வெள்ளி, 23 மே, 2025

 ஆண் : ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து…

ஆயுள் ரேகை நீள செய்கிறதே…

பெண் : காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து…
செல்லமாக மிரட்டி செல்கிறதே…

ஆண் : உயிரே இதயம்…
பெண் : உனக்கே உனக்கே…

BGM

ஆண் : உன்னை போல் ஒரு பெண்ணின் அருகிலே…
மௌனம் கொல்வது கஷ்டம்…
நாம் பேசிகொள்ளாத நிமிஷம் எல்லாமே நஷ்டம்…

பெண் : சொற்கள் என்பதில் மிஞ்சும் மொத்தமும்…
மௌனம் என்பதில் உள்ளது உள்ளது…
மௌன மிஞ்சினால் பேசி விடுவதே நல்லது…

ஆண் : சூரியனை போலே என் முன்பு வந்தாய்…
பனி துளி போலே பணிந்துவிட்டேனே…

பெண் : உயிரே இதயம்…
ஆண் : உனக்கே உனக்கே…

ஆண் : கனவாய் இருந்தால்…
பெண் : எதிலே இருப்போம்…
ஆண் : நிஜமாய் இருந்தால்…
பெண் : இன்னும் கேட்போம்…

ஆண் : கனவாய் இருந்தால்…
எதிலே இருப்போம்…
நிஜமாய் இருந்தால்…
இன்னும் கேட்போம்…

பெண் : ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து…
ஆயுள் ரேகை நீள செய்கிறதே…

ஆண் : காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து…
செல்லமாக மிரட்டி செல்கிறதே…

BGM

ஆண் : உள்ளே போகிற சுவாசம் என்பது…
வெளியில் வருவது நியாயம் நியாயம்…
வெளி வரும் சுவாசம் வாசம் தருவதே மாயம்…

பெண் : கண்கள் காண்கிற கனவு என்பது…
கருப்பு வெள்ளையில் தோன்றும் தோன்றும்…
வண்ணமாக அது மாறிவிட்டதே மாயம்…

ஆண் : போதி மரம் போலே உந்தன் கண்கள் பார்க்க…
உந்தன் பார்வையாலே ஞானம் அடைந்தேனே…

பெண் : உயிரே இதயம்…
ஆண் : உனக்கே உனக்கே…

ஆண் & பெண் : ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து…
ஆயுள் ரேகை நீள செய்கிறதே…
காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து…
செல்லமாக மிரட்டி செல்கிறதே…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...