புதன், 2 ஜூலை, 2025

 

மதுர மரிக்கொழுந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாஎங்க ஊரு பாட்டுக்காரன்

Madura Marikkozhunthu Song Lyrics in Tamil


குழு : பச்சரிசி மாவிடிச்சு…
மாவிடிச்சு மாவிடிச்சு…
சர்க்கரையில் பாகு வச்சு…
பாகு வச்சு பாகு வச்சு…

குழு : சுக்கிடுச்சு மிளகிடுச்சு…
மிளகிடுச்சு மிளகிடுச்சு…
பக்குவமா கலந்து வச்சு…
கலந்து வெச்சு கலந்து வெச்சு…

குழு : அம்மனுக்கு மாவிளக்கு…
எடுத்து வந்தோம் எடுத்து வந்தோம்…
அம்மனவ எங்களையும் காக்க வேணும்…
காக்க வேணும் தாயி…

BGM

ஆண் : மதுர மரிக்கொழுந்து வாசம்…
என் ராசாத்தி உன்னுடைய நேசம்…
மதுர மரிக்கொழுந்து வாசம்…
என் ராசாத்தி உன்னுடைய நேசம்…

ஆண் : மானோட பார்வை மீனோட சேரும்…
மானோட பார்வை மீனோட சேரும்…
மாறாம என்னைத் தொட்டுப் பேசும்…
இது மறையாத என்னுடைய பாசம்…

ஆண் : மதுர மரிக்கொழுந்து வாசம்…
என் ராசாத்தி உன்னுடைய நேசம்…

BGM

ஆண் : பொட்டுன்னா பொட்டு வச்சு…
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு…
பட்டுனு சேலையைக் கட்டி…
எட்டு வச்சு நடந்துகிட்டு…

ஆண் : பொட்டுன்னா பொட்டு வச்சு…
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு…
பட்டுனு சேலையைக் கட்டி…
எட்டு வச்சு நடந்துகிட்டு…

ஆண் : கட்டுன்னா கட்டிப்புட்ட…
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட…
வெட்டும் இரு கண்ணை வச்சு…
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட…

பெண் : கட்டு அது உனக்கு மட்டும்தானா…
இந்த சிட்டும் கூட சிக்கியது ஏனா…
எப்போதோ விட்டக்குறை மாமா…
அது இரு உசுர கட்டுதய்யா தானா…

பெண் : இது இப்போது வாட்டுதுன்னு…
பாட்டு ஒன்ன அவுத்துவிடு…
மதுர…

ஆண் : மரிக்கொழுந்து வாசம்…
பெண் : என் ராசாவே உன்னுடைய நேசம்…

ஆண் : அடி மதுர மரிக்கொழுந்து வாசம்…
பெண் : என் ராசாவே உன்னுடைய நேசம்…

BGM

பெண் : மெட்டுன்னா மெட்டு கட்டி…
இட்டு கட்டி பாடிக்கிட்டு…
கட்டுனா ராகம் என்னும்…
மாலை ஒன்னை கட்டிப்புட்டு…

பெண் : மெட்டுன்னா மெட்டு கட்டி…
இட்டு கட்டி பாடிக்கிட்டு…
கட்டுனா ராகம் என்னும்…
மாலை ஒன்னை கட்டிப்புட்டு…

பெண் : சுத்துனா சுத்தி அத…
என் கழுத்தில் போட்டுப்புட்ட…
ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட…
தாலி கட்ட மறந்துப்புட்ட…

ஆண் : நீதானே என்னுடைய ராகம்…
என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்…
ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்…
உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்…

ஆண் : என் மனசேனோ கிறங்குதடி…
சிறகடிச்சுப் பறக்குதடி…
மதுர…

பெண் : மரிக்கொழுந்து வாசம்…
ஆண் : என் ராசாத்தி உன்னுடைய நேசம்…

பெண் : மானோட பார்வை மீனோட சேரும்…
ஆண் : மானோட பார்வை மீனோட சேரும்…

பெண் : மாறாம என்னைத் தொட்டுப் பேசும்…
ஆண் : இது மறையாத என்னுடைய பாசம்…

பெண் : மதுர மரிக்கொழுந்து வாசம்…
ஆண் : என் ராசாத்தி உன்னுடைய நேசம்…

ஆண் : மதுர மரிக்கொழுந்து வாசம்…
பெண் : என் ராசாவே உன்னுடைய நேசம்…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...