உன் உதட்டோர சிவப்பே
| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | ஹரிஹரன் & அனுராதா ஸ்ரீராம் | தேவா | பாஞ்சாலங்குறிச்சி |
Un Uthattora Sivappe Song Lyrics in Tamil
ஆண் : தன நானா நானே நா நா…
தன நானா நானே நனனானே நா நா…
—BGM—
ஆண் : உன் உதட்டோர சிவப்பே…
அந்த மருதாணி கடனா கேட்கும்…
கடனா கேட்கும்…
ஆண் : நீ சிரிச்சாலே சில நேரம்…
அந்த நிலவு வந்து உளவு பார்க்கும்…
உளவு பார்க்கும்…
—BGM—
ஆண் : என் செவ்வாழை தண்டே…
என் செவ்வாழை தண்டே சிறு காட்டு வண்டே…
உன்ன நெனச்சு தான் எச பாட்டு…
கொஞ்சம் நெருங்கி வா இத கேட்டு…
—BGM—
பெண் : ஏன் மம்முத…
அம்புக்கு இன்னும் தாமசம்… ஆஆ…
ஆண் : அடியே அம்மணி…
வில்லு இல்ல இப்போ கை வசம்… ஆ…
பெண் : ஏன் மல்லு வேட்டி மாமா…
மனசிருந்தா மார்க்கம் இருக்குது…
ஆண் : என்னை பொசுக்குன்னு கவுக்க…
பொம்பளைக்கு நோக்கம் இருக்குது…
—BGM—
பெண் : முருக மலை காட்டுக்குள்ள…
விறகு எடுக்கும் வேலையில…
தூரத்துல நின்னவரே…
தூக்கி விட்டால் ஆகாதா…
—BGM—
ஆண் : பட்ட விறக தூக்கிவிட்டா…
கட்ட விரலு பட்டுபுட்டா…
விறகில்லாம தீ புடிக்கும்…
வெட்கம் கெட்டு போகாதா…
பெண் : நீ தொடுவதா தொட்டுக்கோ…
சொந்தத்துல வரைமுறை இருக்கா…
ஆண் : நீ பொம்பளதானே…
உனக்கு அது நியாபகம் இருக்கா…
பெண் : உன் நெனப்புதான்…
நெஞ்சுக்குள்ள பச்சை குத்துது… ஆஆ…
ஆண் : அட உன் கிறுக்குல…
எனக்கு இந்த பூமி சுத்துது…
—BGM—
ஆண் : சிங்கம் புலி கரடி கண்டா…
சேர்த்தடிக்க கை துடிக்கும்…
பொட்டு கன்னி உன்ன கண்டா…
புலி கூட தொட நடுங்கும்…
—BGM—
பெண் : உம்ம நெனச்சு பூசையில…
வேப்பெண்ணையும் நெய் மணக்கும்…
நீ குளிச்ச ஓடையில…
நான் குளிச்சா பூ மணக்கும்…
ஆண் : ஏய் வெட்கம் கெட்ட பெண்ணே…
என்னை ஏன் தூக்கி சுமக்குற…
பெண் : என் மனசுக்குள் புகுந்து…
ஏன் மச்சான் இறங்க மறுக்குற…
ஆண் : அடி என் நெஞ்சிலே…
ஏண்டியம்மா வத்தி வைக்குற…
பெண் : உன் ஆசைய…
எதுக்கு இன்னும் பொத்தி வைக்குற… ஆஆ…
—BGM—
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக