வெள்ளி, 30 மே, 2025

 எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
திரைப்படம்: புதிய பறவை


எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த
இறைவன் கொடியவனே இறைவன் கொடியவனே

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே ஓ.. உறங்குவேன் தாயே

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

 மயக்கம் எனது தாயகம்


திரைப்படம்: குங்குமம் (1963)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இசை : கே.வி.மகாதேவன்
வரிகள் : கண்ணதாசன்



மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம் (மயக்கம்)


பகலில் தோன்றும் நிலவு
கண் பார்வைக்கு மறைந்த அழகு
திரை மூடிய சிலை நான்
துன்பச் சிறையில் மலைந்த மலர் நான் (மயக்கம்)


நானே எனக்குப் பகையானேன் – என்
நாடகத்தில் தான் திரை ஆனேன்
தேனே உனக்குப் புரியாது
அந்த தெய்வம் வராமல் விளங்காது
விதியும் மதியும் வேறம்மா – அதன்
விளக்கம் நான் தான் பாரம்மா
மதியில் வந்தவள் நீயம்மா – என்
வழி மறைத்தாள் விதியம்மா (மயக்கம்)

 போனால் போகட்டும் போடா ......


திரைப்படம்:
 பாலும் பழமும் (1961)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

ஒஹோஹோ… ஒஹோஹோ…

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா

இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

ஒஹோஹோ… ஒஹோஹோ…

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
நாலும் தெரிந்த தலைவனடா – தினம்
நாடகமாடும் கலைஞடா
போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா

 

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்....


படம்: தெய்வத்தாய்
பாடல்: ஒரு பெண்ணைப்பார்த்து..
இசை: எம்.எஸ்.வி
பாடியவர்: டி.எம் செளந்தராஜன்
வரிகள்: கண்ணதாசன்


ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை (2)
அவளில்லாமல் நானில்லை
நானில்லாமல் அவளில்லை(2)


ல ல லல்ல லா ல ல லல்ல ல ல ல லல்ல ல ல ல ல


கொடி மின்னல் போல் ஒரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயிலோசை போல் ஒரு வார்த்தை
குழலோ யாழோ என்றிருந்தேன்
நெஞ்சொடு நெஞ்சை சேர்த்தாள்
தீயொடு பஞ்சை சேர்த்தாள்(2)
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ

………..ஒரு பெண்ணைப் ………….


கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையோ இடையில் கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
இதழில் மதுவோ குறையாது
என்னோடு தன்னை சேர்த்தாள்…
தன்னோடு என்னை சேர்த்தாள் (2)
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
 

 

யாருக்காக இது யாருக்காக

 


பாடகர்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
இசை: எம் எஸ் விஸ்வநாதன்
திரைப்படம்: வசந்த மாளிகை


மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்கமாக நான் நினைத்து
இன்று நரகமாக மாறிவிட்டது
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக


கண்கள் தீண்டும் காதல் என்பது
அது கண்ணில் நீரை வரவழைப்பது
பெண்கள் காட்டும் அன்பு என்பது
நம்மை பித்தனாக்கி அலையவைப்பது
எழுதுங்கள் என் கல்லறையில்
அவள் இரக்கம் இல்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில்
இவன் பைத்தியக்காரன் என்று
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக
 

 

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க



திரைப்படம்: எங்க ஊர் ராஜா
இயற்றியவர்: கவிஞர் கண்னதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்ல

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும்

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
 

 

நிலவே என்னிடம் நெருங்காதே....


படம்:- இராமு
பாடியவர்:- pb.ஸ்ரீனிவாஸ்

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..
(நிலவே)
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
(நிலவே)

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

(நிலவே)
அமைதியில்லாத நேரத்திலே
அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான்.... இல்லை...
 

 அவள் ஒரு நவரச நாடகம்......


படம்: 
உலகம் சுற்றும் வாலிபன்
இசை: Ms விஸ்வநாதன்
பாடியவர்: sp பாலசுப்ரமணியம்

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்
(அவளொரு)

மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
(மரகத மலர்)
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் அஹஹஹா
(அவளொரு)

அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
(அறுசுவை)
ஊடல் அவளது வாடிக்கை
(ஊடல்)
என்னைத் தந்தேன் காணிக்கை அஹஹஹா
(அவளொரு)

 பாடும் போது நான் தென்றல் காற்று....


படம்: நேற்று இன்று நாளை
இசை: Ms விஸ்வநாதன்
பாடியவர்: Sp பாலசுப்ரமணியம்

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று

மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று

ஆஆஆ ஓஓஓ ஆஹா ஓஓ

எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்

யாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று

 

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ....


படம் -
 தியாகம்
இசை : இளையராஜா
பாடியவர் - t.m.சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்

நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா
 

 

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி....


திரைப்படம்:
 பாக்யலக்ஷ்மி
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?
காண்பது ஏன் தோழி? ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி - அவர்
மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி?
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம் ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
 

 

ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே.....


படம்: முதலாளி
இயற்றியவர்: கவிஞர் கா.மு. ஷெரிஃப்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்ததரராஜன்


ஏரிக் கரையின் மேலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே
ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே

தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போல போற பெண்ணே
ஏஏஏ..ஏ.. ஏஏஏஏ.. ஏஏ.. ஏஏஏஏஏஏஏ... ஏஏஏ....
தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போல போற பெண்ணே
சிட்டுப் போல போற பெண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போவோம் கண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போவோம் கண்ணே

அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே

மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே
மச்சான் வரும் வேளையிலே
மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே
கோவம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண்மயிலே
கோவம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண்மயிலே

அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
 

 

நடிகனின் காதலி நாடகம் ஏனடி.....


SONG: nadiganin kaadhali
FILM : thaayillaamal naanillai
SINGER : SPB
MD : Shankar Ganesh
LYRICS : Kannadasan


கண்ணே நான் பாட கற்சிலையும் எழுந்தாடும்
காதல் இளவரசன் கலைத்திறனை நீ அறியாய்
உன்னை பாட்டாலே உருக வைக்கும் இளைஞனடி
என்னிடம் நாடகமா...நானே நடிகனடி

நடிகனின் காதலி நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
நடிகனின் காதலி நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
சிங்காரப் பைங்கிளி செந்தூரப் பூங்கொடி
சங்கீதம் கேளடி சதிராட்டம் போடடி
நடிகனின் காதலின் நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி

ஒரு கனியைக் கண்டாலே கிளி கொத்திச் செல்லாதோ
கொழு கொம்பை கண்டாலே கொடி சுற்றிக் கொள்ளாதோ
ஒரு கனியைக் கண்டாலே கிளி கொத்திச் செல்லாதோ
கொழு கொம்பைக் கண்டாலே கொடி சுற்றிக் கொள்ளாதோ
ஹேஹே...மன்மதன் மந்திரம் என்னிடம் உள்ளது
சொன்னதும் உன் மனம் என் சொந்தம் ஆகாதோ
மன்மதன் மந்திரம் என்னிடம் உள்ளது
சொன்னதும் உன் மனம் என் சொந்தம் ஆகாதோ
ஒரு மயக்கம் வரவழைக்கும் இளம் குமரன் நானம்மா

நடிகனின் காதலி நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
சிங்காரப் பைங்கிளி செந்தூரப் பூங்கொடி
சங்கீதம் கேளடி சதிராட்டம் போடடி
நடிகனின் காதலி நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி

பனி இதழின் முத்தங்கள் தரும் இனிமை சத்தங்கள்
நடு இரவின் ராகங்கள் அது இளமை தாகங்கள்
பனி இதழின் முத்தங்கள் தரும் இனிமை சத்தங்கள்
நடு இரவின் ராகங்கள் அது இளமை தாகங்கள்
பள்ளியில் துள்ளிடும் புள்ளிமான் உன்னை நான்
அள்ளுவேன் கிள்ளுவேன் என் ஆசை தீராதோ
பள்ளியில் துள்ளிடும் புள்ளிமான் உன்னை நான்
அள்ளுவேன் கிள்ளுவேன் என் ஆசை தீராதோ
உடல் முழுக்க சுகம் பிறக்க இது வேளைதானம்மா

நடிகனின் காதலி நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
சிங்காரப் பைங்கிளி செந்தூரப் பூங்கொடி
சங்கீதம் கேளடி சதிராட்டம் போடடி
நடிகனின் காதலி நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
 

 

பளிங்குனால் ஒரு மாளிகை

படம்: வல்லவன் ஒருவன்

இசை: வேதா
பாடியவர்: Lr ஈஸ்வரி
வரிகள்: கண்ணதாசன்


பளிங்குனால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா...
(பளிங்குனால்..)

