நம்ம ஊரு சிங்காரி
| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கண்ணதாசன் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | எம்.எஸ். விஸ்வநாதன் | நினைத்தாலே இனிக்கும் (1979) |
Namma Ooru Singari Song Lyrics in Tamil
ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
—BGM—
ஆண் : ஹாஹா… நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
ஹாஹாஹா ஹாங்…
ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா…
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா…
ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
ஹேஹே ஏஏஹே…
—BGM—
ஆண் : பாலாடை போலாடும் பாப்பா…
எப்போதும் நான் சொன்னா கேப்பா…
ராஜாவை பாக்காமல் ரோஜா…
ஏமாந்து போனாளே லேசா…
ஆண் : நான் நாளு வச்சு தேதி வச்சு…
ஊரு விட்டு ஊரு வந்து…
நீயின்றி போவேனோ சம்போ…
ஆண் : நான் மூணு மெத்தை வீடு கட்டி…
மாடி மேல ஒன்ன வச்சு…
பாக்காமல் போவேனோ சம்போ…
ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா…
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா…
ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
பபபபப பபபப…
—BGM—
ஆண் : அன்பான உன் பேச்சு ராகம்…
நடை போட்டு நீ வந்தா தாளம்…
சுகமான உன் மேனி பாடல்…
இதிலென்ன இனிமேலும் ஊடல்…
ஆண் : அந்த தேவதைக்கு நீயும் சொந்தம்…
தேவனுக்கு நானும் சொந்தம்…
பூலோகம் தாங்காது வாம்மா…
ஆண் : இந்த காதலுக்கு ஈடு சொல்ல…
காவியத்தில் யாருமில்லை…
நானொன்று நீயொன்றுதாம்மா…
ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா…
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா…
ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
ராப்பா பாப்பா பாப்பா…
—BGM—
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக