண்டெழுந்த சங்கின் ஓசை மூலநாடி ஊடுபோய் 
அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே!  
மூலாதார சக்கரத்தின் உள்ளே பாம்பைப் போல் சுருண்டு மூன்று வளையமாக குண்டலினி சக்தி கனலான தீயாக இருந்து தூங்கிக் கொண்டுள்ளது. அதனை வாசியோகத்தில் விழிப்புறச் செய்தால் அச்சக்தியானது சங்கின் ஓசையுடன் கிளம்பும். .அவ்வாசியை சுழுமுனை எனும் மூலனாடியால் முதுகுத் தண்டின் வழியாக மேலேற்றி சகஸ்ரதளத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.  அது சக்தியும் சிவனும் ஒன்றாகி இயங்கும் அரங்கன் பள்ளி கொண்ட இடத்தில் சிவமாக அமர்ந்திருப்பதைஅறிந்து யோகஞான சாதகத்தால் தியானம் செய்து உணர்ந்து கொள்ளுங்கள். 
 *******************************************
சிவவாக்கியம்-099
கடலிலே திரியும் ஆமை கரையிலே ஏறி முட்டையிட்டுக் 
கடலிலே திரிந்தபோது ரூபமான வாறு போல்
மடலுலே இருக்கும் எண்கள் மணியரங்க சோதியை
உடலுலே நினைத்து நல்ல உண்மையானது உண்மையே!
கடலில் வாழும் ஆமையானது கரையில் ஏறி முட்டையிட்டு மணலைப் போட்டு மூடிவிட்டு கடலுக்கே சென்று விடும்.  பின் கடலில் திரிந்து கொண்டே நினைவாலே அடைகாக்கும். அதனால் முட்டைகள் பொறித்து அவை ரூபமாக வெளிவரும். அதன் பின்னரே தாயுடன் சேர்ந்து ஆமை குஞ்சுகளும் கடலில் திரயும். அவை ரூபம் அடைவதற்கு தாய் ஆமையின் நினைவே காரணமாய் இருந்தது போல்நம் உள்ளமாகிய தாமரையில் இருக்கும் மணியாக விளங்கும் அருட்பெருஞ் சோதியான ஆண்டவனை உடலுக்குள்ளேயே  மெய்ப் பொருளாக இருப்பதை எண்ணி நினைத்து தியானியுங்கள்.
 *******************************************
சிவவாக்கியம்-100

 மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம்
ஈண்ட தாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றும் ஓர் எழுத்துளே சொல்ல எங்கும் இல்லையே!  
அக்னி மண்டலம்,  சூரிய மண்டலம்சந்திர மண்டலம் ஆகிய மூன்று மண்டலங்கள் நம் உடற் தத்துவத்தில் உள்ளது. சந்திரகலைசூரிய கலை சுழுமுனை நாடிகளில் ஓடும் காற்றை வாசியாக்கி மூலாதாரத்தில் செலுத்தி தூணாகிய முதுகுத் தண்டினில் முட்டி மேலேற்ற எண்டும் பாம்பைப் போல் சுருண்டு உறங்கும் குண்டலினி சக்தியை ஓங்காரத்தில் எழும் அகார உகார அட்சரத்தால் எழுப்பி உண்ணாக்கில் வைத்து ஊதவேண்டும். இந்த மந்திரமே பெற்ற தாயும் தந்தையும் எடுத்துரைத்த ஓங்காரமாகும். அதுவே 'ம்என்ற நாத ஒலியுடன் சோதியான பிரம்மத்தில் சேரும், ஒரெழுத்தில் தோன்றுவதே ஓங்காரம். இதனைச் சொல்லித்தர யாரும் எங்கும் இல்லையே.

சிவவாக்கியம்-081

 
மிக்க செல்வம் நீர் படைத்த விறகுமேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்தி மேனி வெந்து போவது அறிகிலீர்
மக்கள் பெண்டிர் சுற்றம் மாயை காணும் இவையெலாம்
மறலி வந்து அழைத்த பொது வந்து கூடலாகுமோ?


பாவச் செயல்கள் செய்து நிறைந்த செல்வங்களைப் பெற்றும் நிம்மதி இன்றி வாழும் பாவிகளேநீர் இறந்து போனால் சுடுகாட்டிற்கு கொண்டு போய் விறகுவிராடியினால் அடுக்கி தீ வைத்து எரித்து இவ்வுடம்பு ஒருபிடி நீரும் இல்லாது சாம்பலாவதை அறிய மறந்தீர்களே!  மக்கள்மனைவிஉறவு என்பவர்கள் யாவும் வெறும் மாயை என்பதை உணருங்கள்எமன் வந்து இவ்வுயிரை எடுத்து போகும் பொது நீ செய்த புண்ணிய பாவமின்றி வேறு யாரும் கூட வரமாட்டார்கள். 
*******************************************
சிவவாக்கியம்-082
 
ஒக்க வந்து மாதுடன் செறிந்திடத்தில் அழகியே ஒருவராகி இருவராகி இளமை பெற்ற ஊரிலே
அக்கணித்து கொன்றை சூடி அம்பலத்தில் ஆடுவார்
அஞ்செழுத்தை ஓதிடில் அநேக பாவம் அகலுமே

ஒத்து வாழும் பெண்ணுடன் சிற்றின்பத்தில் ஈடுபடும்போது அதையே யோகமாக்கி பேரின்பம் அடையும் பட்டணம் ஒன்று என்றும் இளமையோடு இருக்கின்றதுஅந்த இடத்தில் ருத்திராட்ச மாலையும் கொன்றை மலரையும் சூடி ஈசன் உள்ளமாகிய அம்பலத்தில் நடனமாடிக் கொண்டிருக்கின்றார்அவனை அறிந்து அஞ்செழுத்து மந்திரத்தை ஓதி தியானம் செய்தால் செய்த அநேக பாவங்கள் யாவும் அகன்று விடும்.
*******************************************
சிவவாக்கியம்-083
 
 மாடு கன்று செல்வமும் மனைவி மைந்தர் மகிழவே மாட மாளிகைப்புறத்தில் வாழுகின்ற நாளிலே ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே
உடல் கிடந்தது உயிர் கழன்ற உண்மை கண்டும் உணர்கிலீர்

மாடமாளிகைகள் கட்டி மாளிகைகள் கட்டி மாடுகன்று போன்ற சகல செல்வங்களையும் சம்பாதித்து தம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நாட்களில்திடீரென்று விபத்தில் நடப்பது போல் எமதூதர்கள் ஒரு நொடியில் உயிரைக் கொண்டு போன பின் அவ்வுடல் பிணமாக கிடப்பதைக் கண்டும் உயிர் போனதை உணர்ந்தும் உயிரை அறியாமல் இருக்கின்றீர்கள்அவ்வுடலில் உயிராய் நின்ற ஈசன் ஆட்டுவித்த உண்மையை உணர்ந்து இரவா நிலைபெற்று இறைவனை சேர தியானம் செய்யுங்கள்.

*******************************************
சிவவாக்கியம்-084
பாடுகின்ற உம்பருக்கு ஆடு பாதம் உன்னியே
பழுதிலா கர்ம கூட்டம் இட்ட எண்கள் பரமனே
நீடு செம்பொன் அம்பலத்துள் ஆடு கொண்ட அப்பனே
நீலகண்ட காலகண்ட நித்தியா கல்லியாணனே
பரமனையே பாடுகின்ற உத்தமபக்தர்கள் இறைவனின் ஆடுகின்ற திருவடியையே தியானிப்பார்கள்.குற்றமில்லாத கர்ம யோகிகள் கூட்டம் அரஹர என கோஷம் இட்டுக் கூவி நாதோபாசானையால் அழைப்பதும் எங்கள் பரமனையேஎன்றென்றுமுள்ள செம்மையான பொன்னம்பலத்துள் சோதியாக நின்று நடராஜனாக ஆடல் புரியும் எங்கள் அப்பனேநீயே ஆழம் உண்ட நீலகண்டன்நீயே காலனை உதைத்த காலகண்டன்நீயே நித்தியமுமாய் ஆனந்தம் தரும் கல்யாண குணத்தவன். 

*******************************************
சிவவாக்கியம்-085
கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல் ஞானமற்ற நெஞ்சகத்தில் நல்லதேதும் இல்லையேல்
ஊனமற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடங்கினால்
தேனகத்தில் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே
இவ்வுடம்பை சுடுகாட்டில் வைத்து எரிக்கும் போது அது ஒன்றுக்கும் உதவாத ஒரு பிடி சாம்பலாகும்அது போல ஞானம் சிறிதும் இல்லா நெஞ்சம் உடையவர்களிடம் நல்லது ஒன்றும் இருக்காதுஅறிவாக சுடர் விடும் சோதியை அறிந்து அங்கேயே உன் உணர்வையும்மனதையும் நிலை நிறுத்தி தியானம் செய்து வந்தால் தேனில் ஒடுங்கியிருந்த ருசியானது நாவில் ஊறுவதுபோல் ஈசனின் அருளால் ஆனந்தம் கிடைக்கும்.

*******************************************
சிவவாக்கியம்-086

பரவி ஓடி உம்முளே பறந்து வந்த வெளிதனை
நிரவியே நினைந்து பார்க்கில் நின்மலம் அதாகுமே
உருகி ஓடி எங்குமாய் ஓடும் சோதி தன்னுளே
கருதுவீர் உமக்கு நல்ல காரணம் அதாகுமே

ஆகாயமாய் நமக்குள் இருக்கும் மனம் எங்கும் பரவி ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த மனத்தை குவித்து நம்மில் வெட்ட வெளியான இடத்தில் நிறுத்தி நினைவால் நினைந்து தியானம் செய்ய மனத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி அது சுத்த நிர்மலமாய் ஆகும்.  பார்க்கும் இடமெலாம் நீக்கமற நிற்கும் சோதியை தனக்குள்ளே கண்டு பரம்பொருளையே எப்போதும் கருத்தில் வைத்து தியானியுங்கள்அதுவாகிய மெய்ப்பொருளே இறவாநிலை பெற காரணமாகும்.
*******************************************
சிவவாக்கியம்-087
சோதி பாதி ஆகி நின்று சுத்தமும் பலித்து வந்து
போதியாத போதகத்தை ஓதுகின்ற பூர்ணா
வீதியாக ஓடி வந்து வின்னடியின் ஊடுபோய்
ஆதிநாதன் என்று  அனந்த காலம் உள்ளதே.
பூரணமாகிய சோதியில் ஆண் பாதிபெண் பாதியாக அர்த்தனாரீயாக நின்றது எது எனவும்எனக்குள் பரிசுத்தமான இடம் எது எனவும் காட்டிஎனக்கு யோகம் தியானம் செய்யும் முறைகளையும் போதித்து உபதேசித்த  மெயகுருனாதனே வாசி யோகத்தில் குண்டலினி சக்தியானது மூலாதாரத்திலிருந்து முதுகுத் தண்டின் வீதி வழியாக மேலேறி சகஸ்ரதளத்தை அடைந்து வெளியாக விளங்கும் இடத்தின் அடியில் சென்று சேருகின்றது. அங்கெ சோதியாகவும்நாதனாகவும்ஆதியாகவும் ஈசன் அனாதியாக எப்போதும் இருக்கின்றான்.
*******************************************
சிவவாக்கியம்-088
இறைவனால் எடுத்த மாடத் தில்லையம் பலத்திலே
அறிவினால் அடுத்த காயம் அஞ்சினால் அமைந்ததே
கருவு நாதம்  உண்டுபோய் கழன்ற வாசல் ஒன்பதும்
ஒருவராய் ஒருவர் கோடி உள்ளுளே அமைந்ததே

நமது உடம்பிலேயே சிவன் இருக்கும் சிதம்பரமாகிய ஆகாயத் தலத்தில் அறிவாக விளங்கும் சித்தத்தை அறியுங்கள். அவ்வறிவால் அமைந்த இவ்வுடலானது மண்
நீர், தீகாற்றுஆகாயம் என பஞ்சபூதங்களால் அடுக்கடுக்காக ஆராதாரங்களாய் அமைந்து உள்ளது. தாயின் கருவினிலே புகும் விந்து நாதத்தை உண்டு உருவாக்கி ஒன்பது வாசல் கொண்ட உடலுயிர் வளர்ந்து இப்பூமியில் வெளிவுறம். அப்படிவரும் கோடிக்கணக்கான உயிர் ஒவ்வொன்றிலும் சிவனே அதனுள் அமர்ந்துள்ளார் என அறியுங்கள்.
*******************************************
சிவவாக்கியம்-089
நெஞ்சிலே இருந்திருந்து நெருங்கி ஓடும் வாயுவை
அன்பினால் இருந்து நீர் அருகிருத்த வல்லிரேல்
அன்பர் கோயில் காணலாம் அகலும் எண் திசைக்குளே
தும்பி ஓடி ஓடியே சொல்லடா சுவாமியே!


நெஞ்சிலே இருந்து ஓடிக் கொண்டிருக்கும் பிராணவாயுவை யோகப் பயிற்சியினால் நிறுத்தி அன்பெனும் பக்தியுடன்தியானம் செய்துவாசியை உங்களுக்குள்ளேயே இருத்த வல்லவர்கலானால் அவ்வாசி யானது நம் பிராணனில் கலந்து இறைவன் இருப்பிடத்தை காட்டும்செய்த பாவவினைகள் யாவும் அகலும்.எண்திசைகள் யாவிலும் இயங்கும் ஈசனை அறிந்துணர்ந்துதும்பியானது ரீங்காரம் இடுவதைப் போல உனக்குள்ளே வாசியை ஓட்டி தியானம் செய்து இறைவனை அடையுங்கள்.
*******************************************
சிவவாக்கியம்-090
தில்லையை வணங்கி நின்ற தெண்டனிட்ட வாயுவே
எல்லையைக் கடந்து நின்ற ஏக போக மாய்கையே
எல்லையைக் கடந்து நின்ற சொர்க்கலோக வெளியிலே
வெள்ளையும் சிகப்புமாகி மெய் கலந்து நின்றதே!

தில்லையில் ஆடும் ஈசன் நம் உடலில் இடங்கொண்டு ஆகாய எல்லையில் ஆடி நம்மை ஆட்டுவிக்கின்றான்வாசிக் காற்றை மேலேற்றி செய்யும் பயிற்சியினால் அவ்வாசியானது ஈசனை வணங்கி அவனுடன் சேர்க்கின்றது. மனமெனும் எல்லையைக் கடந்து ஏகமாக நின்று எல்லா இன்ப போகங்களையும் அடையச் செய்வது மாயையே. மனமே வாசியாகி எல்லையாக
விருக்கும் ஆகாயத்தையும் கடந்து இறையைச் சேர்வதுவே ஆனந்தம். அவ்விறையையே உயிராக வெள்ளையும் சிகப்புமாக நம் உடலில் மெய்ப்பொருளாக நின்றது. 

சிவவாக்கியம்--071


இருக்கவேண்டும் என்றபோது இருத்தலாய் இருக்குமோ
மரிக்கவேண்டும் என்றாலோ மண்ணுலே படைத்தனர் சுருக்கமற்ற தம்பிரான் சொன்ன அஞ்செழுத்தையும் மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதம் கெடீர்

நாம் எப்பொழுதும் இப்படியே இருக்க வேண்டும் என்று நினைத்தால் இருக்க முடியுமாஇருந்து இறக்க வேண்டும் என்று தானே இப்பூமியில் நம்மைப் படைத்தனர். குறுகிய எண்ணம் இல்லாத என் குருநாதன் எனக்கு உபதேசித்த சிவனாம என்ற அஞ்செழுத்தையும் இறப்பதற்கு முன் அறிந்து கொண்டு வணங்கி செபம் செய்து தியானம் செய்யுங்கள். அதுவே இப்பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாக இருப்பதை உணராமல் இறை திருவடியை மறந்து கெடுகின்றீர்கள். 
********************************************************************************
சிவவாக்கியம்072

அம்பத்தொன்றில் அக்கரம் அடக்கம் ஓர் எழுத்துளோ விண்பறந்த மாத்திரம் வேதம் நான்கும் ஒன்றலோ
விண்பறந்த மூல அஞ்செழுத்துளே முளைத்ததே அங்கலிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே.

'
நமசிவயஎன்ற அஞ்செழுத்துக்கும் (9+11+4+15+12=51) எண்களைக் கொடுத்து அம்பத்தோர் அட்சரங்களாக்கி அமைத்து அதை ஒரேழுத்தான 'சியில் அடக்கினர். ஆகாயத்தில் பறந்து நின்ற சோதியான சிகாரமும்,வேதங்கள் நான்கும் கூறும் சிகாரமும் ஒன்றே. மூலாதரத்திலிருந்து ஆஞ்ஞா வரை ஓம் நமசிவய என்று உச்சரித்து தியானியுங்கள். நம் உடம்பிலேயே இழிந்கமாகவும்பீடமாகவும் அமைத்திருப்பது சிவமே என்பதை உணருங்கள்.
********************************************************************************
சிவவாக்கியம்073

சிவாயம் என்ற அட்சரம் சிவன் இருக்கும் அட்சரம்
உபாயம் என்று நம்புதற்கு உண்மையான அட்சரம் கபாடம் உற்ற வாசலைக் கடந்து போன வாயுவை
உபாயம் இட்டு அழைக்குமே சிவாய அஞ்செழுத்துமே 
சிவயநம என்ற மந்திரமே சிவன் இருக்கும் அட்சரமாகும்.  நமக்கு ஆபத்து வரும் காலங்களில் உபாயமாக வந்து காப்பதற்கு நம்பி உபாசிக்க உண்மையாக உள்ள மந்திரம் இதுவே. நம் பிராணனிலிருந்து கடந்த்க்ஹு போன பிராண வாயுவை மீண்டும் நம் பிரானநிலேயே சேர்த்து ஆயுளைக் கூட்ட பிரானவாமம் செய்தால் அதற்கு உற்ற துணையாக இருப்பது சிவாயநம எனும் அஞ்செழுத்து மந்திரமே. ஆதலின் அதை ஓதி தியானியுங்கள். அதுவே உங்களுக்கு உபாயமாக என்றும் வரும். 
********************************************************************************
சிவவாக்கியம்074 
 
உருவும் அல்ல வெளியும் அல்ல ஒன்றை மேவி நின்றதல்ல மருவும் அல்ல காதம் அல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே

உருவாக உள்ளது ஆனால் உருவும் அல்ல. வெளியாகி இருப்பது ஆனால் வெளியும் அல்ல. ஐம்புலன்களில் உருவாக உள்ளதுஆனால் உருவும் அல்ல. ஐம்புலன்களில் ஒன்றை சேர்ந்து இருப்பது ஆனால் அதைச் சார்ந்து நிற்கவில்லை. மறுவாக உள்ளது ஆனால் தூரம் அல்ல. பஞ்சபூதங்களில் எல்லாம் உள்ளது அனால் மற்றதல்ல. பாசம் அற்றிருப்பது ஆனால் பாசம் அற்றதல்ல. மிகவும் பெரியது ஆனால் பெரியதும் அல்ல. மிகவும் சிறியது ஆனால் சிறியதும் அல்ல. பேசும் தன்மை கொண்டது ஆனால் பேசாதது. ஆன்மா தானாகி தற்பரமாய் நின்ற அதை அறிவதற்கு அறிய மெய்ப்போருல்களின் உண்மைகளை யார் அறிந்துகொண்டு தியானம் செய்து காண வல்லவரோ!!
********************************************************************************
சிவவாக்கியம்075
 
ஆத்துமா அனாதியோ அனாத்துமா அனாதியோ?மீத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ?தர்க்கமிக்க நீல்களும் சதாசிவமும் அனாதியோ?வீக்கவந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே?

உனக்குள் இருக்கும் ஆன்மா அனாதியா?  அனைத்திலும் இருக்கும் ஆண்டவன் அனாதியா?  உனக்குள் ஐம்போரிகலாகவும்ஐந்து புலன்கலாகவும்இருப்பவை அனாதியா?  தத்துவ விளக்கங்கள்உண்டென்றும் இல்லையென்றும் தர்க்கம் செய்யும் வேதாகம நூல்கள் அனாதியாஅல்லது ஆஞ்ஞாவில் உள்ள சதாசிவம் அனாதியாஎன்பதை யோக ஞானம் விளக்க வரும் யோகிகளே எது அநாதி என்பதயும் எது நித்தியம் என்பதை அனைவரும் உணரும் வண்ணம் விரைந்து வந்து கூறவேண்டும். 
********************************************************************************
சிவவாக்கியம்-076
 
அறிவிலே பிறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்
நெறியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர்
உறியிலே தயிர் இருக்க ஊர் புகுந்து வெண்ணை தேடும்
அறிவிலாத மாந்தரோடு அனுகுமாறது எங்ஙனே

அறிவிலே பிறந்த ஏடுகளைப் படித்து மனனம் செய்து வேத ஆகமங்கள் ஓதுவார்கள். யோக ஞானாநெறியிலே நின்று தியானம் செய்து மயக்கத்தை ஒழித்து மெய்ப்பொருளை அரிய மாட்டார்கள். தனது வீட்டின் உறியிலே தயிராக வைத்துக் கொண்டு ஊரெல்லாம் அலைந்து வெண்ணை தேடுகின்ற மூடரைப் போல உனக்குள்ளேயே இருக்கும் இறைவனை அங்கும் இங்குமாய் தேடி அலையும் அறிவை அறியாதவுருக்கு எப்படி எடுத்துரைத்து அணுகுவது.
********************************************************************************
சிவவாக்கியம்077
 
இருவர் அரங்கமும் பொருந்தி என்புருகி நோக்கிலீர் உருவரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஒர்கிலீர்
கருவரங்கம் ஆகி நின்ற கற்பனை கடந்து பின்
திருவரங்கம் என்று நீர் தெளிந்திருக்க வல்லீரே

சக்தியாகிய உடலும் சிவனாகிய உயிரும் ஒரே நினைவோடு அன்பால் என்புருகி தியானம் செய்யுங்கள். நமக்குள் உருவாக அரங்கத்தில் ஒளியாக நின்று ஒன்றாய் இருக்கும் உண்மையை உணர்ந்து அதுவே இறைவன் குடியுருக்கும் கோயிலாக இருப்பதைக் கண்டு அறிந்து அத்திருவரங்கத்தில் உடலையும் உயிரையும் இணைத்து சிவத்தில் கரைய தவம புரியுங்கள்.
********************************************************************************
சிவவாக்கியம்078
 
கருக்குழியில் ஆசையைக் காதலுற்று நிற்கிறீர்
குறுக்கிடும் ஏழைகள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்துருத்தி மெய்யினால் சிவந்த அஞ்செழுத்தையும் உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே

பெண்ணின்ப ஆசையால் காதல் வயப்பட்டு அதே நினைவில் நிற்கின்றீர்கள். அந்த குறிப்பைத் தவிர அதனால் வரும் துன்பங்களை அறியாத ஏழைகளே! பெண்ணின்பத்தினை பெரிதாக போற்றி குலாவுகின்ற பாவிகளே! அதனால் உங்கள் உடம்பு உருக்குலைந்து உயிர் போய்விடுமே! ஆதலால் நல்ல குருநாதர் உன்னைத் திருத்திக் கற்றுக்கொடுக்கும் உண்மையான யோகத்தை செய்து நமது மெய்யில் பஞ்சாட்சரமாக இருக்கும் மெய்ப் பொருளை அறிந்து 'சிவயநமஎன்ற அஞ்செழுத்தை ஓதி உனக்குள்ளேயே உணர்ந்துதியானித்து அறிந்து கொள்ளுங்கள். 
********************************************************************************.
சிவவாக்கியம்079
 
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும் எண்ணிலாத கோடி தேவர் என்னது உன்னது என்னவும்
கண்ணிலே மணி இருக்கக் கண் மறைந்தவாறு போல்
என்னில் கோடி தேவரும் இதின் கனார் விழிப்பதே.

இருவினை பாவ புண்ணியத்தால்தான் மண்ணில் பிறக்கின்றோம். கடவுள் உண்டென்றும் இல்லையென்றும் வழக்குகள் பேசுகின்றோம். எண்ணில்லாத கோடி தேவர்களையும் என்னுடையது,உன்னுடையது என்றும் உரிமை கொண்டாடுகின்றோம். அதனால் இறைவனை அறிந்து கொண்டீர்களா?அவ்வண் உனக்குள்ளேயே அதுவாக இருப்பதை உணருங்கள். கண்களில் இருக்கும் கண்மணியால் எல்லாம் காணப்பட்டாலும் அதனை அக்கண்ணே மறைப்பதுபோல் தனக்குள் இருக்கும் ஆன்மாவை காணமுடியாது மையை மறைக்கின்றது. இதனை தியானத்தால் அகக்கண் திறந்து பார்த்தால் எல்லா தெய்வங்களும் இதன் கண் இருப்பதை அறிந்து கொள்ளுங்கள்.
********************************************************************************
சிவவாக்கியம்080
 
மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார்
நன்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார்
எண்கலந்து நின்ற மாயம்என்ன மாயம் ஈசனே.

மண்பானை கவிழ்ந்து உடைந்து போனால் அது தேவைப்படும் என எடுத்து அடுக்கி வைப்பார்கள். வெண்கலப் பானை வீழ்ந்து நசுங்கிப் போனால் அது வேணும் என்று பாதுகாப்பார்கள். ஆனால் நமது உடம்பை விட்டு உயிர் போய் கிடக்கும் போது அதனைப் பிணம் என்று இகழ்ந்து அது கிடந்தால் நாறும் எனக் கூறி குழிவெட்டி அதனில் போட்டு மூடிவிடுவார்கள். இப்படி ஒரு காசுக்கும் கூட உதவாத என்எண்சாண் உடம்பில் நீ நின்று ஆடிய மாயம்தான் என்ன மாயமையா ஈசனே!!!

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...