எங்கெங்கே எங்கெங்கே
| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | ஆஷா போஸ்லே & ஹரிஹரன் | தேவா | நேருக்கு நேர் |
Engengaey Song Lyrics in Tamil
—BGM—
பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே…
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே…
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ…
இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே…
பெண் : நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று…
தொடாதே நீ தொடாதே…
ஆண் : நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்…
செல்லாதே தள்ளிச் செல்லாதே…
ஆண் : ஓ என்னம்மா என்னம்மா…
உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா…
—BGM—
ஆண் : என் தூக்கத்தில் என் உதடுகள்…
உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்…
பெண் : என் கால்களில் பொன் கொலுசுகள்…
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்…
ஆண் : பூப்போல இருந்த மனம் இன்று…
மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே…
சகியே இதயம் துடிக்கும் உடலின் வெளியே…
—BGM—
பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே…
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே…
—BGM—
பெண் : என் வீதியில் உன் காலடி…
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்…
ஆண் : உன் ஆடையின் பொன் நுாலிலே…
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்…
பெண் : நான் உன்னை துரத்தியடிப்பதும்…
நீ எந்தன் தூக்கம் பறிப்பதுவும் சரியா…
முறையா காதல் பிறந்தால் இதுதான் கதியா…
—BGM—
பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே…
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே…
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ…
இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே…
பெண் : நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று…
தொடாதே நீ தொடாதே…
ஆண் : நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்…
செல்லாதே தள்ளிச் செல்லாதே…
ஆண் : ஓ என்னம்மா என்னம்மா…
உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா…
—BGM—
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக