வியாழன், 31 ஜூலை, 2025

 

வெண்மேகம் பெண்ணாக

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன்யுவன் ஷங்கர் ராஜாயாரடி நீ மோகினி

Venmegam Pennaga Song Lyrics in Tamil


ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
லலல லலலலா…

ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ…
உன்னாலே பல ஞாபகம்…
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

ஆண் : வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன…
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன…
உன்னாலே பல ஞாபகம்…
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ…

BGM

ஆண் : மஞ்சள் வெயில் நீ…
மின்னல் ஒளி நீ…
உன்னைக் கண்டவரை கண் கலங்க…
நிற்க வைக்கும் தீ…

ஆண் : பெண்ணே என்னடி உண்மை சொல்லடி…
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி…
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்…
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்…
ஒன்றா இரண்டா உன் அழகை பாட…

ஆண் : கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்…
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்…
உன்னாலே பல ஞாபகம்…
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

BGM

ஆண் : எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்…
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்…
விழி அசைவில் வலை விரித்தாய்…
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல…
கட்டளைகள் விதித்தாய்…

ஆண் : உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க…
உயிருடன் வாழ்கிறேன் நானடி…
என் காதலும் என்னாகுமோ…
உன் பாதத்தில் மண்ணாகுமோ…

BGM

ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ…

திங்கள், 28 ஜூலை, 2025

 

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ (பெண்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிசங்கர்சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்சூர்யவம்சம்

Rosappu Chinna Rosappu Song Lyrics in Tamil


ரோசப்பூ சின்ன ரோசாப்பூஉம்பேரச் சொல்லும் ரோசாப்பூரோசப்பூ சின்ன ரோசாப்பூஉம்பேரச் சொல்லும் ரோசாப்பூகாத்தில் ஆடும் தனியாகஎன் பாட்டு மட்டும் துணையாககாத்தில் ஆடும் தனியாகஎன் பாட்டு மட்டும் துணையாகரோசப்பூ சின்ன ரோசாப்பூஉம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
மனசெல்லாம் பந்தலிட்டுமல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்உசுருக்குள் கோயில் கட்டிஒன்னக் கொலுவெச்சிக் கொண்டாடினேன்மழ பெஞ்சா தானே மண்வாசம்ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்பாத மேல பூத்திருப்பேன்கையில் ரேக போல சேர்ந்திருப்பேன்
ரோசப்பூ சின்ன ரோசாப்பூஉம்பேரச் சொல்லும் ரோசாப்பூகாத்தில் ஆடும் தனியாகஎன் பாட்டு மட்டும் துணையாக
கண்ணாடி பார்க்கயிலஅங்க முன்னாடி ஒம் முகந்தான்கண்ணே நீ போகயிலகொஞ்சும் கொலுசாக என் மனந்தான்நெழலுக்கும் நெத்தி சுருங்காமஒரு குடையாக மாறட்டுமாமலமேல் வௌக்கா ஏத்திவெப்பேன்உன்னப் படம்போல் மனசில் மாட்டிவெப்பேன்
ரோசப்பூ சின்ன ரோசாப்பூஉம்பேரச் சொல்லும் ரோசாப்பூரோசப்பூ சின்ன ரோசாப்பூஉம்பேரச் சொல்லும் ரோசாப்பூகாத்தில் ஆடும் தனியாகஎன் பாட்டு மட்டும் துணையாகரோசப்பூ சின்ன ரோசாப்பூஉம்பேரச் சொல்லும் ரோசாப்பூகாத்தில் ஆடும் தனியாகஎன் பாட்டு மட்டும் துணையாக

 

என்னவளே அடி என்னவளே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன்ஏ. ஆர். ரகுமான்காதலன்

Ennavale Adi Ennavale Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…
எந்த இடம் அது தொலைந்த இடம்…
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்…
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று…
உந்தன் காலடி தேடி வந்தேன்…

ஆண் : காதலென்றால் பெரும் அவஸ்தையென்று…
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்…
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து…
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்…

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…

BGM

ஆண் : வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்…
இன்று வசப்படவில்லையடி…
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா…
ஒரு உருண்டையும் உருலுதடி…

ஆண் : காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்…
ஒரு நிமிஷமும் வருஷமடி…
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்…
ஒரு கலக்கமும் தோன்றுதடி…

ஆண் : இது சொர்க்கமா நரகமா…
சொல்லடி உள்ளபடி…
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்…
உன் வார்த்தையில் உள்ளதடி…

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…

BGM

ஆண் : கோகிலமே நீ குரல் கொடுத்தால்…
உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன்…
கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு…
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்…

ஆண் : வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க…
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்…
வருடவரும் பூங்காற்றையெல்லாம்…
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்…

ஆண் : என் காதலின் தேவையை…
காதுக்குள் ஓதிவைப்பேன்…
உன் காலடி எழுதிய கோலங்கள்…
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்…

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…
எந்த இடம் அது தொலைந்த இடம்…
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்…
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று…
உந்தன் காலடி தேடி வந்தேன்…

ஆண் : காதலென்றால் பெரும் அவஸ்தையென்று…
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்…
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து…
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்…

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…


 

தூதுவளை இலை அரைச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஎஸ். ஜானகி & மனோதேவாதாய் மனசு

Thoothuvalai Ilai Arachi Song Lyrics in Tamil


பெண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
மாமன்கிட்ட பேச போறேன்…
மணிக்கணக்கா…

BGM

பெண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
மாமன்கிட்ட பேச போறேன்…
மணிக்கணக்கா…

பெண் : தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…

பெண் : அந்த இந்திரன் சந்திரனும்…
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்…
அந்த ரம்பையும் ஊர்வசியும்…
மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்…
நான் காத்தாகி ஊத்தாகி…
மாமன தழுவி கட்டிக்கணும்…

ஆண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
நானும் கூட பேச போறேன்…
மணிக்கணக்கா…

ஆண் : தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…

BGM

ஆண் : நாள் தோறும் காத்திருந்தேன்…
நானே தவமிருந்தேன்…
உனக்காகதான்…
கண்ணே உனக்காகதான்…

பெண்: நான் கூட மனசுக்குள்ள…
ஆசை வளத்துகிட்டேன்…
உன்னை பார்க்கத்தான்…
மாமா உன்னை பார்க்கத்தான்…

ஆண் : அட முத்துன கிறுக்கு மொத்தமும்…
தெளிய முறையிடலமோ…

பெண் : சுத்துற கண்ணுல சிக்குன…
என்னை சிறையிடலாமோ…

ஆண் : எத்தனை நாள்…
இப்படி நான் ஏங்கிறது…

பெண் : பொட்டு வைச்சு…
பூ முடிக்கும் நாளிருக்கு…

பெண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையில தான் நனைச்சி…
மாமன் கிட்ட பேச போறேன்…
மணிக்கணக்கா…

ஆண் : தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…

BGM

ஆண் : ஊர் தூங்கும் வேலையிலும்…
நான் தூங்க போனதில்லை…
உன்னாலதான்…
கண்ணே உன்னாலதான்…

பெண் : யார் பேச்சு கேட்டாலும்…
என் காதில் கேட்பதெல்லாம்…
உன் பேருதான்…
நித்தம் உன் பேருதான்…

ஆண் : இத்தனை நனப்பு என் மேலே…
இருந்தும் எட்டி போகலாமோ…

பெண் : கட்டுப்பாடு இருந்தும் கட்டிக்கும்…
முன்னே முட்டிகொள்ளலாமோ…

ஆண் : முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும்…

பெண் : சத்தமிட்டால் உன் நிலமை என்னாகும்…

பெண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
மாமன் கிட்ட பேச போறேன்…
மணிக்கணக்கா…

ஆண் : தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…

பெண் : அந்த இந்திரன் சந்திரனும்…
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்…

ஆண் : அந்த ரம்பையும் ஊர்வசியும்
மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்…

பெண் : நான் காத்தாகி ஊத்தாகி…
மாமனே தழுவி கட்டிக்கணும்…

ஆண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா…

பெண் : தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…

 

உசிலம்பட்டி பெண்குட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷாகுல் ஹமீது & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்ஜென்டில்மேன்

Usilampatti Penkutti Song Lyrics in Tamil


BGM

ஆண் : உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு…
உன் ஒசரம் பாத்து என் கழுத்து சுளுக்கி போச்சு…

BGM

ஆண் : உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு…
உன் ஒசரம் பாத்து என் கழுத்து சுளுக்கி போச்சு…

ஆண் : கூட மேல கூட வச்சு…
குச்சனூரு போறவளே…
மெதுவாக செல்லேன்டி…

ஆண் : உன் கூடையில வெச்ச பூவு…
கூடலூரில் வீசு தடி…
குறி போட்டு வந்தேன்டி

குழு : உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு…
உன் ஒசரம் பாத்து என் கழுத்து சுளுக்கி போச்சு…

BGM

குழு : உசுல உசுல உசிலம்பட்டி…
உசுல உசுல உசிலம்பட்டி…

BGM

ஆண் : கண்டமனூரு மைதாரேன்…
கண்ணுல வச்சா ஆகாதா…

பெண் : மைய வைக்கும் சாக்க வச்சு…
கைய வைப்ப தெரியாதா…

ஆண் : அலங்கா நல்லூர் ஜல்லிக் கட்டு…
சேர்ந்து போனால் ஆகாதா…

பெண் : மாடு புடிச்சி முடிச்ச கையில்…
மயில புடிப்ப தெரியாதா…

ஆண் : மயிலே மயிலே…
குழு : இறகொன்னு போடு…
பெண் : வானம் விழுந்தா…
குழு : அதுவும் போடும்…

ஆண் : இறகு எதுக்கடி தோகையே கிடைக்கும்…
அதுக்கும் காலம் வரும்…

பெண் : உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு…
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே நான் புள்ள தாச்சி…
உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு…
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே நான் புள்ள தாச்சி…

பெண் : கூட மேல கூட வச்சு…
குச்சனூரு போறவள…
துருவி தான் கேட்காதே…

பெண் : கூடையில வச்ச பூவு…
கூடலூரில் வீசுதுன்னு…
உருவி தான் பாக்காதே…

BGM

ஆண் : வெடலப் பொண்ணு நுனி நாக்கு…
வெத்தலையாலே செவந்திருக்கு…

பெண் : வேப்ப மரத்து கிளி மூக்கு…
வெத்தல போட்டா செவந்திருக்கு…

ஆண் : இடுப்பு சேல இடை வெளியில்…
எனக்கு மட்டும் இடமிருக்கு…

பெண் : ஆச பட்ட மாமனுக்கு…
ஆண்டிப் பட்டி மடமிருக்கு…

ஆண் : தணியும் தணியும்…
குழு : தானா தணியும்…
பெண் : தடியால் அடிச்சா…
குழு : கொடியா மலரும்…

ஆண் : மனச சேலைக்குள் மறைப்பது ஒளிப்பது…
அதுதான் பெண்ணின் குணம்…

ஆண் : உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு…
உன் ஒசரம் பாத்து என் கழுத்து சுளுக்கி போச்சு…

பெண் : உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு…
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே நான் புள்ள தாச்சி…

பெண் : கூட மேல கூட வச்சு…
குச்சனூரு போறவள…
துருவி தான் கேட்காதே…

பெண் : கூடையில வச்ச பூவு…
கூடலூரில் வீசுதுன்னு…
உருவி தான் பாக்காதே…

BGM

குழு : உசுல உசுல உசிலம்பட்டி…
உசுல உசுல உசுல பட்டி…
உசிலம்பட்டி ஆண்டி பட்டி ஆண்டி பட்டி…
உசுல உசுல உசிலம்பட்டி…
உசிலம்பட்டி காளி பட்டி…
உசுல உசுல ஆண்டி பட்டி…
உசிலம்பட்டி…

 

ஒட்டகத்த கட்டிக்கோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஏ.ஆர்.ரகுமான்ஜென்டில்மேன்

Ottagatha Kattikko Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ…
கெட்டியாக ஒட்டிக்கோ…
வட்ட வட்ட பொட்டுக்காரி…

பெண் : ஒத்துழைக்க ஒத்துக்கோ…
பத்த வச்சா பத்திக்கோ…
வாய் வெடிச்ச மொட்டுக்காரி…

பெண் : விடவேண்டும் அச்சத்தை…
தொடவேண்டும் உச்சத்தை…
அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை…

பெண் : விடவேண்டும் அச்சத்தை…
தொடவேண்டும் உச்சத்தை…
அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை…

பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ…
கெட்டியாக ஒட்டிக்கோ…
வட்ட வட்ட பொட்டுக்காரி…

பெண் : ஒத்துழைக்க ஒத்துக்கோ…
பத்த வச்சா பத்திக்கோ…
வாய் வெடிச்ச மொட்டுக்காரி…

BGM

ஆண் : கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது…
பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது…

BGM

ஆண் : கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது…
பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது…

ஆண் : உள்ளங்கை தேனே கள்வன் நான்தானே…
கள்வனை கொள்ளை கொண்ட கள்ளி நீதானே…
பொன் கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை…
அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை…

ஆண் : ஒட்டகத்த கட்டிக்கோ…
கெட்டியாக ஒட்டிக்கோ…
வட்ட வட்ட பொட்டுக்காரி…

ஆண் : ஒத்துழைக்க ஒத்துக்கோ…
பத்த வச்சா பத்திக்கோ…
வாய் வெடிச்ச மொட்டுக்காரி…

ஆண் : விடவேண்டும் அச்சத்தை…
தொடவேண்டும் உச்சத்தை…
அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை…

ஆண் : ஒட்டகத்த கட்டிக்கோ…
கெட்டியாக ஒட்டிக்கோ…
வட்ட வட்ட பொட்டுக்காரி…

ஆண் : ஒத்துழைக்க ஒத்துக்கோ…
பத்த வச்சா பத்திக்கோ…
வாய் வெடிச்ச மொட்டுக்காரி…

BGM

பெண் : உடைவாளில் நீ எந்தன் உடைதொட்ட அந்நேரம்…
உன் பார்வை எந்தன் உயிர் தொட்டா தருவாயோ…
கோழைக்கு வாழ்க்கை பட்டால் வாழ்வே என்னாகும்…
உன் வாலுக்கு வாழ்க்கைப் பட்டால் வாழ்வே பொன்னாகும்…

பெண் : நீ என்னை மீண்டும் திருடத்தான் வேண்டும்…
முரட்டுக் கைகள் தொட்டு மொட்டுக்கள் பூக்கவேண்டும்…

பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ…
கெட்டியாக ஒட்டிக்கோ…
வட்ட வட்ட பொட்டுக்காரி…

பெண் : ஒத்துழைக்க ஒத்துக்கோ…
பத்த வச்சா பத்திக்கோ…
வாய் வெடிச்ச மொட்டுக்காரி…

ஆண் & பெண் : விடவேண்டும் அச்சத்தை…
தொடவேண்டும் உச்சத்தை…
அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை…

ஆண் & பெண் : விடவேண்டும் அச்சத்தை…
தொடவேண்டும் உச்சத்தை…
அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை…

ஆண் & பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ…
கெட்டியாக ஒட்டிக்கோ…
வட்ட வட்ட பொட்டுக்காரி…

