வெள்ளை புறா ஒன்று
| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகி | இளையராஜா | புதுக்கவிதை |
Vellai Pura Ondru Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே…
பெண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே…
ஆண் : நமது கதை புது கவிதை…
இலக்கணங்கள் இதற்கு இல்லை…
பெண் : நான் உந்தன் பூ மாலை… ஓஓஓ…
ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே…
—BGM—
பெண் : கங்கை வெள்ளம் பாயும் போது…
கரைகள் என்ன வேலியோ…
ஆண் : ஆவியோடு சேர்ந்த ஜோதி…
பாதை மாற கூடுமோ…
பெண் : மனங்களின் நிறம் பார்த்த காதல்…
முகங்களின் நிறம் பார்க்குமோ…
ஆண் : நீ கொண்டு வா காதல் வரம்…
பெண் : பூ தூவுமே பன்னீர் மரம்…
ஆண் : சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட…
பெண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே… ஆஆஆஆ…
—BGM—
ஆண் : பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம்…
காவல் தன்னை மீறுமே…
பெண் : காலம் மாறும் என்ற போதும்…
காதல் நதி ஊறுமே…
ஆண் : வரையரைகளை மாற்றும் போது…
தலைமுறைகளும் மாறுமே…
பெண் : என்றும் உந்தன் நெஞ்சோரமே…
ஆண் : அன்பே உந்தன் சஞ்சாரமே…
பெண் : கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக…
ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே…
பெண் : நமது கதை புது கவிதை…
ஆண் : இலக்கணங்கள் இதற்கு இல்லை…
பெண் : நான் உந்தன் பூ மாலை… ஓஓஓஓ…
ஆண் & பெண் : லாலா லலலலா லாலா லாலா லலலலா…
லாலா லலலலா லாலா லாலா லலலலா…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக