திறக்காத காட்டுக்குள்ளே
பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | பி. உன்னிகிருஷ்ணன் & கே.எஸ். சித்ரா | ஏ.ஆர்.ரகுமான் | என் சுவாசக் காற்றே |
Thirakkadha Kaatukulle Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ம்ம்ம்… திறக்காத காட்டுக்குள்ளே…
பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்…
பறந்தோடும் மானைப் போல…
தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்…
பெண் : பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி…
வட்டம் போடும் பட்டாம்பூச்சி…
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு…
பெண் : ஓடியோடி ஆலம் விழுதில்…
ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே…
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு…
ஆண் : அந்த வானம் பக்கம்…
இந்த பூமி சொர்க்கம்…
காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்…
ஆண் : நெஞ்சில் ஏக்கம் வந்தால்…
கண்ணில் தூக்கம் வந்தால்…
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்…
ஆண் : திறக்காத காட்டுக்குள்ளே…
பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்…
பறந்தோடும் மானைப் போல…
தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்…
—BGM—
பெண் : காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ…
மண்ணோடு விழிகிற அருவி என்ன சொல்லுதோ…
அது தன்னைச் சொல்லுதோ…
இல்லை உன்னைச் சொல்லுதோ…
பெண் : அட புல்வெளியில் ஒரு வானவில் விழுந்தது…
அதோ அதோ அதோ அங்கே…
ஐயையோ வானவில் இல்லை வண்ணச் சிறகுகளோ…
அவை வண்ணச் சிறகுகளோ…
வானவில் பறக்கின்றதோ…
ஆண் : அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது…
புதிய கண்கள் நெஞ்சில் திறக்கின்றது…
ஆண் : மேகம்போல் காட்டை நேசி…
மீண்டும் நாம் ஆதிவாசி…
உன் கண்கள் மூடும் காதல்…
காதல் காதல் காதல் காதல் யோசி…
ஆண் : திறக்காத காட்டுக்குள்ளே…
பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்…
பறந்தோடும் மானைப் போல…
தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்…
பெண் : பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி…
வட்டம் போடும் பட்டாம்பூச்சி…
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு…
பெண் : ஓடியோடி ஆலம் விழுதில்…
ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே…
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு…
ஆண் : அந்த வானம் பக்கம்…
இந்த பூமி சொர்க்கம்…
காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்…
ஆண் : நெஞ்சில் ஏக்கம் வந்தால்…
கண்ணில் தூக்கம் வந்தால்…
ஆண் & பெண் : பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்…
—BGM—
பெண் : கை தொட்டுத் தட்டித் தட்டி பூவை எழுப்பு…
காற்றோடு ரகசிய மொழிகள் சொல்லியனுப்பு…
அட என்ன நினைப்பு…
அதைச் சொல்லியனுப்பு…
பெண் : என் காலடியில் சில வீடுகள் நகருது…
இதோ இதோ இதோ இதோ இங்கே…
ஆஹாஹா… வீடுகள் இல்லை நத்தைக் கூடுகளோ…
அவை நத்தைக் கூடுகளோ…
வீடுகள் இடம் மாறுமோ…
ஆண் : புதிய வாழ்க்கை நம்மை அழைக்கின்றது…
மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது…
ஆண் : நாட்டுக்குப் பூட்டு போடு…
காட்டுக்குள் ஓடியாடு…
பெண்ணே என் மார்பின் மீது கோலம் போடு…
ஆண் & பெண் : திறக்காத காட்டுக்குள்ளே…
பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்…
பறந்தோடும் மானைப் போல…
தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்…
பெண் : பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி…
வட்டம் போடும் பட்டாம்பூச்சி…
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு…
பெண் : ஓடியோடி ஆலம் விழுதில்…
ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே…
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு…
ஆண் : திறக்காத காட்டுக்குள்ளே…
பிறக்காத பிள்ளைகள் போலே…
பறந்தோடும் மானைப் போல…
தொலைந்தோடிப் போனது எங்கள்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக