வெள்ளி, 13 ஜூன், 2025

 இதழில் கதை எழுதும்

படம் :உன்னால் முடியும் தம்பி

பாடல் :இதழில் கதை எழுதும்
குரல் :எஸ்.பி. பாலசுப்ரமணியம், சித்ரா
பாடல் வரிகள்:புலமைப்பித்தன்
இசை : இளையராஜா

(ஆண்)
இதழில் கதை எழுதும் நேரமிது (2)
இன்பங்கள் அழைக்குது ஆ....

பெண்
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆ....
மனதில் சுகம் மலரும் மாலையிது

(ஆண்)
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே (2)
இருகரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
இதழில் கதை எழுதும் நேரமிது

(இசை....)

(ஆண்)
காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக் கண்டு
ஏதோதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்

பெண்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்

(ஆண்)
இனிய பருவமுள்ள இளங்குயிலே (2)
ஏன் இன்னும் தாமதம் மன்மத காவியம் என்னுடன் எழுது

பெண்
நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது

(ஆண்)
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தனிந்திட ஒருமுறை தழுவடி

பெண்
காலம் வரும்வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே

(ஆண்)
காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ

பெண்
மாலை மணமாலை இடும் வேளைதனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்

(ஆண்)
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ....

பெண்
மனதில் சுகம் மலரும் மாலையிது

(இசை....)

(ஆண்)
தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே

பெண்
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம்தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா

(ஆண்)
அழகைச் சுமந்து வரும் அழகரசி (2)
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ

பெண்
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது

(ஆண்)
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன்; கணை வந்து மார்பினில் பாயுது

பெண்
காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது

(ஆண்)
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது

பெண்
மோகம் நெருப்பானதும் அதைத் தீர்க்கும்;
ஒரு ஜீவநதி அருகினில் இருக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆ....

(ஆண்)
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ....
இதழில் கதை எழுதும் நேரமிது

  அதோ மேக ஊர்வலம்


அதோ மேக ஊர்வலம்

அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் பூவனம்
இதோ காமன் உற்சவம் இங்கே
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச்
சேர்த்தேன் வா
அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம் அங்கே
உனது பாதம் அடடட இலவம் பஞ்சு
நடக்கும் போது
துடித்தது எனது நெஞ்சு
இரண்டு வாழைத்தண்டிலே ராஜ கோபுரம்
நானும் இன்று கேட்கிறேன்
உன்னை ஓர் வரம்
தேகம் தன்னை மூடவே
கூந்தல் போதும் போதுமே
ஆடை இங்கு வேண்டுமா நாணம்
என்ன வா வா
அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம் அங்கே
குழலைப் பார்த்து முகிலென
மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து
அடிக்கடி நிலவு தேயும்
தென்னம்பாண்டி முத்தைப்
போல் தேவி புன்னகை
வண்டு ஆடச் சொல்லுமே
செண்டு மல்லிகை
உன்னைச் செய்த பிரம்மனே
உன்னைப் பார்த்து
ஏங்குவான்
காதல் பிச்சை வாங்குவான்
இன்னும் என்ன சொல்ல
அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் பூவனம்
இதோ காமன் உற்சவம் இங்கே
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச்
சேர்த்தேன் வா

வியாழன், 12 ஜூன், 2025

ஈழத்து வரலாற்றில் துலங்கும் மர்மம்

=================================
மாங்குளம் கல்வெட்டு "கணிய் நந்த அஸிரிய்இ குவ்அன்கே தம்மம் இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன் வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்" என்கிறது.
கணி - தியானத்தில் உயர்நிலை எய்திய பிச்சை எடுத்து வாழும் முனிவர்க்கு உரிய பட்டம், title for attainment of higher state in meditation by an ascetic ; குவ்வன் - பாடம் சொல்பவன், தீர்ப்பு சொல்பவன்; ஈத்தான் -- கொடுத்தான்; பணவன் - மணிக்கல் சுரங்க பொறுப்பாளர், precious stone mine in-charge; கொட்டுபித்த - கொடுத்த, பள்ளி - கற்படுக்கை.
விளக்கம்: கணி நந்த ஆசிரியர் நடத்திய கல்விச் சாலையில் வேத பாடம் சொல்வானுக்கு தருமமாய் நெடுஞ் செழியனின் மணிக்கல் சுரங்கப் பொறுப்பாளன் கடலன் வழுதி என்பான் இக் கற்படுக்கையை உருவாக்கித் தந்தான் என்பது இதன் பொருள். இக்கல்வெட்டில் "அன்" ஆண்பால் ஒருமை ஈறு பணவன், கடலன் என தனியே பிரித்துக் காட்டப்பட்டுள்ளன.
மணிக்ககல் சுரங்கம் இலங்கை மலைநாட்டில் உள்ளது அந்த ஊருக்கு இரத்தினபுரி என்ற பெயர் வழங்கப்படுகிறது. இதனால் அங்கு கடலன் சான்றுகள் உள்ளது.
இந்த மங்குளம் கல்வெட்டில் உள்ள பணவன் என்ற சொல்லை வைத்து பலர் பல விதமான எழுதி உள்ளார்கள்.
ஆனால் யாரும் கடலன், நெடுஞ்செழியன் என்ற சொற்களை நோக்கவில்லை .
சங்க இலக்கியத்த்தில் ஆலம்பேரி சாத்தனார் பாடிய பாடல்கள் நெடுஞ்செழியன் மற்றும் கடலன் என்ற பாண்டிய அரசர் மற்றும் பாண்டிய நாட்டில் இருந்த விளங்கில் அரசன் குறித்தும் பாடி உள்ளார். ஆதலால் இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்று அறிய முடிகிறது.
நெடுஞ்செழியன் மற்றும் கடலன் என்ற இரு பெயரும் மாங்குளம் கல்வெட்டில் உள்ளதை நாம் பார்க்க முடிகிறது.
சேரர் உடன் முரண்பாடு கொண்டு இருந்த கடலனை (புறம்53) கூறுகிறது
மதுரைகாஞ்சியில் மாறன் என்ற அடையாளம் கொண்ட தளபதி கோசேர் படையை வழி நடத்திய குறிப்பு மதுரைக்காஞ்சியில் உள்ளது.
அதே நேரத்தில் தென் பரதவர் என்ற படை வீரர்கள் புகழ் மதுரைக்காஞ்சி கூறுகிறது அவர்களை பாண்டியன் நேரடியாக வழி நடத்தினான் என்றும் நெடுஞ்செழியனை warlord of southern prathava என்று நீல கண்ட சாஸ்திரி கூறுகிறார் .இங்கு விளங்கில் என்ற துறைமுக அரசன் கடலன் வழுதி கொண்டு ஒப்பீடு செய்ய முடியும்.
மாறான் என்ற அடையாளம் தளபதி என்று இருந்தது போல வழுதி என்ற பெயரும் தளபதி என்று இருக்க முடியும்.
மதுரைகாஞ்சி கூறும் மாபெரும் வெற்றிக்கு அடுத்து பாண்டியன் இளஞ்சியின் வேளாக ஒரு பரவரை நியமனம் செய்ததை அரிட்டா பட்டி கல்வெட்டு கூறுகிறது.
விளக்கில் கடலன் பாண்டியன் நெடுஞ்செழியனின் தளபதி , சேரரின் யானைப்படையை ஓட விட்டவன் என்று மாங்குளம் தமிழி மற்றும் சங்க இலக்கிய சான்றுகள் கொண்டு அறிய முடியும்.
இலங்கை மற்றும் தமிழகத்தில் விளங்கில் கடலனின் பிராமி கல்வெட்டுகள், நாணயங்கள், "கடலன்"/"ஸமுத" போன்ற பெயர்களின் ஒற்றுமை ஆகியவை சுட்டிக்காட்டப்படுகின்றன.
கடலனின் விளங்கில் பாண்டிய மற்றும் சேர நாட்டுக்கு இடையில் தாலமி குறிப்பிடும் கரையர் நாடு என்று கருதப்பட்டது ஆனல் ஒருவர் கடலன் விளங்கில் மாங்குளம் கல்வெட்டின் படி மாணிக்கபரல் நிறைந்த நாடு அது இலங்கையில் தான் இருக்க வேண்டும் கடலன் குறித்து பல தொல்லியல் சான்றுகள் இலங்கையில் கிடைப்பதை கொண்டு கூறினர்.
பண்டைய தமிழ் நாட்டில் இன மொழி கலாச்சார பண்பாட்டால் ஈழமும் ஒன்றாக இருந்த படியால் பரதவர்க்கு ஈழம் மற்றும் தமிழகம் இரண்டும் ஒன்றுதான்.
எனவே கடலன் வழுதி மேற்பார்வையில் அவன் நாட்டில் நடக்கும் வாணிக நடவடிக்கைகள். விளக்கில் கடலன் பாண்டியன் நெடுஞ்செழியனின் தளபதி , சேரரின் யானைப்படையை ஓட விட்டவன் என்று மாங்குளம் தமிழி கல்வெட்டு மற்றும் சங்க இலக்கிய சான்றுகள் கொண்டு அறிய முடியும்.
இலங்கை மற்றும் தமிழகத்தில் விளங்கில் கடலனின் பிராமி கல்வெட்டுகள், நாணயங்கள், "கடலன்"/"ஸமுத" போன்ற பெயர்களின் ஒற்றுமை ஆகியவை சுட்டிக்காட்டப்படுகின்றன.
கடலனின் விளங்கில் பாண்டிய மற்றும் சேர நாட்டுக்கு இடையில் தாலமி குறிப்பிடும் கரையர் நாடு என்று கருதப்பட்ட போது கடலன் விளங்கில் மாங்குளம் கல்வெட்டின் படி மாணிக்கபரல் நிறைந்த நாடு அது இலங்கையில் தான் இருக்க வேண்டும் கடலன் குறித்து பல தொல்லியல் சான்றுகள் இலங்கையில் கிடைப்பதை கொண்டு கூறினர்.
இந்நிலையில் விளங்கில் அரசன் கடலன் மாங்குளம் கடலன் வழுதியாக இருக்க முடியுமா என்று ஆராய்கையில் இலக்கிய சான்றுகள் மட்டும் அல்ல தொல்லியல் சான்றுகளே பரதவர்கள் வேள்(அரிட்டாப்பட்டி) அரச அலுவலர்( மாங்குளம்) , தீஸன், குவிரன், சமுதக(கடலன்) என்ற தொல்லியல் சான்றுகள் தமிழகத்திலும் , மீன், கப்பல் பரத திஸ, கபதி கடலன், நேரடியாக 21 தொல்லியல் சான்றுகள் இலங்கையிலும் பரதவர் குறித்து உள்ளன.தொல்லியல் நோக்கில் சங்க காலம் நூலில் முனைவர் கா ராஜன் மற்றும் தொல்லியல் நோக்கில் இலங்கை தமிழர் என்ற நூலில் முனைவர் புஸ்பரட்ணம் போன்றோர் இதனை தக்க சான்றுகள் உடன் விளக்கி எழுதி இருக்கிறார்கள். எனவே இந்த சங்ககால பாண்டிய அரசன் கடலன் வழுதி ஈழத்தைச் சேர்ந்தவன் என்பது உறுதிப்படுத்துகின்றன.இவனை பரதவன் எனும் பொருள்பட 'ஸமுத'என அழைக்கப்படும் இலங்கை அரசன் மகாதிஸ (தேவனாம்பியச) என்று பிராகிருத மயப்படுத்தப்பட்ட அரசன் கடலன் வழுதியைக் குறிப்பதாகும். இவனது பெயரோடு மீன் அடையாளமாக கொண்ட பரதவர் பாண்டியர் என்பதை வெளிப்படுத்த போதுமானது.
அவரை, கபதிகடலன் என நாணயம் குறிப்பிடுவதால் 'கடலன்' பௌத்த இல்லறத்தான் என்பது பெறப்படுகிறது. கூடவே இலங்கையில் கி.பி 6 இன் பின்பாக ஏற்பட்ட பூர்வீக குடியல்லாத மெளரிய, கலிங்க, ஆந்திர திரிவடுக இலக்கியங்கள் இவ் உண்மையை மறைத்து வந்துள்ளன.எனவே இப் பாண்டியன் கடலன் வழுதி போன்று இன்னும் எத்தனை தமிழ் அரசர்களின் வரலாறு இவனை போன்று பிராகிருத மயப்படுத்தப்பட்டு உருத்தெரியாமல் மறைக்கப்படுள்ளதோ யாரறிவார்?

எல்லா உணர்ச்சிகளு

 ஈழம் தந்த தொல்காப்பியம்

பழந் தமிழகத்தில் முதலில் தோன்றிய பாண்டிய மரபிலிருந்தே சேரரும், சோழரும் தோன்றினர் என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.
"தலையவைக் காலத்துத் தலைவ ரிம்முறை
மாறன் வழுதி மாறன் திரையன்
மாறன் பொறையன் ஓர்வகுப்பில் வந்தனர்
தமிழ்மூ வரசிவர் தாமா வாரே" (ந.வே.வ.பாயிரம்)
மாறன் திரையன் மரபில் வந்தோர் சோழராயினர்.
மாறன் , வழுதி மரபினர் தொடர்ந்து பாண்டியராகவே நீடித்தனர்.
அதே போன்று பதிற்றுப்பத்து எட்டு சேர மன்னர்களின் வரலாற்றை அவர்கள் ஆட்சி புரிந்த ஆண்டுக் காலக் குறிப்போடு தெளிவாகக் கூறுகிறது. கா.சு. பிள்ளை அவர்கள் இந்த ஆட்சிக் காலத்தைக கி.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் முறைப்படி கணித்திருக்கிறார்.
இந்நிலையில் 1920 ஆம் ஆண்டு மதுரையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட நற்குடி வேளாளர் வரலாறு என்னும் 1035 செய்யுள் கொண்ட பாண்டியர் குடிமரபு கூறும் நூல் பாண்டியர்களின் 201 தலைமுறைகளைக் குறிப்பிடுகிறது.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறைக்கு உரியவனுக்குப் பட்டம் கட்டி வந்த வழக்கத்தை இவர்கள் கொண்டிருந்தனர்.
பாண்டியரின் ஐவகைப் பிரிவில் கொடி என்றும் பிதிர் என்றும் பிரிக்கப்பட்ட வண்ணம் இருங்கோவேள் பிரிவினர் வழி வந்தவர்கள் தொடர்ந்து பட்டம் கட்டிக் கொள்வதைக் கைவிடவில்லை. . இதன் வண்ணம் கி.பி. 1944 இல் இயற்கை எய்திய போற்றியடியா
இருங்கோவேள் என்பவர் 201 ஆவது பாண்டிய மன்னர் மரபின் பட்டம் கொண்டிருந்தார் என அந்நூல் கூறுகிறது.
இந்நூலில் பெயர் தெரிந்த பாண்டியர்களின் ஆட்சிக் காலம் கலியாண்டுக் கணக்கில் குறிக்கப்பட்டுள்ளது.
காசுமீர வரலாற்றை இராச தரங்கிணி என்ற நூல் குறிப்பிடுவது போல் நெடிய பாண்டியர் மரபை நற்குடி வேளாளர் வரலாறு குறிப்பிடுகிறது, நெடிய மூவேந்தர் வரலாற்றை மீட்டமைப்பதற்கு ஓரளவு துணை செய்கிறது. இந்நூலில் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனை 87 ஆவது பாண்டியனாகவும், வெற்றிவேள் செழியனை 88 ஆவது பாண்டியனாகவும் குறித்திருப்பது போன்று ஏனைய சேர, சோழ வரலாற்றுக் காலத்தோடு நன்கு பொருந்தி
வருகிறது. இந்நூலில் கண்ட குறிப்புகளின் வண்ணம் விடுபட்ட பாண்டியன் பெயர்களையும் சேர்த்தால் கி.மு. 500 முதல் கி.பி. 500 வரை 1000 ஆண்டுக் கால பாண்டியர் தலைமுறைகளைக் கண்டறிய முடிகிறது.
1000 ஆண்டுகளில் 40 தலைமுறை குறிப்பிடப்படுகிறது. ஒரு தலைமுறைக்குச் சராசரி 25 ஆண்டுகள் என்பது இயல்பான நிகழ்ச்சி ஆகும். இவர்களுள் கடைக் கழக நூல்களில் 20 பாண்டியர் பெயர்கள் மட்டும் உள்ளன.
ஏனையவற்றுள் பிற சான்றுகள் வாயிலாகக் கிடைத்த பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கடைக்கழக இலக்கியங்களின் வாயிலாக அறியப்படும் முதுகுடுமிப் பெரு வழுதி, கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதி ஆகிய இருவரும் முறையே 66 ஆவது, 67 ஆவது பாண்டிய மரபிரராக அறிய முடிகிறது.
இமயவரம்பனும், பல்யானச் செல்கெழு குட்டுவனும் வாழ்ந்த கி.மு. 350 - 300 கால அளவில் 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆட்டி புரிந்ததாக நற்குடி வேளாளர் வரலாறு கூறுகிறது.
பாண்டியரின் கிளை மரபாகிய இருங்கோவேள் மரபு கி.மு. 2283 கூன் பாண்டியனில் தொடங்குகிறது.
கோசாம்பியை தலைநகராகக் கொண்டு வடநாட்டில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னன் உதயணன் கி.மு.701 இல் (கலியாண்டு 2400) ஆரியர்களைப் போரிட்டு வென்றான். அவன் ஆட்சி செய்திருந்தால் கி.பி. 199 - இல் குப்தர் தலையெடுக்காமல் தடுத்திருக்கலாம். பணிந்து பேசிய ஆரியர்களை நம்பி அடங்கிப் போன பண்பாட்டு அடிமைத்தனமே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என நற்குடி வேளாளர் வரலாறு ஆசிரியர் ஆறுமுக நயினார்
பிள்ளை பின்வரும் செய்யுளில் குறிப்பிட்டுள்ளார்.
பண்டை நாலறு நூறாண்டினாகரிறை பாடலிக்க ணளவில் படை
விண்டிருந்தவடவர்படை தடுத்ததமிழ்வேந்தர் முப்பத்து முந்நூற்றுமேற்
கொண்டுகுத்தரை யடக்கிடாததெனை கூடுநின்ற வடவோர் வழித்
தொண்டராயதிறன் பின்னர் சாங்கரடி தொத்தினார் (ந.வே.வ.414)
மேற் சொன்ன ஆதாரங்களை ஆய்வு செய்து முனைவர் இரா. மதிவாணனது கடைக்கழக நூல்களின் காலமும் கருத்தும் என்ற நூலும் தெரிவிக்கிறது.
குமரியின் மைந்தர்களான பழம்பாண்டிய மன்னர்கள்
கி.மு. 2082 - முடத்திருமாறன் - 6ஆவது பாண்டியன்
கி.மு.1932 - மாறன் வழுதி - 10 ஆவது பாண்டியன்
கி.மு. 1002 - 960 திருவழுதி - 45 ஆவது பாண்டியன்
கி.மு. 910 - 854 வீர பாண்டியன் - 49 ஆவது பாண்டியன்
கி.மு. 884 -832 பாண்டியன் (நிலந் தரு - 50 ஆவது பாண்டியன் திருவின்பாண்டியன்) ஆகும்.
இனி தொல்காப்பிய விடயம் குறிப்பன..
"பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடும் கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி” (சிலம்பதிகாரம்)
என இடைச்சங்க காலகட்டத்தில் கடற்கோள் நடந்ததைக் கூறி,அக் கடற்கோளால் இடைச்சங்க கபாடபுரம் அழிந்ததால் அந் நாட்டு மக்களைக் காப்பாற்ற ( நிலந்தரு திருவிற் பாண்டியன் கி.மு. 884 -832 ( 50 ஆவது பாண்டியன்) பாண்டியன் வடக்கே கங்கையையும் இமயத்தையும் கைப்பற்றினான் என அவன் வீரத்தை புகழ்கிறார் இளங்கோவடிகள்.
அவன் பஃறுளி ஆற்றுக்கும் தெற்கே இருந்தே ஆண்டான். அந்தக் காலத்தில் அப்பாண்டியனின் நாட்டின் தெற்குப் பகுதியின் வடக்கு எல்லையாக பஃறுளி ஆறு இருந்ததை சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் ‘அக்காலத்து அவர் நாட்டு தென்பாலி முகத்துக்கு வட எல்லையாகிய பஃறுளி எனும் ஆற்றுக்கும்’ என தனது உரையில் எழுதியுள்ளார். எனவே இளங்கோ அடிகள் கூறிய தென்னவனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் தற்போதைய தமிழகத்தைச் சேர்ந்தவன் இல்லை என்பது உறுதியாகின்றது. அத்துடன் வட எல்லையாகிய பஃறுளி எனச்சுட்டுவதால் அவ்வாற்றுக்கும் தெற்கேயும் நிலம் இருந்தது என்பதும் உறுதியாகின்றது.
எனவே நிலந்தரு திருவின் பாண்டியன் இடைச்சங்க காலத்திருந்தவன். அவன் காலத்திலேதான் தொல்காப்பியம் அரங்கேறிற்று என்று தொல்காப்பியப் பாயிரம் நன்கு காட்டுகின்றது. தொல்காப்பியர் ஈழத்தினை சேர்ந்தவர் என உறுதியாக கூறலாம். இதன் காலத்தை தொல்காப்பியம் கி.மு 865 இல் அரங்கேற்றம் கண்டதாக பேராசிரியரான இரா.மதிவாணன் கண்டறிந்து கொண்டார்.
'நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி'த்
(தொல். பாயிரம், 9. 12)
தம் தொல்காப்பியத்தை நிறைவேற்றினர். இதில் வரும் நான்மறை என்பதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் நன்கு விளக்கம் தருகின்றார். எனவே, தொல்காப்பியம் பாண்டியன் அவைக்களத்து நிறைவேறிற்று எனக் கொள்ளல் பொருந்தும். தொல்காப்பியம் கபாடபுரத்து இருந்த இடைச்சங்க நூலென இறையனார் களவியல் உரை குறிக்கின்றது.
