புதன், 2 ஜூலை, 2025

 

கண்மணியே பேசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகாக்கிசட்டை (1985)

Kanmaniyae Pesu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…
கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

ஆண் : கன்னங்கள் புது ரோசாப்பூ…
உன் கண்கள் இரு ஊதாப்பூ…
இது பூவில் பூத்த பூவையோ…

ஆண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

BGM

ஆண் : அந்தப்புறம் இந்தப்புறமோ விழி மையிட்டு…
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு…
அந்தப்புறம் இந்தப்புறமோ விழி மையிட்டு…
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு…

பெண் : ஆயிரம் பொன் பூக்கும்…
எந்தன் தேகம் எங்குமே…
அங்குலம் விடாமல்…
இன்ப கங்கை பொங்குமே…

ஆண் : தோளிலும் என் மார்பிலும்…
கொஞ்சிடும் என் அஞ்சுகம்…
நான் நீ எது… ஹோய் ஹோய்…

பெண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

பெண் : கன்னங்கள் புது ரோசாப்பூ…
என் கண்கள் இரு ஊதாப்பூ…
இது பூவில் பூத்த பூவையே…

பெண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

BGM

பெண் : உன்னைக் கொடு என்னைத் தருவேன்…
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன்…
விழி மூடாமல்…

பெண் : உன்னைக் கொடு என்னைத் தருவேன்…
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன்…
விழி மூடாமல்…

ஆண் : கண்களால் என் தேகம் எங்கும்…
காயம் செய்கிறாய்…
கைகளால் என் பாதம் நீவி…
ஆறச் செய்கிறாய்…

பெண் : வானகம் இவ்வையகம்…
யாவுமே என் கையகம்…
நீதான் தந்தாய்… ஹோ ஹோ…

ஆண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

பெண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

ஆண் : கன்னங்கள் புது ரோசாப்பூ…
உன் கண்கள் இரு ஊதாப்பூ…

பெண் : இது பூவில் பூத்த பூவையே…
கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...