ஆண் & பெண் : ஒத்துழைக்க ஒத்துக்கோ…
பத்த வச்சா பத்திக்கோ…
வாய் வெடிச்ச மொட்டுக்காரி…

 

புது வெள்ளை மழை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன் & சுஜாதா மோகன்ஏ. ஆர். ரகுமான்ரோஜா

Pudhu Vellai Mazhai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது…
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது…
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…

பெண் : நதியே… நீயானால் கரை நானே…
சிறுபறவை… நீயானால் உன் வானம் நானே…

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…

பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…

—BGM—

ஆண் : பெண் இல்லாத ஊரிலே…
அடி ஆண் பூ கேட்பதில்லை…

பெண் : பெண் இல்லாத ஊரிலே…
கொடிதான் பூப்பூப்பதில்லை…

ஆண் : உன் புடவை முந்தானை சாய்ந்ததில்…
இந்த பூமி பூப்பூத்தது…

பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை…
உந்தன் காதோடு யார் சொன்னது…

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…

பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…

ஆண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது…

பெண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…

பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…

—BGM—

பெண் : நீ அணைக்கின்ற வேளையில்…
உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்…

ஆண் : நீ வெடுக்கென்று ஓடினால்…
உயிர்ப்பூ சருகாக உலரும்…

பெண் : இரு கைகள் தீண்டாத பெண்மையை…
உன் கண்கள் பந்தாடுதோ…

ஆண் : மலா் மஞ்சம் சேராத பெண்ணிலா…
எந்தன் மார்போடு வந்தாடுதோ…

பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…

ஆண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…

பெண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது…

ஆண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…

பெண் : நதியே… நீயானால் கரை நானே…
சிறுபறவை… நீயானால் உன் வானம் நானே…

ஆண் : புது வெள்ளை மழை…

பெண் : இங்கு பொழிகின்றது…

ஆண் : இந்தக் கொள்ளை நிலா…

பெண் : உடல் நனைகின்றது…

ஆண் : புது வெள்ளை மழை…

பெண் : இங்கு பொழிகின்றது…

ஆண் : இந்தக் கொள்ளை நிலா…

பெண் : உடல் நனைகின்றது…

 

என் காதலே (ஆண்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்ஏ.ஆர்.ரகுமான்டூயட்

En Kadhale (Male) Song Lyrics in Tamil



ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…

BGM

ஆண் : சிலுவைகள் சிறகுகள்…
ரெண்டில் என்ன தர போகிறாய்…

BGM

ஆண் : கிள்ளுவதை கிள்ளி விட்டு…
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்…

ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…

BGM

ஆண் : காதலே நீ பூ எறிந்தால்…
எந்த மலையும் கொஞ்சம் குழையும்…
காதலே நீ கல் எறிந்தால்…
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்…

ஆண் : இனி மீள்வதா… ஆஅ…
இல்லை வீழ்வதா…
உயிர் வாழ்வதா… ஆஅ…
இல்லை போவதா…
அமுதென்பதா விஷம் என்பதா…
உன்னை அமுதவிஷமென்பதா…

BGM

ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…

BGM

ஆண் : காதலே உன் காலடியில்…
நான் விழுந்து விழுந்து தொழுதேன்…
கண்களை நீ மூடிக்கொண்டால்…
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்…

ஆண் : இது மாற்றமா… ஆஅ…
தடுமாற்றமா…
என் நெஞ்சிலே… ஏ…
பனி மூட்டமா…
நீ தோழியா இல்லை எதிரியா…
என்று தினமும் போராட்டமா…

ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…

ஆண் : சிலுவைகள் சிறகுகள்…
ரெண்டில் என்ன தர போகிறாய்…
கிள்ளுவதை கிள்ளிவிட்டு…

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் அ அக்கம்பக்கம் பார்த்துப் பேசு. அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான். அகத்தின் அழகு முகத்தில் தெ...