இருப்பதோ ஒரு நாடக மேடை
இரவு நேரத்து மல்லிகை வாடை
(இருப்பதோ..)
திறப்பதோ ஒரு சிந்தனை கதவு
தேடி எடுத்தால் ஆனந்த உறவு
உறவு.. உறவு..
உறவு.. உறவு..
(பளிங்குனால்..)

நாளை வருவது யாருக்கு தெரியும்
நடந்து பார்த்தால் நாடகம் புரியும்
(நாளை..)
காலை பொழுது ஊருக்கு விடியும்
கன்னி நினைக்கும் காரியம் முடியும்
முடியும்.. முடியும்..
முடியும்.. முடியும்..
(பளிங்குனால்..)

 விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

படம்: புதையல்

இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: Cs ஜெயராமன், p சுசீலா

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடும் கொஞ்சும் கலை அழகே இசை அமுதே
இசை அமுதே..
(விண்ணோடும்..)
அலை பாயும் கடலோரம் இளமான்கள் போலே
அலை பாயும் கடலோரம் இளமான்கள் போலே
விளையாடி இசை பாடி
விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
(விண்ணோடும்..)

தேடாத செல்வ சுகம் தானாக வந்ததுப்போல்
ஓடோடி வந்த சொர்க போகமே
ஓடோடி வந்த சொர்க போகமே
காணாத இன்ப நிலை கண்டாடும் நெஞ்சினிலே
ஆனந்த போதை ஊற்றும் யோகமே வாழ்விலே
விளையாடி இசை பாடி
விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
(விண்ணோடும்..)

சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
மங்காத தங்கமிது மாறாத வைரமிது
ஒன்றாகி இன்ப கீதம் பாடுதே வாழ்விலே
விளையாடி இசை பாடி
விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
(விண்ணோடும்..)

 

பாடும் போது நான் தென்றல் காற்று


படம்:நேற்று இன்று நாளை
பாடியவர்:spb
இசை :மெல்லிசை மன்னர்

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று

மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று

ஆஆஆ ஓஓஓ ஆஹா ஓஓ

எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்

யாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது நான் தென்றல் காற்று
 

 தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து....


படம் :மீனவ நண்பன்.
பாடியவர்கள்: வாணிஜெயராமன்,யேசுதாஸ்

ஆண் : தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ...
நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ

தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ...
நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ

பெண் :தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவலோக மன்னவனும் நீயோ.....

தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவலோக மன்னவனும் நீயோ.....


சரணம் 1 :

பெண் :
| தா ; ; ; | ; , நீ தா க | தா ; ; ; | ; ; தா ஸா ரி

| ஸா ; ; நி நீ | ; , தா கா த | பா

ஆண் : .. ஓ....
முல்லை மலர்ச் செண்டுகள் கொண்டு கொடியாடுது
செண்டு சதிராடினால் அந்த இடைதாங்குமா

பெண் : இந்த இடைதாங்கவே கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர்மஞ்சம் அழைக்கின்றது
மலர்ந்து - கனிந்து - சிரித்து - குலுங்கும் - கனியாகவோ....

பின்னணி இசை2:

சரணம் 2 :

பெண் :எந்தன் மனக்கோயிலில் தெய்வம் உனைக் காண்கிறேன்
உந்தன் நிழல்போலவே வரும் வரம் கேட்கின்றேன்

ஆண் : இந்த மனராஜ்ஜியம் என்றும் உனக்காவே
சொந்த மகராணி நீ என்று நான் சொல்லுவேன்
நினைக்க.. இனிக்க... கொடுத்து ... மயங்கும்
முத்தாரமே...

பெண் : ஓ...ஓ...ஓ..ஓ

ஆண் : தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ...
நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ

வியாழன், 29 மே, 2025

முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே

 படம்: வாரணம் ஆயிரம்

பாடியவர்கள்: நரேஷ் ஐயர்,  பிரசாந்தினி

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: தாமரை

முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போதே என்னோடு வந்தாலென்ன‌
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன
இப்போதே என்னோடு வந்தாலென்ன‌
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன
(முன் தினம் பார்த்தேனே..)

காதலே.. சுவாசமே..

துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே

முகம் பார்த்துப் பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே

ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி

முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே..
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக

oh my love
உன்னை நான் பாராமல்
yes my love
எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே

கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சுத்தம் ஆகாதா ஈரத்திலே

தலை சாய்க்கத் தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே

பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரெங்கும் உதயம் கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே
(முன் தினம் பார்த்தேனே)

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...