அடுத்து பல்யாகசாலை முதுகுடுமியைப் பற்றிக் காண்போம். ‘முதுகுடுமி’ என்ற இவன் பெயரும் இவனைப் பாடியவரின் நெட்டிமையார்’ என்ற பெயருமே ஓரளவு தொன்மையைக் குறிக்க வருவன எனக்கொள்ளலாம். இவனைப் பாடினவாகப் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் உள்ளன. இவனைப் பாடியவர் காரி கிழார் நெட்டிமையார் நெடும்பல்லியத்தனார் ஆவர் மூவர் பெயர்களுமே பழமையைக் குறிப்பன. இனி இவர் தம் பாடலுள் காரிகிழார் இவன் ஆட்சி எல்லையை இமயம் முதல் குமரி எல்லைக்கு அப்பாலும் குறிக்கின்றார்,
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்’
(புறம் .6:1,2)
இவன் உருவும் புகழும் சிறந்தனவாய் இருந்தன எனக் குறிக்கின்றார். எனவே பஃறுளியாற்றினை எல்லைக்கோடாக கொண்ட நிலப்பகுதியை குமரி என எனவும் அக்குமரியின் தெற்கில் இருந்து பனிவரை வடக்காகிய இமயம் வரை பாண்டியர்கள் ஆண்டார்கள் என்பதும் தெளிவாக புலனாகின்றது. பழம் பாண்டிய மன்னனின் முந்து தலைமுறை முடந்திரு மாறன் கி.மு 2082 இல் ஆறாவது பாண்டியனாக குமரி நாடாகிய ஈழத்தில் அரசாண்டு இருக்கிறான். அவனது வழிவந்த நிலந்தரு திருவிற் பாண்டியன் ஈறாக 50 தலைமுறை வரை அரசாண்ட நிலம் குமரி நாடாகிய ஈழதேயமாகும். அப்பழம் பெரும் ஈழ நாட்டிலேயே கபாடபுரம் என்ற அழைக்கப்பட்ட துவரை இருந்தது. அது செம்பு புனைந்தியற்றிய சேநெடும் புரிசை மிக்கதாக விளங்கியது. அதாவது செம்பு போன்ற சிவந்த செங்கற்களால் அமைக்கப்பட்ட நீண்ட நெடிய மதில்கள் கொண்ட கோட்டையாகவும் அதன் கண் பாரிய வாயிற் கதவுகளும் அலங்கரிக்கப்பட்ட புரிசையாக விளங்கியது. அத்தகைய ஈழத்தில் செந்தமிழ்ப் புலமைமிக்க புரவலர் சங்ககால பாடல்களை பாடியுள்ளனர். அவர்களுள் முயற்சியில் முடிநாகராயர்,ஈழத்துப்பூதன் தேவனார்,கணியன் பூங்குன்றனார்,நரிவெருத்தலையார் என அம்மரபு மிகத்தொன்மை மிக்கவை, அக்காலத்தில் தமிழகத்தில் ஈழத்தீவிலும் தமிழர்கள் மட்டுமே வசித்தனர். ஆனால் தமிழகத்தில் ஆசீவக, பெளத்த மத தாக்கங்கள் நிகழ்ந்த போது தமிழக மன்னர்கள் தவிர்ந்த அதன் துறவிகள் மாத்திரம் தமது பெயர்களை தமது மதம் சார்ந்த பிராகிருத மொழி பெயர்களாக மாற்றியமைத்துக் கொண்டார்கள். ஈழத்தில் அத்துறவிகள் மாத்திரமல்ல கூடவே அதனை ஆண்ட மன்னர்களும் அம்மதம் சார்ந்த பெயர்களை சூடிக் கொண்ட பண்பாட்டு மாற்றம் நிகழ்ந்ததால். அம்மதப்பிரிவுகள் இரண்டுக்கும் இடையிலான யுத்தங்களும் நடந்தேறின. அவற்றுள் ஒன்றாக எல்லாளன் துட்பாகமினி போரை காணமுடிகிறது. கூடவே ஒரே மதமாக விளங்கிய பெளத்தத்திற்கு உள்ளேயும் பிளவுகள் தோன்றி யுத்தங்கள் விளைந்தன. இது வட்டகாமினி தொடக்கம் மகாசேனன் காலம் வரை இடம்பெற்றுள்ளன. இப்பிராகிருத பெயர்களில் இருந்த அம் மன்னர்கள் மொழியால் தமிழர்கள் ஆவர். இப்பண்பாட்டு மாற்றம் பின்னான காலத்தில் மெளரியனான தாதுசேனன் தொடக்கம் கலிங்க விஜயபாகு வரையான அந்நிய ஆதிக்கத்துக்கு வழிவகுத்தது. இவர்கள் கி.பி 12 ஆம் நூற்றாண்டு வரை தென்னிலங்கையில் அந்நாளில் சிறியதொரு ஆளும் வர்க்கமாக மாத்திரமே விளங்கினர். அப்போதும் அதன் பின்னான காலனித்துவ ஆட்சிக்காலம் வரையும் தமிழ் மொழி மாத்திரமே இலங்கையிலிருந்த கோட்டை, கண்டி, யாழ்ப்பாண இராசதானிக்குரிய ஆட்சி மொழியாகவும் விளங்கியது .
கோவில் மற்றும் நினைவிடம் படமாக இருக்கக்கூடும்
எல்லா உணர்ச்சிகளும

திங்கள், 2 ஜூன், 2025

 வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா

Movie Name:Kannan varuvaan

Song Name:Vennilave vennilave
Singers:Hariharan
Music Director:Sirpy
Cast:Karthik,Divya Unni,Mantra
Year of release:2000


வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா
தொலை தூரம் நின்றும் நீ என் வெட்கம் கொள்கிறாய்
உன் அழகு விழிகளால் ஏன் என்னை கொல்கிறாய்

வெண்ணிலவே ....

அழகே உன் முகத்தில் ஏன் முத்தான வேர்வை
அந்த முகிலை எடுத்து முகத்தை துடைத்து விடவா
அந்த சுகமான நாட்கள் இனி தினம்தோறும் வேண்டும்
உன் மடியில் இருந்து இரவை ரசிக்க வரவா
அடி உன்னை காணத்தான் நான் கண்கள் வாங்கினேன்
உன்னோட சேரத்தான் என் உயிரை தாங்கினேன்

வெண்ணிலவே ....

கண்ணோடு கண்ணும் ஒரு நெஞ்சோடு நெஞ்சும்
வந்து பழகும் பொழுதில் இடையில் ஏது வார்த்தை
தொலை தூரம் நீயும் தொட முடியாமல் நானும்
இன்று தவிக்கும் பொழுதில்
இனிக்கவில்லை இந்த வாழ்க்கை
என் நெஞ்சின் ஓசைகள் உன் காதில் கேட்குதா
நான் தூவும் பூவிதை உன் நெஞ்சில் பூக்குதா
 
வெண்ணிலவே ....

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...