ராஜா என்பார் மந்திரி என்பார்
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்வரிகள்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
திரைப்படம்: புவனா ஒரு கேள்விக்குறி
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும் (2)
(ராஜா என்பார் மந்திரி என்பார்)
கல்லுக்குள் ஈரமில்லை
நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கும் வெட்கமில்லை
அனுபவிக்க யோகமில்லை (2)
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒரு வழியில்லை
(ராஜா என்பார் மந்திரி என்பார்)
நிலவுக்கும் வானமுண்டு
மலருக்கும் வாசமுண்டு
கொடிக்கொரு கிளையுமுண்டு
எனக்கென்று என்னவுண்டு (2)
ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை
ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
ஒரு உறவுமுண்டு அதில் பரிவுமுண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்
தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம்தினம் பூஜைசெய்தேன்
நிலவுக்குக் களங்கமென்று
உறவுக்குள் விலகி நின்றேன் (2)
மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு
(ராஜா என்பேன் மந்திரி என்பேன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக