தீண்டாய்
பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | ஏ.ஆர்.ரகுமான் | என் சுவாசக் காற்றே |
Theendai Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கன்றும் உண்ணாது கலத்தினும் படாது…
நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு…
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது…
பசலை உணீஇயர் வேண்டும்…
திவ்வலை அல்குல் என் மாமைக் கவினே…
பெண் : தீண்டாய் மெய் தீண்டாய்…
தாண்டாய் படி தாண்டாய்…
தீண்டாய் மெய் தீண்டாய்…
தாண்டாய் படி தாண்டாய்…
தீண்டாய் மெய் தீண்டாய்…
தாண்டாய் படி தாண்டாய்…
—BGM—
பெண் : தீண்டாய் மெய் தீண்டாய்…
தாண்டாய் படி தாண்டாய்…
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே…
என் நரம்போடு வீணை மீட்டியதே…
மனம் அவன்தானா இவன் என்று திடுக்கிட்டதே…
ஆண் : தீண்டாய் மெய் தீண்டாய்…
தாண்டாய் படி தாண்டாய்…
ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ…
உன் நரம்போடு வீணை மீட்டியதோ…
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ…
குழு : வானில் பிறந்த அமுதன்றோ…
பாவை விளைந்த மழை அன்றோ…
முல்லை வகுலம் குருக்கத்தி…
தொல்லையின் இடைந்த உடல் அன்றோ…
தீண்டாய் மெய் தீண்டாய்…
பெண் : விழியோடும் தீண்டல் உண்டு…
விரலோடும் தீண்டல் உண்டு…
இரண்டோடும் பேதம் உள்ளது…
ஆண் : விழித்தீண்டல் உயிர் கிள்ளும்…
விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்…
அதுதானே நீ சொல்வது…
பெண் : நதியோரப் பூவின் மேலே…
ஜதி பாடும் சாரல் போலே…
என்னில் இன்ப துன்பம் செய்குவதோ…
ஆண் : ஒரு கன்னம் தந்தேன் முன்னே…
மறு கன்னம் தந்தாய் பெண்ணே…
ஏசுநாதர் காற்று வந்து வீசியதோ…
பெண் : உறவின் உயிரே உயிரே
என்னைப் பெண்ணாய்ச் செய்க…
ஆண் : அழகே அழகே உன் ஆசை வெல்க…
—BGM—
பெண் : தீண்டாய் மெய் தீண்டாய்…
தாண்டாய் படி தாண்டாய்…
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே…
என் நரம்போடு வீணை மீட்டியதே…
மனம் அவன்தானா இவன் என்று திடுக்கிட்டதே…
—BGM—
ஆண் : கடலோடு முத்தம் தந்தும்…
கலையாத வானம் போல…
உடலோடு ஒட்டிக்கொள்ளவோ…
பெண் : உடலோடு அங்கும் இங்கும்…
உறைகின்ற ஜீவன் போல…
உன்னோடு கட்டிக்கொள்ளவோ…
ஆண் : உனைத் தேடி மண்ணில் வந்தேன்…
எனைத்தேடி நீயும் வந்தாய்…
உன்னை நானும் என்னை நீயும் கண்டு கொண்டோம்…
பெண் : பல பேர்கள் காதல் செய்து…
பழங்காதல் தீரும்போது…
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்…
ஆண் : பனியோ பனியின் துளியோ…
உன் இதழ்மேல் என்ன…
பெண் : பனியோ தேனோ…
நீ சுவைத்தால் என்ன…
—BGM—
ஆண் : தீண்டாய்…
பெண் : தீண்டாய்…
ஆண் : மெய் தீண்டாய்…
பெண் : மெய் தீண்டாய்…
ஆண் : தாண்டாய்…
பெண் : தாண்டாய்…
ஆண் : படி தாண்டாய்…
பெண் : படி தாண்டாய்…
ஆண் : ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ…
பெண் : ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே…
ஆண் : உன் நரம்போடு வீணை மீட்டியதோ…
பெண் : என் நரம்போடு வீணை மீட்டியதே…
ஆண் : உன் உயிர்க்குள்ளே…
பெண் : மனம் அவன்தானா…
ஆண் : காதல் அம்பைத் தொடுத்திட்டதோ…
பெண் : இவன் என்று திடுக்கிட்டதே…
பெண் : தீண்டாய் மெய் தீண்டாய்…
தாண்டாய் படி தாண்டாய்…
தீண்டாய் மெய் தீண்டாய்…
தாண்டாய் படி தாண்டாய்…
தீண்டாய் மெய் தீண்டாய்…
தாண்டாய் படி தாண்டாய்…
பெண் : படி தாண்டாய் படி தாண்டாய்…
படி தாண்டாய் படி தாண்டாய்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக